ஆப்ரேஷன் பண்ணியாவது குழந்தையை வெளியில் எடுங்கய்யா.. கயல் சீரியலால் நொந்து போன ஆடியன்ஸ்

சன் டிவியில் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் இப்போது இந்த சீரியல் எப்படா முடியும் என அவர்கள் கதறி வருகின்றனர்.

அந்த அளவுக்கு சீரியலை சுவாரஸ்யமாக கொண்டு போகிறேன் என இயக்குனர் ரசிகர்களை கதற கதற அழ வைத்து வருகிறார். இவர்கள் யாரும் கதையைப் பார்த்து வேதனைப்பட்டு அழவில்லை.

வருடகணக்காக கயலின் தங்கை தேவி கர்ப்பமாக இருப்பதைப் போல் காட்டி வருகிறார்கள். ஆனால் இன்னும் அவருக்கு குழந்தை பிறந்த பாடு இல்லை. நியாயத்திற்கு நிஜத்தில் கர்ப்பமாகி இருந்தாலே இந்நேரம் குழந்தை ஸ்கூலுக்கு போய் இருக்கும்.

ஆனால் சீரியலில் தேவிக்கு மட்டும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் கடுப்பாகும் ஆடியன்ஸ் ஆப்ரேஷன் பண்ணியாவது குழந்தையை வெளியில் எடுங்கப்பா என இயக்குனருக்கே ஐடியா கொடுத்து வருகின்றனர்.

ஆனால் இதிலும் ஒரு பெரும் நிம்மதியை கிடைத்திருக்கிறது. என்னவென்றால் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஒரு வழியாக கயலுக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்த திருமணத்தை நடத்துவதற்கும் இயக்குனர் சில மாதங்களை எடுத்துக் கொண்டார்.

ஆனால் எப்படியோ கல்யாணம் நடந்துடுச்சு. இப்பதான் எங்க மனசுல இருக்குற பாரமே குறைஞ்சிருக்கு என ரசிகர்கள் ஆசுவாசப்பட்டு கொண்டிருக்கின்றனர். அப்படியே தேவிக்கும் குழந்தை பிறந்து விட்டால் சீரியலுக்கு சுபம் போட்டு முடித்து விடலாம்.