அண்ணாமலையை தூக்கிய போலீஸ்.. ஹனிமூன் போன ரவி – ஸ்ருதி.! சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode october 19
Siragadikka Aasai today episode october 19

Siragadikka Aasai today episode October 19 : இன்றைய எபிசோடில் ரவியும், ஸ்ருதியும் மாலையும் கழுத்துமாய் நிற்பதை பார்த்து மீனா ஷாக் ஆகி இப்படி திருட்டு கல்யாணம் பண்ண தான் என்ன பொய் சொல்லி கூட்டிட்டு வந்தியா ரவி, லவ் பண்ணா மட்டும் போதுமா அதை வீட்ல சொல்லி கல்யாணம் பண்ற அளவுக்கு உங்களுக்கு தைரியம் இல்ல..

இத பத்தி ஒரு தடவையாது மாமா கிட்ட நீ சொல்லி பேசி பார்த்தியா உங்க அம்மாவுக்கு உங்க அண்ணனை பிடிக்காது இருந்தாலும் நம்ம வீட்டு கௌரவத்துக்காக என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டாரு நாங்க சந்தோஷமா தான இருக்கோம். ஆனா உனக்கு அந்த அக்கறை இல்லை என்று ரவியை கண்ணா பின்னான்னு திட்டுகிறார்.

பிறகு சீதாவையும் என்ன நீ அக்கான்னு கூப்பிடாதே என்று திட்டுகிறார் அப்போது ஐயர் அங்கு வந்து சரி கல்யாணம் தான் பண்ணிட்டீங்க கையெழுத்து போடுங்க என்று கேட்க ரவியும் சுருதியும் கையெழுத்து போடுகின்றனர் பிறகு சாட்சி கையெழுத்து யார் போடுவார் என்று ஐயர் கேட்க ரவி மீனாவை போட சொல்கிறார்.

இதுக்கு தான் என்ன பொய் சொல்லி கூட்டிட்டு வந்தியா நான் போட முடியாது என மீனா சொல்ல ஐயர் மீனா கிட்ட நீ கையெழுத்து போட்டா சாமியோட அருள் இவர்களுக்கு கிடைக்கும் போடுமா என்று வற்புறுத்துவதால் மீனா சாட்சி கையெழுத்து போட்டு விட்டு வீட்டுக்கு வந்து மாமாவ சமாதானப்படுத்துங்க என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்புகிறார்.

ஆனால் ஸ்ருதி இப்ப நம்ம வீட்டுக்கு போன பிரச்சனை பெருசா ஆயிடும் எங்க அப்பா, அம்மா பிரிச்சு என்ன கூட்டிட்டு போய்டுவாங்க.. நம்ம ஒண்ணா சேர்ந்து வாழணும்னா ரெண்டு நாள் வேற எங்கேயாவது போய் தூரத்தில் இருக்கலாம் அப்புறம் வீட்டுக்கு வந்துக்கலாம் என்று சொல்லிவிட்டு காரில் புறப்படுகின்றனர்.

பிறகு கிப்ட் வாங்க போன விச்சு கோவிலுக்கு வந்து ஸ்ருதியை தேட கோவிலில் யாரும் இல்லாததால் வீட்டிற்கு போய் வாசுதேவன் மற்றும் சுதாவிடம் ஸ்ருதி வீட்டிற்கு வந்துவிட்டாளா என்று கேட்க அவர்கள் உங்க கூட தான் மாப்பிள்ளை ஸ்ருதி வந்தா எங்ககிட்ட வந்து கேக்குறீங்களே என்று சொல்ல கோவில்ல இருந்து என்கிட்ட சொல்லாம வந்துட்டா எங்க போனான்னு தெரியல என்று விச்சி சொல்கிறார்.

பிறகு வாசுதேவன் அவ டப்பிங் பேச ஸ்டூடியோக்கு போயிருப்பா நான் வந்ததும் பேச சொல்றேன் என்று விச்சுவை அனுப்பி வைத்துவிட்டார்.. உடனே வாசுதேவன் சுதாவும் ஸ்ருதி எங்க போயிருப்பா என்று தெரியாமல் அண்ணாமலை வீட்டுக்கு வந்து என் பொண்ண காணும் உன் பையன் ரவி தான் அழைச்சிட்டு போயிருப்பான் என்று சொல்ல அண்ணாமலை என் பையன் ரவி ரெஸ்டாரண்ட் போயிருக்கான்.

வேணும்னா அவனை இப்ப வர சொல்றேன் என்று ரவிக்கு போன் பண்ண ரவி போன் எடுக்கவில்லை பிறகு ஸ்விட்ச் ஆப் பண்ணி விட்டார்.. உடனே போலீசும் அண்ணாமலை வீட்டிற்கு வந்து வாசுதேவன் பொண்ண உங்க பையன் தான் கடத்திட்டார் என்று கேஸ் கொடுத்து இருக்காரு..

அதனால ஸ்டேஷனுக்கு வந்து ஒரு லெட்டர் எழுதி குடுத்துட்டு போங்க என்று கேட்க ரோகிணி இங்கே விசாரிங்க மாமா ஸ்டேஷனுக்கு எல்லாம் வரமாட்டாரு என்று சொல்கிறார்.. ஆனால் போலீஸ் அவங்க கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்காங்க வந்தே ஆகணும் என்று கூப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..