நடு ரோட்டில் முத்து, மீனாவை இறக்கி விட்டு காரை தூக்கிய பைனான்சியர் – பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode november 09
Siragadikka Aasai today episode november 09

Siragadikka Aasai today episode november 09 : இன்றைய எபிசோடில் ஊரில் இருந்து பாட்டி தல தீபாவளிக்கு முத்து மீனா, மனோஜ் ரோகினிக்கு பணம் அனுப்பி வைத்ததாக அண்ணாமலை கூறினார். பிறகு விஜயா மீனா பண்ண தப்புக்கு ரவி என்ன பண்ணுவான் அவனுக்கும் இதுதான் தல தீபாவளி ரவிய நம்ம வீட்டுக்கு கூப்பிடலாமா என்று கேட்க முத்து கோவப்பட்டு அவன் இந்த வீட்டுக்கு வரக்கூடாது ரவிக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அப்பாவை அவமானப்படுத்தின யாருமே இந்த வீட்ல இருக்க கூடாது என்று கோபப்படுகிறார்.

உடனே மனோஜ் ரவி நம்மள மாதிரி பெரிய இடத்துல பொண்ணு எடுத்திருக்கான் அதனால அவன் திரும்ப இந்த வீட்டுக்கு வந்தா நம்மளை மதிக்க மாட்டாங்க என்று நினைத்து ரவி இந்த வீட்டுக்கு வரவே கூடாது என்று சொல்கிறார்.. பிறகு இந்திரா விஜயா வீட்டிற்கு வந்து மாப்பிள்ளையும் மீனாவையும் தல தீபாவளிக்கு கூப்பிடலாம்னு வந்திருக்கேன் என பூ பழம் எல்லாம் தாம்பாளத்தில் வைத்து கொடுக்கிறார்.

மொத்த சொத்தையும் மாத்தி எழுதி ராகினி கையெழுத்து போடுவதற்கு முன்பு தடுத்த நிறுத்திய தமிழ்.! உண்மையை நிரூபிப்பாரா..

பிறகு முத்து எனக்கு நிறைய வேலை இருக்கு நான் வரல என்று சொல்ல அண்ணாமலை அதெல்லாம் முத்து வருவான், நான் அனுப்பி வைக்கிறேன் என்று இந்திராவிடம் சொல்கிறார் பிறகு இந்திரா ரோகினியை பார்த்து நீ தல தீபாவளிக்கு உங்க அப்பா வீட்டுக்கு போகலையா உங்க அப்பா மலேசியாவுல தானே இருக்காரு என்று கேட்க.. விஜயா வந்த வேலையை மட்டும் பாரு எதுக்கு ரோகிணி கிட்ட தேவையில்லாம கேட்குற என்று கேட்க..

இந்திரா மலேசியாவுக்கு போகலனா எங்க வீட்டுக்கு கூப்பிடலாம்னு தான் கேட்டேன் என சொல்கிறார்.. பிறகு  மனோஜ் நம்மலும் மலேசியாவுக்கு போகலாமா உங்க அப்பா கூப்பிடலனாலும் பரவாயில்ல, நான் வருவேன் என்று சொல்கிறார் ஆனால் ரோகிணி பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்.. அடுத்து முத்துவும், மீனாவும் இந்திரா வீட்டிற்கு காரில் போய்க்கொண்டிருக்கின்றனர்.

துரதிஷ்டவசமாக கமல் நடிக்க மறுத்து வேறொரு நடிகர் நடித்து கோடி கணக்கில் வசூல் செய்த 5 திரைப்படம்.!

போற வழியில் ஜவுளி கடையில் காரை நிறுத்தி முத்து மீனா கையில் அப்பா பணம் கொடுத்தாரு, போய் புடவை எடுத்துக்கோ என்று சொல்ல மீனா மாமா என்ன மட்டும் தனியாவா போக சொன்னாங்க நான் போன் பண்ணி நீங்க என் கூட வராம தனியா போக சொல்றீங்கன்னு சொல்லட்டா என்று மிரட்ட சரி நானும் வந்து தொலைகிறேன் வா என்று இரண்டு பேரும் கடை உள்ளே போகின்றன.

அங்கு ஜவுளி கடையில் வேலை பார்ப்பவர் ஒவ்வொரு புடவையாக மீனா மேல் எடுத்து வைத்து இது நல்லா இருக்கான்னு பாருங்க இது கட்னா நீங்க சினிமா ஹீரோயின் போல இருப்பீங்க என்று சொல்ல முத்து என்ன ஒவ்வொரு புடவையா வச்சு பார்க்கிறான் என்று கோபப்பட்டு மீனாவிடம் எவ்வளவு நேரம் புடவை பார்த்துட்டு இருப்ப, இந்த புடவை உனக்கு நல்லா தான் இருக்கும் இத எடுத்துட்டு வா என ஒரு புடவையை காண்பிக்கிறார் மீனாவும் அந்த புடவை வாங்கிக்கொண்டு அடுத்து முத்துவுக்கும் ஷர்ட் பேண்ட் எடுத்துக்கிட்டு மீண்டும் காரில் போகின்றனர்..

பிறகு பைனான்ஸ்யரின் அடியாட்கள் முத்து காரை மறித்து காருக்கு வட்டி காட்டாததால் அண்ணன் காரை தூக்கிட்டு வர சொன்னாரு என்று அவர்கள் சொல்ல முத்து என் பொண்டாட்டிய போய் வீட்ல விட்டுட்டு நானே வருவேன் என்று சொல்கிறார்.. அதெல்லாம் முடியாது நாங்க இப்ப கார் எடுத்துட்டு போயிடுறோம். நீ அப்புறம் வந்து பேசு என முத்து மீனாவை கீழே இறக்கி விட்டுட்டு காரை எடுத்துக் கொண்டு போய் விட்டனர்.. பிறகு முத்து இதெல்லாம் உன்னால தான் என மீனாவை நடு ரோட்டில் திட்டிக் கொண்டிருக்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.