பெத்த மகனையே ஆண்டி என கூப்பிட வைத்த ரோகினி.. க்ரிஷ் வீட்டிற்கு சென்ற மனோஜ், முத்து, மீனா அதிர்ச்சியில் ரோகினி..

Siragadikka Aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் வேலைக்கு போகாமல் வீட்டில் உள்ளவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் இந்த சமயத்தில் முத்து எதர்ச்சியாக மனோஜை பார்க்கில் உட்கார்ந்து விளையாண்டு கொண்டிருக்கும் பொழுது வீடியோ எடுத்து வீட்டில் உள்ள அனைவரிடமும் காட்டிவிடுகிறார் அதனால் ரோகிணி அழுது கொண்ட வீட்டை விட்டு செல்கிறார்.

வீட்டை விட்டு சென்ற ரோகிணி எங்கு சென்றார் என்று தெரியாமல் முத்து மீனா மனோஜ் மூவரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது மனோஜை முத்து ஒவ்வொரு வார்த்தையால் குத்தி கிழிக்கிறார். அது மட்டும் இல்லாமல் கடைசியாக ரோகிணி அவருடைய அம்மா வீட்டிற்கு சென்றுள்ளதை கண்டுபிடித்து விடுகிறார்கள்.

நீயே கருப்பா இருக்க ஆனா.. செவத்த பையன கல்யாணம் பண்ணிக்கிட்டு உன்னை பழி வாங்குவேன் சபதம் போட்ட விஜயகாந்த் காதலி..

அங்கு முத்து மீனா மனோஜ் மூவரும் போகிறார்கள் அப்பொழுது கிரிஷ் என்ற சிறுவனை பார்க்க அவர்தான் ரோகிணியின் மகன் ஆனால் இதுவரை யாருக்கும் தெரியாமல் அந்த ரகசியத்தை மூடி மறைத்துள்ளார் ரோகிணி. உங்கள் வீடு எங்கே இருக்கிறது என காட்ட சொல்கிறார் கிரீஷ் என்ற பையனிடம்  உடனே மனோஜ் முத்து மீனா மூவரும் அந்த வீட்டிற்கு செல்கிறார்கள்.

வீட்டிற்கு சென்ற மனோஜை வாய்க்கொளரி வாங்க மாப்பிள்ளை என கூப்பிட பார்த்தார் ரோகினியின் அம்மா ஆனால் திடீரென உஷாராகி வாங்க தம்பி என கூப்பிடுகிறார். இதற்கு முன்பே ரோகிணி மனோஜ் எனத் தேடிட்டு இங்கு வந்துட்டாங்க அவங்களுக்கு விஷயம் தெரியுமா தெரியாதா என்று தெரியவில்லை ஆனால் உன் வாயால எதையும் சொல்லிடாத என தன்னுடைய அம்மாவிடம் கூறிவிடுகிறார்.

அயலான் படத்தில் அதிக சம்பளம் வாங்கிய 8 நடிகர்கள்.. சம்பளமே வேண்டாம் என நடித்து கொடுத்த முன்னணி நடிகர்..

இந்த நிலையில் ரோகிணியின் அம்மா டீ குடிக்கிறீர்களா என கேட்க எதற்காக இங்கே வந்துள்ளீர்கள் என விசாரிக்கிறார் உடனே இவருடைய பொண்டாட்டி ஓடிட்டா அதனால்தான் தேடிட்டு வந்தோம் என கூறுகிறார் முத்து. ஆனால் இதற்கு முன்பு ரோகிணி மனோஜை நான் ரொம்ப நம்பினேன் அவன் என்னை ஏமாற்றி விட்டான் என புலம்பி கொண்டிருந்தார் அதற்கு அவருடைய அம்மா நீ மனோஜ் கிட்ட மிகப்பெரிய காரியத்தையே மறைச்சிருக்கு அது தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா.

தேவையில்லாம விஷயத்தை பெருசு படுத்தாமல் மனோஜ்டு போய் வாழுற வழியை பாரு என அவருக்கு அறிவுரை கூறுகிறார்.