இரண்டு லட்சம் பணத்தை மீனா முகத்தில் வீசிய ரோகினி.. விஜயாவை செவுலில் அறைந்தது போல் கேள்வி கேட்கும் சுருதி..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் வீட்டிற்கு வந்து அனைவரையும் கூப்பிடுகிறார் அப்பாவிடம் அம்மா எங்கே என கேட்க அண்ணாமலை நீங்க ரெண்டு பேரும் தானே சேர்ந்து கூட்டுச் சாதி பண்றீங்க என்ன கேட்டீங்கனா என கேட்க என்னப்பா இப்படி பேசுறீங்க என மனோஜ் பேசுகிறார் உடனே ரோகிணி அத்தை கிட்ட தான் மாமா பேச மாட்டார் இல்ல நீங்களே போய் கூப்பிடுங்க என விஜயாவை கூப்பிட சொல்கிறார்.

அடுத்ததாக மீனாவையும் முத்துவையும் ரோகிணி அழைக்கிறார் அது மட்டும் இல்லாமல் சுருதி ரவி எங்கே என கேட்க அவர்கள் இன்னும் வரவில்லை என கூறுகிறார்கள் உடனே ரோகிணி 2 லட்சம் பணத்தை கொடுத்து அண்ணாமலையிடம் கொடுக்க என்கிட்ட இருந்த நகையைவா திருடன என பதிலுக்கு கேட்கிறார் அடுத்ததாக மீனாவிடம் கொடு என கூற அமைதியாக நிற்கிறார் மனோஜ் உடனே விஜயா அந்த மீனாவுக்கு வக்காலத்து வாங்குவது முத்து தானா அவன் கிட்டயே குடு என கூறுகிறார் முத்துவிடம் கொடுக்க இரண்டு லட்சம் வேண்டாம் என முதலில் மறுக்கிறார்.

பணம் வேணும்னா அப்ப விட்ரு நான் எடுத்துட்டு போறேன் என மனோஜ் செல்ல ரெண்டு லட்சம் வேனாம் ஆனால் 4 லட்சமா வேணும் என கூறுகிறார். உடனே ரோகிணி இருவரும் இப்பொழுது இரண்டு லட்சத்தை வாங்கிக் கொள்ளுங்கள் மீதி 2 லட்சத்தை கண்டிப்பாக தந்து விடுகிறோம் என கூறுகிறார்கள். உடனே முத்து இரண்டு லட்சத்தை வாங்கிக் கொள்கிறார். இந்த பணத்தை எடுத்துக் கொண்ட பீரோவில் வைத்து பூட்டிவிட்டு சாவியை வைத்துக் கொள் இல்லை என்றால் இந்த பணத்தை கொடுப்பது போல் கொடுத்துட்டு திருடி விடுவான் இவன் என மனோஜை கிண்டல் அடிக்கிறார் முத்து.

பணத்தை தான் கொடுத்தாச்சு தேவையில்லாம இனிமே அப்படி பேசக்கூடாது என ரோகிணி சொல்ல 2 லட்சம் தானே கொடுத்து இருக்கீங்க இன்னும் 29 லட்சம் இருக்கு என முத்து பேசுகிறார் மாமா பணத்தை எப்படி கொடுக்கணும்னு எங்களுக்கு தெரியும் என பேச அப்ப பாக்கி இரண்டு லட்சம் எப்ப தருவீங்க எனவும் பேசுகிறார். அடுத்த காட்சியில் மீனா ரோகிணி ஸ்ருதி மூவரும் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது அத்தையை மாமாவிடம் பேச சொல்ல வேண்டுமென பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல் இரவு அண்ணாமலை வெளியே படுத்து தூங்க உடனே விஜயா எனக்கு உள்ளே புழுக்கமாக இருக்கிறது குளறுகிறது என ஏதேதோ சாக்கு சொல்லி அண்ணாமலையே உள்ளே படுக்க வைக்கிறார்கள். அதேபோல் ரோகிணி ஸ்ருதி மீனா மூவரும் இணைந்து விஜயாவிடம் பேச செல்கிறார்கள் அப்பொழுது அண்ணாமலையிடம் நீங்கள் பேச வேண்டும் அத்தை என அனைவரும் கூறுகிறார்கள்.

அவர் தான் என்கிட்ட பேச மாட்டாரு இந்த எஜமானிடம் தானே பேசுவார் என மீனா மீது பழியை போடுகிறார் அது மட்டும் இல்லாமல் அந்த சமயத்தில் எதற்கெடுத்தாலும் என் மீனவ சொல்றீங்க நகையை திருடுனது நீங்கதான உங்க மேல தான் தப்பு என சுருதி வார்த்தைக்கு வார்த்தை கேள்வி கேட்கிறார். ஒத்துக்க மாட்டேங்கறீங்க என்பது போல் கூறுகிறார்.

அதுமட்டுமில்லாமல் விஜயாவை பார்த்து மாமா உங்க கூட பேசணும்னா சிம்பிளா ஒரே ஒரு ஐடியா தான் அதை செஞ்சா போதும் என ஸ்ருதி கூற உடனே என்ன என அனைவரும் கேட்கிறார்கள் நீங்க மீனா விடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அதேபோல் ரோகிணியின் வீட்டுக்காரரும் மீனா விடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இதை கேட்டால் சரியாக விடும் எனக் கூற விஜயா நான் எதுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்குறார் உடனே நீ தான் சொல்லிக் கொடுத்து கூப்பிட்டு வந்தியா என மீனாவை பார்த்து பழி போடுகிறார்.

அதற்கு சுருதி கோபப்பட்டு நீங்க பண்ணின தப்புக்கு எதுக்கு மீனா மேல பழி போடுறீங்க நீங்க நகையை திருடாம இருந்திருக்கலாம்ல அப்படியே இருந்தாலும் உங்க நகையை கொடுக்க வேண்டி தான எதுக்கு மனோஜ்க்கு மீனா நகையை திருடி கொடுத்தீங்க என வார்த்தைக்கு வார்த்தை செவுளில் அறைந்தது போல் விஜய்யா பார்த்து கேட்கிறார். உங்க வீட்டுக்காரரால் தான் இவ்வளவு பெரிய தப்பு அதை யாருமே புரிஞ்சுக்கவில்லை அதற்காக மீனாவை திட்டுகிறீர்கள் என மீனாவுக்கு சப்போர்ட் பண்ணி சுருதி ரோகிணி மற்றும் விஜயாவை கிழித்து தொங்க விடுகிறார்.

மற்றொரு காட்சியில் முத்து செகண்ட்ஸ் கார் வாங்க தன்னுடைய நண்பனிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் மீனா மேலே வீடு கட்டுவது போல சபதம் போட்டதால் செகண்ட் கார் வாங்கி அதனை லீசுக்கு விட வேண்டும் எனவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இத்துடன் எபிசோட் முடிகிறது.