பிரச்சனை பணம் இல்ல அவ குணம் தான் அண்ணாமலை சொன்ன வார்த்தை.. இந்த வீட்டின் எஜமானி மீனாதான்…

சிறகடிக்க ஆசை சீரியலில் சமீபத்து எபிசோடில்  மனோஜ் நகையை திருடி வீட்டில் வசமாக மாட்டிக் கொண்டார் அது மட்டும் இல்லாமல் அண்ணாமலை விஜயாவிடம் இனிமேல் பேச மாட்டேன் என பிடிவாதமாக இருக்கிறார்.

அப்படி இருக்கும் நிலையில் விஜயா மீனா முகத்தில் நகையை கழட்டி வீசுகிறார் இதனை பார்த்த முத்து ஆவேசப்படுகிறார். அதுமட்டுமில்லாமல் ரோகிணி நாங்க தானே பணத்தை கொடுக்க வேண்டும் என நாலு லட்சத்து நாங்களே கொடுக்கிறோம் என வாக்குறுதி கொடுக்கிறார்.

மற்றொரு பக்கம் விஜயா அந்த மீனா முகத்தில் நகையை வீச வேண்டிதானே என ரோகிணி இடம் கேட்க நாங்களே பணத்தை கொடுத்துக் கொள்கிறோம் நீங்கள் இந்த நகையை போட்டுக் கொள்ளுங்கள் எனக்கு கூறுகிறார்கள். இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அப்பொழுது அண்ணாமலை இரும்பிக் கொண்டு இருக்க விஜயா தண்ணீரை எடுத்துக் கொண்டு கொடுக்கிறார்.

ஆனால் அண்ணாமலை அந்த தண்ணீரை வாங்காமல் தானே தண்ணீரை ஊற்றி குடிக்கிறார் அது மட்டும் இல்லாமல் ஹாலிலேயே அண்ணாமலை உக்காந்து கொண்டிருக்க எனக்கு உள்ளே ரொம்ப குளிருது நான் வெளியே படுத்து கொள்கிறேன் என விஜயா கூற அண்ணாமலை உள்ளே சென்று படுத்து கொள்கிறார். அதற்கு மீனா நீங்களும் உள்ளே போய் படுத்துக் கொள்ளுங்கள் அத்தை என கேட்க அவர்தான் நான் உள்ளே போனா வெளில வந்துருவாரு அதனால்தான் இங்கேயே இருக்கேன் என கூறுகிறார்.

நீங்கள் மாமாவிடம் கொஞ்சம் பேசுங்கள் என மூன்று மருமகள்களும் கூற அதற்கு அவர்தான் என்கிட்ட எங்க போறன்னு கூட சொல்றதே கிடையாது நான் எப்படி பேச முடியும் இந்த வீட்டு மகாராணி இவ தானே இவகிட்ட தானே சொல்லிட்டு போறாரு என விஜயா மீனாவை பார்த்து கூறுகிறார் இத்துடன் ப்ரோமோ முடிகிறது..