மீனா முத்துவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட அண்ணாமலை.. விஜயாவை பார்த்து ஏளனமாக சுதா கேட்ட கேள்வி..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் திருடியது அனைவருக்கும் தெரிந்து விட்டது இந்த நிலையில் விஜயா ரூமில் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தார்.

பார்வதி வந்து விஜயாவை வெளியே அழைத்து வருகிறார் அப்பொழுது அண்ணாமலை விஜயாவிடம் மீனாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுகிறார். ஆனால் விஜயா என்னுடைய உசுரே போனாலும் நான் இவளிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன் என மூஞ்சியில் அடித்தது போல் கூறுகிறார்.

அது மட்டும் இல்லாமல் நீ உன் அப்பன் வீட்ல இருந்து எடுத்துட்டு வந்த நகையா என வளையலை கழட்டி மூஞ்சில் வீசுகிறார். இதனால் மீனா கண்கலங்கி அழுகிறார். உடனே முத்துவுக்கு கோவம் வருகிறது இதுவே வேறு யாராவது இருந்தால் என்ன நடக்கும் என்று தெரியுமா என மிரட்டுகிறார்.

அதற்கு விஜயா என்ன என் தலையை எடுப்பியா எடுத்துக்கோ என கெத்தாக கூறுகிறார். இப்படியே ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க விஜயா எல்லாம் உன்னால தான் என பார்வதியை  திட்டிவிட்டு உள்ளே செல்கிறார்.

உடனே கீழே கடந்த நகைகளை பொறுக்கி டேபிளில் வைத்து விட்டு ரோகினி இந்த வளையலை அத்தை  இடமே கொடுத்து விடுகிறேன் என கூறுகிறார். அது மட்டும் இல்லாமல் மனோஜ் செய்த தப்புக்கு நாங்களே பணத்தை கொடுத்து விடுகிறோம் எனவும் கூறுகிறார் அதற்கு கொஞ்சம் டைம் கேட்கிறார்கள்.

அண்ணாமலை முத்துவை பார்த்து தலை அசைக்க உடனே டைம் கொடுக்கிறார்கள் ரவி எல்லா பிரச்சினையும் உன்னால தாண்டா என மனோஜை திட்டி இத முன்னாடியே சொல்லி இருந்தா இந்த அளவு பிரச்சனை வந்திருக்குமா என கேட்கிறார்.

விஜயாவிடம் ரோகிணி வளையலை கொண்டு கொடுக்க அதனை மீனா முகத்தில் வீசி அடிக்க வேண்டியது தானே எதற்கு எடுத்துக்கொண்டு வந்தாய் என கேட்கிறார். மனோஜ் செய்த தவறுக்கு நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என கூறுகிறார் அப்பொழுது மனோஜ் விஜயாவிடம் மன்னிப்பு கேட்கிறார்.

அடுத்த காட்சியில் பார்வதியை  அழைத்துக் கொண்டு விஜயா கோவிலுக்கு செல்கிறார் அங்கு அண்ணன் உன்னிடம் பேசவே மாட்டாங்க போல தெரிகிறது என்ன பேசிக் கொண்டிருக்கும் பொழுது சாமி கும்பிட செல்கிறார்கள் அப்பொழுது சுதா அங்கு வருகிறார்.

விஜயாவை பார்த்து புன்னகைத்த சுதா கையில் இருந்த வலையளை பார்த்து எங்கே சென்றது என கேட்கிறார் உடனே குளிக்கும் பொழுது கழட்டி வைத்தேன் போடுவதற்கு மறந்து விட்டேன் என கூறுகிறார். நீங்க எங்க வீட்டு சம்மந்தி நீங்க கையில் வளையல் போடாமல் இருந்தா எங்க கௌரவம் என்ன ஆகிறது என ஓவர் பந்தா பண்ணுகிறார்.

மற்றொரு பக்கம் அண்ணாமலை வாக்கிங் சென்று விட்டு வருகிறார் அப்பொழுது மீனா உங்களுக்கு காபி எடுத்துக் கொண்டு வரட்டுமா எனக் கேட்க அதெல்லாம் வேண்டாம் இங்க வாங்க என முத்து மீனாவை அழைத்து உட்கார சொல்லி பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறார் உடனே முத்து பதறி அடித்து போய் நீங்க எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்கிறார்.

விஜயா இன்னைக்கு திருந்துவான் நாளைக்கு திருந்துவான் என்று பார்த்தால் திருந்துற மாதிரி தெரியவில்லை எனக்கூறி இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Exit mobile version