யாரடி நீ மோகினி சீரியல் “நடிகை நக்ஷத்திராவுக்கு” திருமணம் முடிந்தது – வெளிவந்த அழகிய புகைப்படம்.!

அண்மைக்காலமாக சின்னத்திரை நடிகைகள் பலரும் தனக்கு இணையான சின்னத்திரை நடிகரோ அல்லது மற்ற துறையில் இருக்கும் கலைஞரோ என காதலித்து திருமணம் செய்து கொண்டு வருகின்றனர். மேலும் அவர்கள் திருமணம் செய்து கொண்டு தனது குடும்ப வாழ்க்கை மற்றும் கெரியர் என இரண்டிலும் சிறப்பாக ஜொலித்தும் வருகின்றனர்.

அந்த வகையில் ஜீ தமிழ் பிரபல நடிகைகளான ஷபானா ஆர்யன், ரேஷ்மா முரளிதரன் போன்ற சின்னத்திரை நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டு சிறப்பாக வாழ்ந்து வருகின்ற நிலையில் தற்போதும் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகின்றனர். அவர்களை தொடர்ந்து தற்போது ஜீ தமிழ் பிரபல நடிகை நக்ஷத்ராவுக்கும் திருமணம் முடிந்துள்ளது.

ஆம் சீரியல் நடிகை நக்ஷத்ரா யாரடி நீ மோகினி சீரியல் மூலம் பிரபலம் அடைந்தவர். இதைத்தொடர்ந்து தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வள்ளி தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த சீரியலிலும் அண்மையில் தான் நட்சத்திரத்திற்கு திருமணம் நடைபெற்றது.

இந்த சீரியல் மூலம் சமூக வலைதள பக்கங்களில் நட்சத்திராவுக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். இப்படி இருக்கின்ற நிலையில் நக்ஷத்ரா சில காலங்களாக ஒருவரை காதலித்து வந்த நிலையில் அண்மையில் இருவருக்கும் திருமணம் முடிந்துள்ளதாக பேசப்பட்டன.

நட்சத்திராவின் திருமணத்தை  உறுதிப்படுத்தும் வகையில் இந்த புதிய ஜோடிகளின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன. இந்த புகைப்படங்களுக்கு நக்ஷத்ரா ரசிகர்கள் பலரும் லைக்குகளை தெரிவித்து வருவதோடு மட்டுமல்லாமல் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

nakasthira
nakasthira

Leave a Comment