நடிகை அமலாவுடன் நெருக்கம் காட்டிய ரஜினி – வளரவிட்டு பின் கிள்ளி எறிந்த லதா ரஜினிகாந்த்.!

தமிழ் சினிமா உலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பத்திலிருந்து இப்போதுவரையிலும் மாஸ் கலந்த படங்களில் தனது நடிப்பு திறமையை  வெளிப்படுத்துவதால் இவரது படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் ஹிட் அடிப்பதோடு பிரமாண்டமான வசூலையும் அள்ளி வருவது வழக்கம்.

இதனால் தமிழ் சினிமாவில் ரஜினியின் இடத்தை பிடிக்க முடியாமல் இன்றளவும் பல நடிகர்கள் தட்டுத்தடுமாறி கொண்டுதான் இருக்கின்றனர் இப்பொழுது கூட தனது 169 திரைப் படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கி உள்ளார் ரஜினி. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ரஜினி சினிமா ஆரம்பத்தில் கிசுகிசுவில் மாட்டியது உண்டு.

அதை விட பல விவகாரங்கள் இருக்கின்றன அதில் ஒன்றைப் பற்றிதான் நாம் தற்பொழுது பார்க்க இருக்கிறோம். ரஜினி சினிமா ஆரம்பத்தில் லதா என்ற நடிகையை காதலித்து வந்தார் ஆனால் அது நிறைவேறாமல் போக பின் குடும்பத்தார் சம்மதத்துடன்  மீண்டும் லதா என்ற பெயருடைய நபரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் இரு பெண் குழந்தைகள் இருந்தனர் இந்த சமயத்தில்தான் ரஜினி பெரிய அளவில் கிசுகிசுவில் சிக்கி கொண்டார். ரஜினி நடிகை அமலா என்ற நடிகையுடன் சேர்ந்து நடித்து வந்தார் குறிப்பாக வேலைக்காரன் திரைப்படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தபோது அப்போது இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது பின் கிசுகிசுவாக மாறத் தொடங்கியது.

அந்த அளவிற்கு இருவரும் நெருக்கமாக தொடங்கினார்கள் இருவரும் இணைந்து வேலைக்காரன் படத்திற்கு பிறகு மாப்பிள்ளை, கொடி பறக்குது போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தனர். இருவரும் சினிமாவையும் தாண்டி பர்சனல் விஷயத்தை பற்றி பேசிவார்கள் அந்த அளவிற்கு இருவரும் நன்கு பழக ஆரம்பித்தனர்.

ஒரு கட்டத்தில் அமலா நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கெல்லாம் சென்று ரஜினி பார்த்து வந்தாராம் மேலும் ஒரு கட்டத்தில் இருவரும் படப்பிடிப்பையும் தாண்டி வெளிநாடுகளுக்கு சுற்றி வருவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். இப்படியே காலங்கள் நகர நகர ஒரு சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி தனது குடும்பத்தை பிரிந்து தனது திருமணமான மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பும் வரைக்கும் சென்றுள்ளார்.

ஒரு கட்டத்தில் இந்த விஷயத்தை லதா ரஜினிகாந்த்  இயக்குனர்  பால சந்திரருக்கு சொல்லியுள்ளார் அதன்பின் ரஜினியை அழைத்து நீங்கள் செய்வது மிக பெரிய தவறு இதனால் உனது குடும்பங்கள் பாதிக்கப் படுகின்றன மேலும் எனது சினிமா கேரியரில் மிகப்பெரிய ஒரு சிக்கலை ஏற்படுத்தி விடும் என அவருக்கு புத்திமதி கூறி உள்ளார் ஒரு கட்டத்தில் ரஜினியும் தனது தவறை உணர்ந்து அதன் பின் தனது குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

Leave a Comment