வெறும் 12 திரைப்படத்தில் 4300 கோடி வரை லாபம் பார்த்த ஒரே இயக்குனர் யார் தெரியுமா..

சினிமாவை பொருத்தவரை மட்டுமல்லாமல் எந்த ஒரு விஷயத்திலும் ஒரு தோல்வியை அடைந்தால் தான் வெற்றியை அடைய முடியும் இது அனைவரின் வாழ்க்கையிலும் பொருந்தும். அப்படிதான் திரையுலகிலும்  தோல்வியை அடைந்து தான் பலரும் வெற்றிப்பாதையை நோக்கி நகர்ந்து உள்ளார்கள். அதேபோல் ஒரு படம் வெற்றி அடைவதும் தோல்வியடைவதும் மக்கள் கையில் மட்டும்தான் இருக்கிறது.

அந்த வகையில் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை தோல்வியை சந்திக்காத இயக்குனர் இருக்கிறார் அவர் சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த திரைப்படங்களை இயக்கியவர் என்ற அந்தஸ்தில் முதலிடத்தில் இருக்கிறார். அவர் வேறு யாரும் கிடையாது பாகுபலி, பாகுபலி 2, ஆர் ஆர் ஆர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜமவுலி தான்.

இயக்குனர் ராஜமவுலி கிட்டத்தட்ட சினிமாவில் 20 வருடங்களாக பணியாற்றி வருகிறார் இவர் இதுவரை 12 திரைப்படங்களை இயக்கியுள்ளார் ஒவ்வொரு திரைப்படமும் வேற வேற கேட்டகிரி ஆனால் இவர் இயக்கிய 12 திரைப்படங்களில் ஒரு திரைப்படம் கூட தோல்வி அடையவில்லை. அனைத்து திரைப்படங்களும் ஹிட் திரைப்படங்கள் தான். இவர் இயக்கிய திரைப்படங்கள் மூலம் சுமார் 4,300 கோடி வரை லாபம் கிடைத்துள்ளது.

அதேபோல் பாகுபலி பாகுபலி இரண்டு, ஆர் ஆர் ஆர் ஆகிய மூன்று திரைப்படங்களின் மூலம் கிட்டத்தட்ட 80 சதவீத வசூலை அடைந்திருந்தார். மீதமுள்ள திரைப்படங்கள் மூலம் 20% மட்டுமே கிடைத்தது. இந்த நிலையில் தற்பொழுது மகேஷ் பாபுவை வைத்து திரில்லர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை கொடுத்து வரும் ராஜமௌலி இந்திய திரை உலகில் முக்கிய இயக்குனராக பார்க்கப்படுகிறார்.