விஜய் டிவியிலிருந்து ஜீ தமிழ் சீரியலுக்கு கதாநாயகியாக நடிக்க போகும் பிரபல நடிகை.!

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்கள் அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் மேலும் இதன் மூலம் தொடர்ந்து ஏராளமான புதிய சீரியல்கள் அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் புதுமுக நடிகர் நடிகைகளையும் அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது விஜய் டிவி சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்த பிரபல நடிகை ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் சீரியலில் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சமீப காலங்களாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பினை பெற்று வரும் சீரியல் தான் தெய்வம் தந்த பூவே. இந்த சீரியலில் அம்ருதகலாம் ஹீரோவாக நடித்து வருகிறார் இவருக்கு ஜோடியாக நிஷ்மா செங்கப்பா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களைத் தொடர்ந்து பலரும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் சீரியல் மதியம் ஒளிபரப்பாகி வருவதால் அந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் இந்த சீரியலுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ள நிலைகள் இந்த சீரியல் முதல் சீசன் நிறைவுக்கு வருகிறது மேலும் இந்த சீரியலின் அடுத்த சீசன் துவங்க இருப்பதாகவும் இரண்டாவது சீசனில் அம்ருதகலாம் ஹீரோவாக நடிக்க உள்ளார் இந்த சீரியலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த செந்தூரப்பூவே சீரியலில் ஹீரோயினாக நடித்த பிரபலமடைந்த ஸ்ரீநிதி இந்த  ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

செந்தூரப்பூவே சீரியலில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்த ஸ்ரீநிதி மேலும் இதற்கு முன்பே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஏராளமான நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment