மாமியார் என நிரூபித்த கோமதி.. மந்திரிச்சி விட்ட கோழி மாதிரி நிற்கும் தங்கமயில்.. உண்மையைக் கூறி மாமியார் தலையில் அணுகுண்டை வீசிய மீனா..

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில் தங்கமயில் ரூமில் உட்கார்ந்து கொண்டிருப்பதால் அவரை சாப்பிட மீனா மற்றும் ராஜ் இருவரும் அழைக்கிறார்கள். ஆனால் வேண்டாம் என கூறுகிறார் தங்கமயில். நான் வெளியே வந்து யார் முகத்தில் முழிப்பேன்  என்பது போல் தங்கமயில் பேச அங்கே யாரும் கிடையாது அத்தை மட்டும் தான் இருக்காங்க என கூறுகிறார். உடனே ராஜு நீங்க கதிருக்கு கொஞ்சம் கூட சப்போர்ட் செய்யல உங்களுக்காக தான் இப்படி பண்ணுனான் என பேச கதிர் மாமாவோட காச எடுத்து இருப்பான்னு எங்களுக்கு தெரியாது என பேசுகிறார்.

அப்போ கதிர் தான் உங்களுக்கு பணம் கொடுத்தார் என்று தெரியுமா என கேட்க தங்கமயில் ஆமாம் தெரியும் என ஒப்புக் கொள்கிறார். பிறகு தங்க மயிலை கிண்டல் பண்ணுவது போல் பேசிக் கொண்டிருக்கும் மீனா மற்றும் ராசியை நீங்க ரொம்ப கிண்டல் பண்ற மாதிரி இருக்கு என பேசுகிறார் தங்கமயில் உடனே அதெல்லாம் ஒன்னும் கிடையாது வாங்க சாப்பிட போகலாம் என சாப்பிட அழைக்கிறார்கள்.

சாப்பிட போன தங்கமயில் இடம் கோமதி இலைமறைக்காக வம்பு இழுக்கிறார். என்னமா மயிலு 25 ஆயிரம் எல்லாம் உனக்கு சாதாரணம், என்ன ரெண்டு மாசம் குடும்பம் நடத்துற காசு தானே போனா போயிட்டு போகுது இந்த சாப்பாடெல்லாம் நீ சாப்பிடுவியா ஹோட்டலில் தான சாப்பிடுவ என பேசுகிறார். தங்கமயில் நான் தெரியாமல் செஞ்சுட்டேன் அத்தை எனக் கூறுகிறார் உடனே ஹோட்டலில் எவ்வளவு சாப்பாடு என கேட்க இப்ப அதை தெரிஞ்சுகிட்டு நீங்க என்ன பண்ண போறீங்க என மீனா மற்றும் ராஜு கேட்கிறார்கள்.

இதுக்கெல்லாம் நீங்க சரிப்பட்டு வர மாட்டீங்க அரசியை கூப்பிடுகிறேன் என அரசியை அழைத்து ஹோட்டலில் எவ்வளவு சாப்பாடு என கேட்கிறார் அதற்கு சிக்கன் பிரியாணி ₹800 மட்டன் பிரியாணி ஆயிரத்துக்கு மேல என கூற அதிர்ச்சடைந்து நிற்கிறார் கோமதி. அது மட்டும் இல்லாமல் அந்த சமயத்தில் தங்கமயில் நான் வேணா என் நகையை வைத்து பணத்தை கொடுத்து விடுகிறேன் என கூறுகிறார் உடனே கோமதி மீனா கவர்மெண்ட் வேலை பார்த்தா ராஜி பெரிய இடத்து பொண்ணு அவங்க கூட இந்த மாதிரி தப்பு பண்ணல ஆனா நீ ஈசியா பண்ணிட்டியே என கோமதி பேசுகிறார்.

அடுத்த காட்சியில் கோமதி உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது மீனா மற்றும் ராஜி பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்போது கதிர் வருகிறார் என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்டாய் என கேட்க டெலிவரி எதுவும் கிடையாது அதனால் வந்துட்டேன் என பேசுகிறார். கோமதி  அவருக்கு எந்த தப்ப வேணாலும் மன்னிச்சிருவாரு பொய் சொல்றது ஏமாத்துறது பிடிக்காது என கூறிக் கொண்டிருக்கிறார் உடனே மீனா அப்பன்னா உங்க நிலைமையை நினைத்து பார்த்தீர்களா என பேசுகிறார்.

நீங்கதான் ராஜிய கதிருக்கு கட்டி வச்சீங்க அவங்க விருப்பம் இல்லாம கட்டி வச்சீங்க இது மாமாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும். அது மட்டும் இல்லாம எல்லாத்தையும் பண்ணி வச்சுட்டு எதுவுமே நடக்காதது மாதிரி வீட்டுக்கு வந்துட்டீங்க இதுல பாக்கியா வேற கோத்து விட்டீங்க என பேசுகிறார். இதனால் கோமதி அதிர்ச்சி அடைந்து இடிந்து போய் உட்காருகிறார் இதை நினைச்சு தான் எனக்கு பயமா இருக்கு அவருக்கு இது தெரியவே கூடாது என பேசுகிறார்.

அடுத்த காட்சியில் பாண்டியன் அனைவரிடமும் பேச வேண்டும் என அழைக்கிறார் உடனே கதிர்  செந்தில் என அனைவரும் தின்பண்டத்தை எடுத்து வைக்கிறார்கள் எனக்கு 12 வயசு இருக்கும்பொழுது என பாண்டியன் கூற அனைவரும் நொறுக்குத்தீனியை  தின்கிறார்கள் பாண்டியனுக்கு தெரியாமல். அப்பொழுது அரசிஎள்ளு தட்டை கேட்க கதிரிடம் ராஜ கேட்கிறார் அப்பொழுது கதிர் எடுத்துக் கொடுக்க கதிர் கையை ராஜி பிடித்துக் கொள்கிறார் இருவருக்கும் ரொமான்ஸ் ஆரம்பிக்கிறது.