வீட்டை விட்டு வெளியே போன பாண்டியன்!! கதிரை வீடு புகுந்து அடிக்கும் குமரவேல்!! பாண்டியனை தேடும் குடும்பம்.. பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோட்..

pandian stores 2 : பாண்டியன் ஸ்டோர் 2 இன்றைய எபிசோடில் பாண்டியன் வீட்டில் கோமதியின் தம்பி செந்தில் ராஜி மற்றும் கதிரிடம் என்கிட்ட கூட மறச்சிட்டிங்கலேடா என்னால இன்னும் நம்ப முடியல டா நீங்க தான் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னு என அவர்களிடம் சொல்கிறார். பிறகு அதனைத் தொடர்ந்து மீனா கோமதியிடம் ரூமுக்கு போய் மாமாவை சமாதானப்படுத்துங்கள் என கூறுகிறாள்.

கோமதி ரூமுக்கு போனதும் பாண்டியன் பேசாமல் வெளியே வந்து கதிர் மட்டும் ராஜியை முறைத்தபடி வீட்டை விட்டு வெளியே சென்று விடுகிறார். அதனை தொடர்ந்து அடுத்த சீனில்  கோமதி அண்ணன் வீட்டை காட்டுகின்றனர். அங்கு குமார் மற்றும் சக்தி கோபமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்படி பேசிக் கொண்டிருக்கும் போது  குமாரின் அம்மா என்னால இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டாங்கன்னு நம்பவே முடியல என அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

ஏன்பா தமிழ் நீ லேட் பண்ற ஒவ்வொரு நிமிஷமும் உன் குழந்தையும் சரஸ்வதியும் அங்க துடியா துடிச்சிட்டு இருக்காங்க.

எப்ப பாத்தாலும் அடிச்சுக்குவாங்க திட்டிப்பாங்க என்னைக்காவது இவங்க மண்டைய ஒடச்சிகிட்டு போலீஸ்ல கேஸ்னு போய் நிப்பாங்கன்னு தான் நினைச்சேன் ஆனா இப்படி கல்யாணம் பண்ணிட்டாங்க என புலம்பி கொண்டிருக்கிறாள். உடனே அதற்கு பாட்டி வாய மூடு டி சும்மா இதையே பொலம்பிட்டு இருக்க என திட்டுகிறாள். அதனை தொடர்ந்து குமார் என் தங்கச்சியை கல்யாணம் பண்ணவணா அடிக்காம விட மாட்டேன் என சொல்லிவிட்டு கதிரை அடிக்க அவங்க வீட்டுக்கு செல்கிறான்.

அங்கு கதிரை அடிக்கும்போது கதிரின் அண்ணன்கள் வந்து தடுக்கின்றனர். மேலும் குமார் கதிரை பார்த்து உன்னை கொல்லாமல் விடமாட்டேன்டா உன் சாவு என் கையில தான்டா என கத்திக்கொண்டே சண்டை போடுகிறார். அப்போது செந்தில் அவனை வெளியே இழுத்து  சென்று விடுகிறார்.

முத்துவுக்கும் மீனாவுக்கும் வெடித்த பிரச்சனை.. ஹாஸ்பிட்டலில் சத்தியா.. விஜயாவுக்கு தெரிய போகும் உண்மை..

பின்பு கோமதி நடப்பதை பார்த்து அழுது கொண்டிருக்கிறாள் உடனே மீனா கோமதியை தனியாக ரூமுக்கு கூட்டிட்டு போய் எல்லாத்தையும் பண்ணிட்டு இப்ப என்ன அழுதுட்டு இருக்கீங்க சும்மா இருக்க மாட்டீங்களா உங்கள சமாதானப்படுத்துறதா நடக்கிற பிரச்சனையை பார்க்கிறதா இப்படியே நீங்க பண்ணிட்டு இருந்தா நானே போய் சொல்லிடுவேன் என கோமதிடம் பேசிக் கொண்டிருக்கிறாள்.

அப்போது அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை மீனாவின் புருஷன் அதனைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Exit mobile version