பாண்டியன் ஸ்டோர் சீரியல் குடும்பத்தில் வெடித்த சண்டை.! குடும்பம் பிரியுமா.? இனிதான் இருக்கு பூகம்பம்.. ஆரவாரத்தில் ரசிகர்கள்.!

ஒவ்வொரு தொலைக்காட்சியும் புதிய புதிய சீரியல்களை ஒளிபரப்பி டி ஆர் பி யில் தங்களது இடத்தை தக்க வைத்துக் கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் அந்த வகையில் சமீபகாலமாக ஒவ்வொரு தொலைக்காட்சியும் படத்தின் பெயரில் சீரியலை ஒளிபரப்பிய அதில் வெற்றி கண்டும் வருகிறார்கள்.  அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி பல சீரியல்களை படத்தின் பெயரில் தான் ஒளிபரப்பி வருகிறார்கள்.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வைரலாகி வருகிறது அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியலாக பார்க்கப்பட்டு வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர். அதேபோல் இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த நிலையில் அடுத்த வாரம் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது அதன் புரோமோ விடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது அதுமட்டுமில்லாமல் இந்த பாண்டியன் ஸ்டோர் ப்ரோமோ வீடியோவை  பார்த்த ரசிகர்கள் சீரியலை பார்க்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஏனென்றால் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மூத்த அண்ணன் மூர்த்தி கதிரிடம் காசை சரியான நேரத்தில் கட்டியாச்சா என கேட்டுள்ளார் அதற்கு கதிர் நான் புதிய வீடு கட்டும் வேலையில் மறந்து விட்டேன் என கூறினார். அப்பொழுது புதிய வீடு கட்டும் இடத்தில் நீ சும்மா தானே இருக்கிறாய் என கதிரிடம் ஜீவா கேட்டுள்ளார்.

உடனே கதிரின் மனைவி முல்லை மிகவும் கோபமாக எழுந்து அவர் ஒன்றும் சும்மா அங்கு நிற்கவில்லை அவரும் அங்கு வேலை பார்க்கிறார் தனம் அக்காவும் மீனாவும் அவர்கள் பங்கிற்கு நகையை கொடுத்து விட்டார்கள் வீடு கட்டுவதற்கு ஆனால் என்னிடமும் எனது கணவரிடமும் எதுவும் கிடையாது அதனால் நாங்கள் எங்களது உழைப்பை போடுகிறோம் என கூறினார்.

இதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்து உறைந்து போய் நிற்கிறார்கள். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் சண்டை வருமா குடும்பம் பிரியுமா என இப்போது கமெண்ட் செய்து கேட்கத் துவங்கி விட்டார்கள்.

https://youtu.be/NsFKDLctork

Leave a Comment