டாக்டரையே தலை சுற்ற வைத்த அப்பத்தா.. கோமதி சொன்ன வார்த்தையால் ஆடிப்போன பாண்டியன்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் கொஞ்சம் சென்டிமென்ட் தூக்கலாக இருக்கிறது. அப்பத்தா மகன்களின் சண்டையை பார்க்க முடியாமல் திடீரென நெஞ்சு வலி வந்து பேச்சு மூச்சு இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதை கேள்விப்பட்ட கோமதி தற்போது வீட்டிலேயே ஓ என ஒப்பாரி வைத்து கூட்டத்தை கூட்டி விட்டார். ஏற்கனவே நொந்து போயிருக்கும் அவரை பக்கத்து வீட்டு பெண்கள் இன்னும் கொஞ்சம் கலவரப்படுத்துகின்றனர்.

கோமதியை பாண்டியன் உட்பட வீட்டில் இருப்பவர்கள் எல்லாரும் ஒரு பக்கம் சமாதானம் செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் அப்பத்தா நல்லபடியாக கண் முழித்து விட்டார். அதுவும் மிகப்பெரிய ஏப்பத்தோடு அவர் எழுந்து உட்கார்ந்ததை பார்த்த டாக்டர் கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டார்.

அவரைப் பார்த்த அப்பத்தா நேத்து சாப்பிட்டது ஏதோ ஒத்துக்கல அதனாலதான் இப்படி ஆயிடுச்சு. ஆனா என்ன உடனே வீட்டுக்கு அனுப்பிடாதீங்க. ஒரு மூணு நாள் இங்கேயே இருக்கிறேன் என டாக்டருக்கே ஆர்டர் போடுகிறார்.

இதனால் நொந்து போன டாக்டர் உங்களுக்கு ஒன்னும் இல்லை சாப்பாட்டு விஷயத்துல கொஞ்சம் கவனமா இருந்தா போதும் என சொல்கிறார். ஆனால் வழக்கம் போல சேட்டை செய்யும் அப்பத்தா வீட்டுக்கு போனா என் பசங்க மறுபடியும் சண்டை போட ஆரம்பிச்சிடுவாங்க.

அதனால நான் இங்கேயே மூணு நாள் இருக்கேன் என டாக்டரை பொய் சொல்ல வைக்கிறார். அதேபோல் கோமதி அம்மாவை நினைத்து புலம்பியபடி இருக்கிறார். வீட்டை விட்டு வந்து கல்யாணம் செய்தது தப்புதான்.

நான் கூட இருந்திருந்தால் எங்க அம்மாவுக்கு இப்படி ஆயிருக்கது. இப்ப கூட ஒன்னும் இல்ல நா இவரை தூக்கிப்போட்டு உன் கூடவே வந்துடறேன். இவர் இருக்கிற திசை பக்கம் கூட வரமாட்டேன் என அழுதபடி சொல்கிறார்.

இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். பாவம் பாண்டியன் நிலைமை தான் அந்தோ பரிதாபமாக இருக்கிறது. இப்படியாக இந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் காமெடி சென்டிமென்ட் என ஒளிபரப்பாக உள்ளது.