கையில் விளங்க மாட்டி ஜீவாவை இழுத்துச் சென்ற போலீஸ்.! ஹாஸ்பிடலில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்கும் ஜனார்த்தனன்.! பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய முழு எபிசோட்.

Pandian stores : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில் போலீஸ் பாண்டியன் ஸ்டோர் வீட்டிற்கு வந்த ஜீவாவை அரெஸ்ட் செய்கிறார்கள் அப்பொழுது எதற்காக அரெஸ்ட் செய்கிறீர்கள் என கேட்டதற்கு ஜனார்த்தனனை அடித்துள்ளார் எனவும் மேனேஜரை கொலை செய்துள்ளார் எனவும் போலீசார் கூறுகிறார்கள். இதனால் குடும்பத்தார் அதிர்ச்சி அடைகிறார்கள் அது மட்டும் இல்லாமல் அழுது புலம்பி கொண்டிருக்கிறார்கள்.

போலீஸ் அடுத்ததாக கதிர் எங்கே இருக்கிறார் என கேட்கிறார்கள் ஆனால் ஜீவா அமைதியாக இருக்க அந்த ஹோட்டல் தான ஹோட்டலுக்கு வண்டியை விடு என டிரைவரிடம் கூறுகிறார். அதற்குள் முல்லை கதிருக்கு கால் செய்கிறார் ஆனால் கதிர் எடுக்காமல் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார் பிறகு முல்லையின் அப்பாவிற்கு கால் செய்து போலீசார் வந்தார்கள் ஜீவாவை அரஸ்ட் செய்து விட்டார்கள் கதிரையும் கேட்டார்கள் எனக் கூற அதிர்ச்சடைகிறார்கள் அந்த சமயத்தில் போலீசார் கதிர் வேலை செய்யும் ஹோட்டலுக்கு வருகிறார்கள்.

ஹோட்டலுக்கு வந்து கதிரை வந்து வண்டியில் ஏறு என போலீஸ்க் கூற கதிர் எதற்காக என கேட்க உடனே போலீசார் ஜனார்த்தனனை அடித்ததற்காகவும் மேனேஜரை கொலை செய்ததற்காகவும் உங்களை அரெஸ்ட் செய்கிறேன் என கூறுகிறார்கள். கதிர் மற்றும் ஜீவாவை போலீசார் அரெஸ்ட் செய்து லாக்கப்பில் வைத்து விடுகிறார்கள் உடனே பதறி அடித்து வந்து மூர்த்தி வீட்டில் உள்ள அனைவரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார்.

என்ன நடந்தது என கேட்டுக் கொண்டிருக்கிறார் அனைவரும் கூற உடனே மூர்த்தி மீனாவிடம் உங்க அப்பா எப்படி இருக்காரு அவரு போய் பார்த்தியா என கேட்க இன்னும் இல்லையே எனக் கூறுகிறார். உடனே நீ போய் உங்க அப்பாவ பாரு நான் ஜீவாவையும் கதிரையும் வெளியில கொண்டுட்டு வரேன் என கூறிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறார். போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற மூர்த்தி தெரிந்த கான்ஸ்டபளிடம் ஏன் தம்பிகளை வெளியே விடுங்க என கூறுகிறார்.

ஆனால் அந்த கான்ஸ்டபிள் நான் ஒன்னும் பண்ண முடியாது எஃப் ஐ ஆர் போட்டாச்சு இன்ஸ்பெக்டர் வருவர் வேணா பேசி பாருங்க எனக் கூறுகிறார் இன்ஸ்பெக்டர் வந்ததும் மூர்த்தி அவரிடம் பேசுகிறார் அதெல்லாம் எதுவுமே பண்ண முடியாது எஃப் ஐ ஆர் போட்டாச்சு எதுவா இருந்தாலும் கோர்ட்ல வந்து பேசிக் கொள்ளுங்கள் ஜனார்த்தனனை அடிச்சிருக்காங்க மேனேஜரை கொலை செஞ்சிருக்காங்க அதை கண்ணால பார்த்த பிரசாந்தையும் தாக்கி இருக்காங்க என போலீசார் கூறுகிறார்.

அதுமட்டுமில்லாமல் ஜீவாவின் மாமியாரை வீடு புகுந்து மிரட்டியுள்ளார்கள் என சாட்சி சொல்லியுள்ளார் அதனால் இவர்களை விட முடியாது எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள் என கூறுகிறார்கள். உடனே ஒரு வக்கீலை ஏற்பாடு செய்ய சொல்லி கான்ஸ்டபில் கூற மூர்த்தி கிளம்புகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

pandian stores meena
Exit mobile version