மூர்த்தியை தள்ளிவிட்டு தப்பித்து ஓடிய பிரசாந்த். வீடியோ ஆதாரத்தை காட்டியும் ஜாமீன் கொடுக்காத கோர்ட்.! பரபரப்பின் உச்சத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ்

Pandian Stores today episode October 7 : பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் ஜனார்த்தனனை கொல்லப்போன பிரசாந்தை கையும் களவுமாக பிடித்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் அவர் கொலை செய்ய முயற்சி செய்யும் பொழுது வீடியோவையும் எடுத்து உள்ளார்கள் இந்த ஆதாரத்தை காட்டினால் கண்டிப்பாக தம்பிகளை வெளியில் கொண்டு வரலாம் என மூர்த்தி நினைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இவனை போலீசில் பிடித்துக் கொடுக்க வேண்டும் என அனைவரும் கூறும் பொழுது மீனா நம்ம குடும்பத்துக்கு இவன் செஞ்ச துரோகத்துக்கு நம்மளே அடிக்கலாம் என அடிக்க முயற்சி செய்கிறார் ஆனால் அந்த சமயத்தில் கண்ணன் போலீசுக்கு போன் செய்வதற்குள் பிரசாந்த் மூர்த்தியை தள்ளிவிட்டு தப்பித்து ஓடுகிறார். அவன் எங்க ஓடிடுவான் கண்டிப்பா நம்ம புடிச்சிரலாம் என பேசிக்கொண்டு உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறார்கள் வீடியோ ஆதாரத்தை போலீஸிடம் காட்டுகிறார்கள்.

pandian stores today episode october th

இப்ப என்னோட தம்பிய வெளியில விடுவீங்களா என கேட்க அது என் கையில இல்ல இதை கொண்ட கோர்ட்ல காமிங்க அதுக்கு அப்புறம் தான் முடிவு செய்யும் கோர்ட்டு என கூறுகிறார்கள். மூர்த்தி வக்கீல் என அனைவரும் வருகிறார்கள். கோர்ட்டில் ஜீவா மற்றும் கதிரை ஆஜர் படுத்துகிறார்கள் அப்பொழுது இவங்க ரெண்டு பேரும் கொலை செய்யல பிரசாந்த் தான் கொலை செஞ்சேன் என்பதற்கான ஆதாரங்களிடம் இருக்கிறது என ஆதாரத்தை காட்டுகிறார்.

ஆதாரத்தை பார்த்த கோர்ட் இவங்க ரெண்டு பேரும் கொலை செய்யல என்பதற்கு ஆதாரம் இருந்தாலும் பிரசாந்த் பிடிபட்டாலோ ஜனார்த்தனன் கண் விழித்து வாக்குமூலம் கொடுத்தாலோ தான் இவர்களை விடுவிக்க முடியும் என திட்டவட்டமாக கூறி விடுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஜாமினையும் ரத்து செய்து  விடுகிறார்கள்.

அப்படி இருக்கும் நிலையில் கதிர் ஜீவாவை பார்த்து மீனா அழுகிறார் அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது என இருவரும் சொல்லுகிறார்கள் அப்பொழுது மீனா தலையில் அடித்துக் கொண்டு அழுகிறார் தான் செய்த தப்பை உணர்ந்து கண்ணீரில் மிதக்கிறார். அடுத்த காட்சியில் பிரசாந்த் தன்னுடைய சித்தி வீட்டிற்கு சென்றுள்ளார் அப்பொழுது அக்கவுண்டில் பிரசாந்த் ஆட்டைய போட்டுள்ளது பிரசாந்த் சித்திக்கு தெரிய வருகிறது.

pandian stores today episode october 7 th

அந்த சமயத்தில் பிரசாந்த் வந்து நான் உடனடியாக கிளம்ப வேண்டும் என் துணி டிரஸ் பேக் பண்ணிக்கிறேன் என உள்ள சென்று பையை எடுத்துக்கொண்டு வெளியே வருகிறார் அந்த சமயத்தில் சித்தி சாப்பிட்டு போடா இன்னும் ரெண்டு நாள் கழிச்சு தான் வருவேன் என கூறுகிறார். உடனே பிரசாந்த் கத்துகிறார் அந்த சமயத்தில் போலீஸ் வந்து பிரசாந்தை பிடித்து விடுகிறார்கள் இதனால் பிரசாந்தின் சித்தி அதிர்ச்சி அடைகிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Exit mobile version