பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் உண்மையை சொன்ன மீனா.. ஜீவாவை வெளியில எடுக்க கண்ணன் கொடுத்த எவிடன்ஸ்.! ஐஸ்வர்யாவிடம் ஹெல்ப் கேட்கும் மூர்த்தி..

pandian stores today episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடில் மீனா ஹாஸ்பிடலில் ஒளிந்து கொண்டிருக்கும் பொழுது பிரசாந்த் ஜனார்த்தனனை கொல்ல முயற்சி செய்கிறார் அந்த சமயத்தில் நர்ஸ் வந்து காப்பாற்றுகிறார். இதை அனைத்தையும் நேரில் பார்த்த மீனா உடனடியாக தன்னுடைய தங்கைக்கு போன் செய்து வர சொல்லுகிறார். அவர் வந்தவுடன் அப்பாவை பார்த்துக்கோ முக்கியமா பிரசாந்த் இந்த ரூம்குள்ளேயே போக கூடாது என திட்டவட்டமாக கூறுகிறார்.

மீனா பாண்டியன் ஸ்டோர் குடும்பத்திற்கு செல்கிறார் அங்கு போய் மூர்த்தியிடம் நடந்த அனைத்தையும் கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் பிரசாந்த் தான் இந்த கொலையை செய்தது ஆனால் இதற்கெல்லாம் நமக்கு ஆதாரம் வேண்டும் இதை போலீசில் சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள் என கூறிக் கொண்டிருக்கிறார்.

meena pandian stores

உடனே அனைவரும் கொஞ்சம் யோசித்து முடிவு செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் அதேபோல் ஜீவா, கதிர் கொலை நடந்த அப்ப எங்க இருந்தார் என்பதை நிரூபிக்க வேண்டும் என மூர்த்தி கூற உடனே கண்ணன் கொஞ்ச நேரம் இருங்க நான் ஆதாரம் கொண்டு வருகிறேன் என வெளியே செல்கிறார் உடனே ஜீவா எங்கு டெலிவரி செய்தார் எங்கு அமௌன்ட் கலெக்சன் பண்ணினார் என அனைத்து எவிடென்ஸ்களையும் கலெக்ட் பண்ணி கொண்டு வருகிறார்.

இந்த ஆதாரம் போதும் ஆனா கதிரை காப்பாற்ற நமக்கு ஆதாரம் வேண்டும் என அனைவரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது கதிர் ஹோட்டலில் தான் இருந்தார் அப்பா வந்து சாட்சி சொன்னால் போதாதா என முல்லை கேட்க உடனே அந்த ஆதாரத்தை எடுத்துக் கொள்ள மாட்டார்கள் போலீஸ் வேறு யாராவது சொல்ல வேண்டும் என கூறுவார்கள் என  பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

pandian stores prashanth

உடனே மூர்த்தி ஐஸ்வர்யா நீ நெனச்சா இது எல்லாத்துக்கும் ஒரு முடிவு காலம் வந்துவிடும் என மூர்த்தி ஐஸ்வர்யாவிடம் ஹெல்ப் கேட்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Exit mobile version