உண்மையை உளறிய தங்கமயில்.. பாயிண்ட்டை பிடித்த ராஜி.. தொக்கா மாட்டிக்கிட்டியே மயிலு..

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் பாண்டியன் குடும்பத்தில் தங்கமயில் ஹனிமூனுக்காக 25 ஆயிரம் ரூபாய் ரூம் புக் பண்ணியது அனைவருக்கும் தெரிய வருகிறது இதனால் கதிர் சிக்கி கொள்கிறார் கதிரை எப்படி அக்கவுண்டில் இருந்து பணம் எடுத்த என பாண்டியன் கதிரை நடு வீட்டில் நிற்க வைத்து அடிக்கிறார். இதனால் ஆவேசப்பட்ட சரவணன் உண்மையை கூறி விடுகிறார்.

இந்த நிலையில் கோமதி 25 ஆயிரம் ரூபாய் எப்படி இவளுக்கு செலவு பண்ண மனசு வந்தது என தண்ணீரை மொண்டு மொண்டு குடிக்கிறார். கோமதி புலம்புவதை பார்த்த மீனா இப்ப என்ன ஆச்சு எதற்காக இப்படி புலம்புகிறாய் என கேள்வி கேட்க அதற்கு கோமதி இந்த 25 ஆயிரம் ரூபாய் இருந்தா நான் ரெண்டு மாசம் செலவை பார்த்துப்பேன்  என கூறுகிறார்.

உடனே ராஜி எல்லாரும் உங்க பிரச்சனையை மட்டும் யோசிக்கிறீங்களே கதிர பத்தி கொஞ்சமாவது யோசிச்சு பாத்தீங்களா செய்யாத தப்புக்கு இவ்வளவு அசிங்கப்படுகிறார் என ராஜி வருத்தப்படுகிறார் உடனே மீனா கொஞ்சம் அமைதியா இரு ராஜி என அவரை சமாதானப்படுத்துகிறார். அதற்கு கோமதி நீ இப்ப வந்தவா என் புள்ள மேல எனக்கு அக்கறை நிறையவே இருக்கு என அந்த மனுஷன் யோசிக்காமல் ஏதாவது செஞ்சுட்டாரு என கோமதி கூறுகிறார்.

அதுமட்டுமில்லாமல் தங்கமயில் இவர்கள் பேசிக் கொள்வதை ஓட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார். மீனா அந்த சமயத்தில் இந்த விஷயம் எனக்கு எப்போது தெரியும் என கூற அதற்கு அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள். அப்பொழுது மீனா நடந்த அனைத்தையும் கூறுகிறார். செந்தில் தன்னிடம் காசு கேட்டதாகவும் யாருக்கு என கேட்ட பொழுது இது மாதிரி  சொன்னார் அதனால் மாமாவிடம் திட்டு வாங்க நான் தயாராக இல்லை எனக் கொடுக்கவில்லை என கூறுகிறார்.

அடுத்த காட்சியில் பாண்டியன் வெளியே நின்று கொண்டு பேசிக்கொண்டிருக்கும் பொழுது பணத்தை இனிமேல் யாருக்கும் தெரியாமல் எடுக்க கூடாது என கூறுகிறார். எப்படி கூட்டிப் பார்த்தாலும் 16,000 வருகிறது மீதி பத்தாயிரம் எங்கே என கேட்க அதற்கு பாண்டியன் அவசரப்பட்டு அம்மா கிட்ட இருந்து திருடுனியா இல்லை எங்கேயாவது பொருளை வித்தையா என கேட்கிறார் அதற்கு கதிரின் மாமா அவன் ஏற்கனவே ஒரு ஐயாயிரம் சேவிங் வைத்திருந்தான் அதனை தான் கொடுத்தான் எனக் கூறுகிறார்.

எப்படியாவது பணத்தை நான் கொடுத்து விடுகிறேன் என கூற அதற்கு பாண்டியன் எனக்கு பணம் பிரச்சனை கிடையாது நீங்க ஒழுக்கமா வளரணும் என்பது போல் பேசுகிறார். மற்றொரு காட்சியில் தங்கமயில் சரவணன் இடம் புலம்பி கொண்டிருக்கிறார் என்னால் தான் இவ்வளவு பிரச்சனையும் என கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் எல்லாருக்கும் சப்போர்ட் பண்ண ஆள் இருக்காங்க எனக்கு மட்டும் நீங்க சப்போர்ட்டே பண்ணலையே என பேசுகிறார் அதற்கு சரவணன் எல்லா பிரச்சனையும் உன்னால தான் நீ மட்டும் ஒழுங்கா கவனிச்சிருந்தா இந்த பிரச்சினையை நடந்திருக்காது என பேசுகிறார்.

தங்கமயில் சாப்பிடாமல் இருப்பதால் ராஜி மற்றும் மீனா இருவரும் சாப்பிட அழைக்கிறார்கள் அப்பொழுது தங்கமயில் நான் வேண்டுமென்றே செய்யவில்லை என சமாதானமாக பேசுகிறார். உடனே கதிர் மாமா அக்கவுண்டில் இருந்து பணம் எடுத்து இருப்பார் என எனக்கு தெரியாது என பேச அப்பொழுது ராஜி தங்கமயில் இடம் கதிர் தான் பணம் கொடுத்தான் என்பது தெரியுமா என கேட்க தங்கமயில் தெரியும் என கூறுக அப்பொழுது எல்லாம் தெரிந்து கொண்டு தான் இது மாதிரி கதிருக்கு சப்போர்ட் செய்யலையா என ராஜி கேள்வி எழுப்புகிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.

Exit mobile version