பிரசாந்த் பற்றி அனைத்து உண்மைகளையும் கக்கிய அவரின் மனைவி.! ஜீவா கதிருக்கு மீனாவால் தான் விடிவுகாலம்.! பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய முழு எபிசோட்.

Pandian stores today episode October 3 : பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட்டில் ஜனார்த்தனனை போட்டு தள்ள பிரசாந்த் முயற்சி செய்கிறார் அதனால் ஜனார்த்தனன் இருக்கும் அறைக்கு வந்து ஆக்சிஜன் மாஸ்கை ரிமூவ் பண்ண பார்க்கிறார். அந்த சமயத்தில் மீனா வருகிறார் இங்கு என்ன செய்கிறீர்கள் என கேட்க பிரசாந்த் நீங்க வெளியில போனீங்களா அதனால மாமாவுக்கு துணையாக இருக்கலாம் என்று வந்தேன் என கூறுகிறார். அது மட்டும் இல்லாமல் போகும்பொழுது இந்த கஷ்டம் எல்லாம் கொஞ்ச காலம் தான் மாமா சீக்கிரம் முடிச்சிடலாம் என்ன பேசுகிறார்.

இதனால் மீனாவுக்கு சந்தேகம் வந்தது உடனே வீட்டிற்கு சென்று பிரசாந்த் மனைவி தன்னுடைய தங்கையிடம் விசாரிக்கிறார். பிரசாந்த் ஏன் இன்னும் ஹாஸ்பிடலில் இருக்கிறார் என கேட்க அவர டிஸ்சார்ச் பண்ண சொல்லிட்டாங்க ஆனா எதுக்காக அங்க இருக்கார் என்று எனக்கே தெரியல எல்லாம் எப்ப போவாங்கன்னு நினைக்கிறாரு. அவரோட நடவடிக்கையே சுத்தமா சரியில்லை நகை கடை ஜவுளி கடைன்னு பஸ்ட் சொன்னாங்க கல்யாணத்துக்கு முன்னாடி இப்ப என்ன இருக்குன்னு தெரியல எதையுமே என்னால கண்டுபிடிக்க முடியல என்ன.

அதுமட்டுமில்லாமல் திடீர்னு ஒரு கோடி ரூபா பணம் எடுத்துட்டு வராரு யாரு பணம்னே தெரிய மாட்டேங்குது அப்புறம் திடீர்னு பார்த்தா நகையை அடகு வைக்கணும் என்கிறார். எதுவுமே எனக்கு புரியல எனக் கூறுகிறார் அந்த சமயத்தில் மீனா சந்தோஷமா தானே இருக்க என கேட்க அதுவும் எனக்கு தெரியல எனக்கு கூறுகிறார் பிரசாந்த் மனைவி.

இதனால் சந்தேகம் வந்த மீனா உடனடியாக ஹாஸ்பிடலுக்கு கிளம்புகிறார் அங்கு அவரின் அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். மற்றொரு பக்கம் முல்லை ஐஸ்வர்யா கண்ணன் தனம் என யாரும் சாப்பிடாமல் இருக்கிறார். அதனால் கண்ணனை அழைத்துக் கொண்டு சாப்பாடு வாங்கிக் கொண்டு அனைவரிடமும் கொடுத்து சாப்பிட கூறுகிறார் மூர்த்தி. கண்டிப்பான ஜீவாவையும் கதிரையும் வெளிய எடுத்துடுவேன் என் மேல் நம்பிக்கை இருந்தா சாப்பிடுங்க என  பேசி சாப்பிட வைக்கிறார்.

மற்றொரு பக்கம் பிரசாந்த் மீனா மற்றும் அவரின் அம்மாவிடம் நீங்க போங்க மாமாவை பார்த்துக்கிறேன் நீங்க ஏன் தேவையில்லாம கஷ்டப்படுறீங்க அப்புறம் உங்களுக்கு ஏதாவது ஆயிட போகுது எனக் கூறுகிறார் உடனே மீனா நீங்க போமா நான் பார்த்துக் கொள்கிறேன் என மீனா சொல்ல பிரசாந்த் அதிர்ச்சி அடைகிறார் நீங்க எதுக்கு இங்க கஷ்டப்பட்டுகிட்டு  அதான் நான் இருக்கேன்ல ரெண்டு பேருமே போங்க என கூற பரவால்ல நானே பாத்துக்குறேன் எனக் கூறிவிடுகிறார் மீனா.

pandian stores
pandian stores

மீனாவிற்கு பிரசாந்த் மேல் டவுட்டு வந்ததால் நர்ஸ் அவர்களிடம் விசாரிக்கிறார் இவர் ஏன் இன்னும் டிச்சார்ச் ஆகலை என கேட்கிறார் அதுதான் எனக்கும் தெரியல அவர் டிசார்ஜ் பண்ண சொல்லிட்டாங்க ஆனா இன்னும் இங்கேயே இருக்காரு என நர்ஸ் கூறுகிறார் இதனால் மீனாவுக்கு சந்தேகம் அதிகரிக்கிறது அந்த சமயத்தில் கண்ணன் வந்து அண்ணா உங்க கூட இருக்க சொன்னாரு ஹாஸ்பிடல் இருக்க சொன்னாரு எனக்கு பேசுகிறார்.

அதுமட்டுமில்லாமல் நீங்க ஜீவாவையும் கதிர்  அண்ணனையும் தப்பா நினைக்கிறீங்க அவங்க இதை மாதிரி செய்வாங்களா ஒரு காலத்திலும் அது மாதிரி செய்யவே மாட்டாங்க நீங்க பேசுனது முல்லை அன்னிக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு என பேசிக் கொண்டிருக்க நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு கண்ணா என்னால இப்ப எத பத்தியும் யோசிக்க முடியாது என பேசுகிறார் நாளைக்கு அண்ணனோட கேஸ் வருகிறது அது உங்களுக்கு தெரியும் தானே என பேசுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.