ராஜியின் குட்டு வெடித்தது.. பாண்டியனை பார்த்து நாக்கை புடுங்கிட்டு சாவது போல் கேள்வி கேட்ட ராஜ்ஜியின் அப்பா.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சமீபத்திய எபிசோடில் தங்க மலர் சரவணன் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது எதர்ச்சியாக புகைப்படங்களை அனுப்பி விடுகிறார் இதனால் வீட்டில் உள்ளவர்கள் அந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சடைகிறார்கள்.

ஆரம்பத்தில் கதிர், செந்தில், பழனி மூவரும் புகைப்படத்தை பார்க்கிறார்கள் பிறகு அந்த சமயத்தில் பாண்டியன் வர போனை எடுத்துக் கொண்டு வரச் சொல்கிறார் போனை எடுத்துக் கொண்டு கொடுத்ததும் புகைப்படத்தை பார்த்து அவரும் அதிர்ச்சடைகிறார்.

அதே போல் மற்றொரு பக்கம் அரசி, தங்கமயில் அனுப்பிய புகைப்படத்தை பார்த்துவிட்டு ராஜி மற்றும் மீனாவிடம் கூறுகிறார். உடனே கோமதி புகைப்படத்தை பார்த்துவிட்டு இதெல்லாம் நீ பார்க்க கூடாது போ என பேச இதெல்லாம் பார்த்து விட்டேன் என அரசி கூறி விடுகிறார்.

மீனா மற்றும் ராஜி இருவரும் பாண்டியனை பார்த்து நாங்கள் புகைப்படம் அனுப்பியதற்கு எம்புட்டு பேச்சு பேசுறீங்க இப்ப என்ன சொல்றீங்க என்பது போல் குத்தி காட்டுகிறார்கள். இதனால் பாண்டியன் என்ன பேசுவது என்று தெரியாமல் அனுப்பிவிட்டு வெளியே செல்கிறார். புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் ராஜி டியூஷன் எடுக்கும் வீட்டிலிருந்து இருவர் ராஜியின் அப்பா வீட்டிற்கு வருகிறார்கள்.

அப்பொழுது இந்த பொண்ணு தான் டியூஷன் எடுத்துக் கொண்டிருக்கிறார் எனக் கூற ராஜியின் அப்பா மற்றும் சித்தப்பா அதிர்ச்சி அடைகிறார்கள். அது மட்டும் இல்லாமல் ராஜியின் அம்மா நகையை ராஜி எடுத்துக்கொண்டு சென்றதையும் கண்டுபிடித்து விடுகிறார்கள் இதனால் ராஜியின் அம்மாவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார்கள்.

வெளியே வந்து பாண்டியனை பார்த்து நகையை எடுத்துக்கொண்டு இவர்களிடம் கொடுத்த அந்த காசுல தான் இவங்க சொகுசா வாழ்கிறார்களா என ராஜிய பார்த்து கேட்க பாண்டியன், ராஜியை பார்த்து என்ன சொல்கிறார் உங்க அப்பா, இதெல்லாம் உண்மையா என கேட்க ஆமாம் என தலையை ஆட்டுகிறார் அதே போல் டியூஷன் எடுப்பதையும் கேட்கிறார் அதற்கும் தலையை ஆட்ட பாண்டியன் முகம் வாடுகிறது அனைவரும் திட்டிக் கொண்டிருக்கிறார்கள் பாண்டியனை, பாண்டியன் தலைகுனிந்து நிற்கிறார் இத்துடன் ப்ரோமோ முடிகிறது.