தங்கமயில் குடும்பத்தின் வண்டவாளம் பாண்டியனுக்கு தெரிந்தது.. திருமணம் நடைபெறுமா அல்லது தடை பெறுமா…

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சமீபத்திய எபிசோடில் கதிரை குமார் சீண்டியதால் ராஜி அதற்கு தக்க பதிலடி கொடுத்தார் ராஜி இந்த நிலையில் அடுத்ததாக பாண்டியன் குடும்பத்தில்  பத்திரிக்கை அனைவரும் வைத்துக் கொண்டிருக்க திடீரென பாண்டியன் இந்த வாரம் ஜவுளி கடைக்கு ஜவுளி போட போகலாம் என கூறுகிறார் உடனே பெண் வீட்டாரையும் கூப்பிடுகிறார்கள். பெண் வீட்டார்கள் பாண்டியனுக்கு செலவுக்கு மேல் செலவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் பாண்டியன் விழி பிதுங்கி நிற்கிறார்.

அடுத்த காட்சியில் ஒரு வழியாக திருமணம் நடைபெற இருக்கிறது இந்த சமயத்தில் தங்கமயில் அப்பா அம்மா மிகவும் பிரமாண்டமாக கிளம்பி ரெடியாக இருக்கிறார்கள் மாப்பிள்ளை வீட்டார் வருகின்ற நேரத்தில் இரண்டு கடன்காரர்கள் தங்கமயில் அப்பா அம்மாவிடம் கொடுத்த காசை எப்பொழுது திரும்பி தருவீர்கள் என கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள் அது மட்டும் இல்லாமல் இன்று பணத்தை வாங்காமல் இங்கிருந்து நகர மாட்டேன் என கூறுகிறார்கள்.

தங்க மயிலின் அப்பா அம்மா இருவரும் கெஞ்சிய படி எங்க பொண்ணுக்கு திருமணம் திருமணம் முடியட்டும் கண்டிப்பாக உங்கள் பணத்தை கொடுத்து விடுகிறோம் எங்களுக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள் என பேசுகிறார்கள் ஆனால் கடன் கொடுத்தவர்கள் அதெல்லாம் எதுவும் பண்ண முடியாது இன்னைக்கு பணத்தை வாங்காமல் இங்கிருந்து செல்ல மாட்டோம் என கூறி விடுகிறார்கள் அந்த சமயத்தில் பாண்டியன் குடும்பம் வருகிறது இவர்கள் தான் அந்த மாப்பிள்ளை குடும்பமா என கடன்காரர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

உடனே பணத்தை கொடுத்தால் தான் இங்கிருந்து நகர்வோம் என வேகமாக பேசுகிறார்கள். இதனால் தங்கமயில் அழுது கொண்டே இனிமே கல்யாணம் நடந்த மாதிரி தான் என  புலம்பி கொண்டிருக்கிறார் இத்துடன் இன்றைய ப்ரோமோ முடிகிறது.