அய்யோ என் வாழ்க்கையே போச்சே என தலையில் அடித்துக்கொண்டு அழும் தங்கமயில்.! உன்ன விட்டு போகமாட்டேன் என சத்தியம் பண்ணி சொல்லும் சரவணன்..

பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில்  தங்கமயில் வீட்டில் கடன் கொடுத்தவர்கள் வந்து பணம் கேட்டு சத்தம் போடுகிறார்கள். உடனே தங்கமயில் பயந்து இனிமே அவ்ளோதான் எல்லாம் முடிஞ்சிடுச்சி என அழுது கொண்டு சரவணனுக்கு போன் பண்ணி ஏதாவது பிரச்சனைனா என்ன விட்டுட்டு போயிடுவீங்களா மாமா எனக் கேட்கிறார். அதற்கு சரவணன் செந்திலிடம்  மயில் இப்படி சொல்கிறார் என கேட்கிறார்.  உடனே செந்தில் எந்த சூழ்நிலையிலும் உன்னை விட்டுட்டு போக மாட்டேன் என சொல்லுங்கள் என சொல்கிறார்.

ஏன் அப்படி சொல்ல சொன்னா என சரவணன் கேட்கிறார் அதற்கு செந்தில் பொண்ணுங்க  இப்படி தான் எப்ப வேணாலும் நான் அழகா இருக்கேனா என்ன விட்டுட்டு போயிட மாட்டியே என கேள்வி கேட்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி கேட்கும் போது இந்த பதிலை சொல்லணும் என செந்தில் சொல்கிறார்.

அதனைத் தொடர்ந்து பெண் அழைப்பதற்காக  தங்கமயில் வீட்டுக்கு மீனா, குழலி, கதிர், ராஜி, என அனைவரும் சென்று இறங்குகின்றனர். அப்பொழுது கடன் கொடுத்தவர்களை எப்படி இந்த கல்யாணம் நடக்குதுன்னு நான் பாக்குறேன் என சண்டை போடுகின்றனர். உடனே அதை பார்த்த மீனா குழலி கதிர் என அனைவரும் ஏன் இப்படி பேசுறாங்க என கேட்கின்றனர்.

உடனே தங்கமயில் அம்மா சமாளித்து உள்ள வாங்க பேசிக்கலாம் என சொல்லி அழைத்து செல்கிறார். அந்த நேரத்தில் தங்க மயிலின் அப்பா கடன் கொடுத்தவர்களிடம் காலில் விழாத குறையாக என் கிட்னி வித்தாவது இன்னும் ஒரு வாரத்துக்கு அப்புறம் உங்க கடனை அடைச்சிடுறேன் என் பொண்ணு கல்யாணத்தை நிறுத்திடாதீங்க எனக் கெஞ்சி அழுது அவர்களை அனுப்பி வைத்து விடுகிறார்.

மேலும் மீனா மட்டும் குழலி என்ன ஆச்சு ஏன் அவங்க இப்படி வெளியே நின்னு சண்டை போடுறாங்க எனக் கேட்க அதற்கு தங்கமயில் அம்மா இல்ல அவங்க வந்து தங்க மயிலுக்கு மொரக்காரங்க அவங்க பையன தான் தங்கமயில் கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்க அவன் ஒரு குடிகாரன் அவனுக்கு தங்க மயில புடிச்சிருக்கு ஆனா  இவளுக்கு பிடிக்கல அதனால நாங்க கட்டிக் கொடுக்கல இப்ப இவளுக்கு கல்யாணம்னு தெரிஞ்சதும் வந்து சண்டை போடுறாங்க என பொய் சொல்கிறார்.

உடனே இதைக் கேட்ட குழலி மற்றும் மீனா கல்யாணத்துலையும் இது மாதிரி வந்து மண்டபத்துல ஏதாவது முன்னாடியே சண்டை போட்டு அசிங்கப்படுத்த மாட்டாங்களா என கேட்கிறார். உடனே தங்கமயில் நம்ம இல்ல எல்லாத்தையும் நாங்க சரி பண்ணிடுவோம் என சொல்லி மழுப்பி விடுகிறார். கீழே அனைவரும் உட்காரும்போது  ராஜியின் புடவையின் மீது  கதிர் உட்கார்ந்துவிடுகிறார். ராஜியோ புடவையை இழுத்து இழுத்து பார்க்கிறார். உடனே கதிரிடம்  ராஜி புடவை என சொல்கிறார் ஆமாம் புடவை தான் இப்ப என்ன என கேட்க அதுல தான் நீ ஒக்காந்து இருக்க என சொல்கிறார். உடனே கதிர் புடவையை எடுக்கிறார்.

அதனை தொடர்ந்து  தங்க மயிலை பார்க்க ரூமுக்கு குழலி மற்றும் மீனா என அனைவரும் செல்கின்றனர்.  அப்பொழுது தங்கமயில் முகத்தை பார்த்ததும் என்ன ஒரு மாதிரி இருக்க என சந்தேகப்பட்டு கேள்வி கேட்கின்றனர். ஆத்தோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.