ஆர்வக்கோளாறில் தங்கமயில் செய்த வேலை.. பழனிக்கு விபூதி அடித்த ராஜி.. மறைத்து வைத்திருந்த புகைப்படத்தை பார்த்த கதிர்..

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில்  ராஜி கோச்சிங் கிளாஸ் செல்வதாக கூறிவிட்டு கிளம்புகிறார் அப்பொழுது பழனி அவரை பார்த்துவிட்டு உன் கோச்சிங் கிளாஸ் எங்கே இருப்பதாக சொன்னா என கேட்டுவிட்டு அவரே பஸ் ஸ்டாண்ட் என்று சொன்னாயே என பதிலும் கூறுகிறார்.

உடனே பழனி வா நானே உன்னை இன்று டிராப் செய்கிறேன் எனக் கூற ஆனால் ராஜி எப்படியாவது எஸ்கேப் ஆக வேண்டும் என உங்களுக்கு ஏன் வீண் சிரமம் என கூற ஆமாம் ஆமாம் அப்புறம் மாமா லேட்டா வந்த உடனே திட்டுவாரு என ராசிக்கு சப்போர்ட் செய்வது போல் பேசுகிறார்.

ஆனால் அந்த சமயத்தில் கோமதி அதெல்லாம் மாமா எதுவும் சொல்ல மாட்டாங்க நீ அழைத்துக் கொண்டு போ எனக் கூறுகிறார். மீனா என்ன சொல்வதென்று புரியாமல் ஆமா ஆமா அதெல்லாம் எதுவும் சொல்ல மாட்டாங்க அழைச்சிட்டு போங்க என பேசுகிறார்.

ராஜியும் பழனி வண்டியில் உட்கார்ந்து கொண்டு போகும் பொழுது எப்படி இவரிடம் இருந்து தப்பிப்பது என யோசித்துக் கொண்டே போகிறார் உடனே என் பிரண்டு வீடு வந்துடுச்சு நானும் அவளும் சேர்ந்து போறோம் என ஏதோ சாக்கு சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகுகிறார்.

மற்றொரு காட்சியில் வீட்டில் அனைவரும் ஒன்றாக ஒரே இடத்தில் இருக்க அப்பொழுது பாண்டியன் வருகிறார் பாண்டியன் வேலை செய்யும் ஆட்கள் இடத்தில் ஒரு ரூம் போட சொல்லி இருக்கிறேன் என பேச அதற்கு அங்கு எல்லாம் வேண்டாம் எப்படி அன்னியை அங்கு தங்க வைக்க முடியும் என கதிர் மற்றும் செந்தில் இருவரும் பேசுகிறார்கள்.

உடனே அந்த சமயத்தில் தங்கமயில் ஆன்லைனில் புக் பண்ணிக்கலாம் ரூம் என கூறுகிறார் அதனை கேட்ட பாண்டியன் அப்படியா என பேசுகிறார் உடனே தங்கமயில் ஒரு ஹோட்டலை காட்டி இது நல்லா இருக்கா என கேட்டுவிட்டு புக் செய்ய முயற்சி செய்யும்பொழுது எப்படி ஐயாயிரம் ரூபாய்க்கு ரூம் சாப்பாடு எல்லாம் கிடைக்கும் காட்டுப்பாக்கும் என அனைவரும் பார்க்கிறார்கள் ஆனால் மீனாவுக்கு இது ஏதோ போங்கு ஆட்டம் என்பது போல் தெரிந்து விடுகிறது.

இப்ப சொன்னால் சரி வராது நம்மள தான் தப்பா பேசுவாங்க அதனால சொல்ல வேண்டாம் என பேசுகிறார் ஆனாலும் தங்கமயில் கொஞ்சம் கூட பொறுமையாக இல்லாமல் உடனடியாக ரூம் புக் பண்ணி விடுகிறார். அடுத்த காட்சியில் கோமதியிடம் சென்று ரூம் விஷயத்தில் மாமா பல்பு வாங்க போகிறார் என கூறுகிறார் மீனா. ஆனால் கோமதி அதெல்லாம் எதுவும் ஆகாது மாமா காசு விஷயத்தில் கரெக்டாக இருப்பார் என பேசுகிறார்.

அப்படி இருக்கும் நிலையில் மற்றொரு பக்கம் இரவு ஆகிவிட்டதால் கதிர் மற்றும் செந்தில், பழனி மூவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பத்தா தான்  நம் கூட இருந்தால் நன்றாக இருக்கும் என பேச அதற்கு செந்தில் மற்றும் கதிர் ஆமாம் எனக் கூறுகிறார்கள் பிறகு பேசிவிட்டு கதிர் உள்ளே செல்கிறார் அப்பொழுது ராஜி தன்னுடைய தோழிகளுடன் பேசிவிட்டு புக்கை டேபிளில் வைக்க போகும் பொழுது ஒரு புகைப்படம் கீழே விழுகிறது அதனை பார்த்த கதிர்  அதிர்ச்சி அடைகிறார்.

அதே போல் அந்த புகைப்படம் கதிர் விட்டான் என ராஜியும் அதிர்ச்சி அடைகிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.