யோ பாண்டியா நீ எல்லாம் ஒரு மனுஷனா..! மருமகள் கண் முன்னாடியே பெத்த மகன்களை அசிங்கப்படுத்திறியே..

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பாண்டியன் சேரில் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு நபரின் பெயரை சொல்லி அவர் போன் பண்ணினாரா என கேட்க அதற்கு பாண்டியனின் மச்சான் எனக்கு பண்ணவில்லை செந்திலுக்கு தான் பண்ணுனார் என கூறுகிறார் உடனே செந்திலை அழைக்க கோமதி செந்திலை கூப்பிடுகிறார்.

செந்தில் வந்தவுடன் அவர் போன் பண்ணினாரா என கேட்க அவர் பண்ணினார் நான் எல்லாத்தையும் முடித்து விட்டேன் என கூற அதை என்னிடம் ஏன் சொல்லவில்லை என கேட்கிறார் மறந்துவிட்டேன் என கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் கடையில் பொருட்களை இறக்கியாச்சா என கேட்க இன்னும் இறக்கவில்லை ஆனால் லோடு வந்துவிட்டது கடைக்கு தேவையானது எடுத்து வைத்து விட்டேன் என செந்தில்  பாண்டியனிடம் சொன்னாலும் அதற்கு சரியான பதிலை கொடுத்து வருகிறார் செந்தில்.

செந்தில் இப்படி பாண்டியன் போடும் பாலை சிக்ஸ் அடிப்பதால் அனைவரும் ஷாக் ஆகிறார்கள் மீனாவும் சிரிக்கிறார் உடனே பணம் கொடுத்தாச்சா எனக் கேட்க  அதை நீங்கதான் கொடுக்கணும் என கூறுகிறார் இன்று 10:00 மணிக்கு வந்து வாங்கிக் கொள்கிறேன் என கூறினார் என செந்தில் பேச, அதற்கு பத்து மணிக்கு நான் எங்கேயாவது கிளம்பிட்டா எப்படி பணம் தர முடியும் பாண்டியன் குடும்பம் பணம் தரலைன்னா வெளியில பேசிக்க மாட்டாங்களா என கூறி பாண்டியன் இந்த சமயத்தில் செந்திலை திட்டுகிறார்.

கதிர் வரும்பொழுது 12:00 மணிக்கு மேல வீட்டுக்குள்ள நுழைய கூடாதுஎன பாண்டியன் கூற வேலை இருந்ததாக கதிர் சொல்ல அவன் பொய் சொல்லுவான் எங்கேயாவது சுத்திட்டு இருந்து இருப்பான் பத்து மணிக்குள்ள வீட்டுக்கு வந்து விட வேண்டும் என பாண்டியன் கதிரையும் திட்டுகிறார் இதனால் கதிர் வந்துடலாம் வந்துடலாம் என சொல்லிவிட்டு வெளியே கிளம்புகிறார்.

நான் அவன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன் எங்கேயாவது கொஞ்சமாவது மதிக்கிறானா என பேசுகிறார் பாண்டியன், மேலும் கோமதி பசங்களை இப்படி திட்டலாமா? ஏன் இப்படி கருச்சி கொட்டுறீங்க என கேட்க சரவணன் மாதிரி எல்லாரும் இருந்துட்டா எனக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது அவங்க அவங்க அப்பா பிள்ளைகள் கிட்ட பொறுப்பு கொடுத்துட்டு நிம்மதியா இருக்காங்க ஆனா இன்னும் நான் இந்த பால்வாடி பிள்ளைங்களுக்கு உழைத்துக் கொண்டு இருக்கிறேன் என பேசுகிறார்.

உடனே பாண்டியன் கிளம்ப வாங்க அனைவரும் சாப்பிடலாம் என கோமதி அழைத்து செல்கிறார் அப்பொழுது தங்கமயில் ஓவர் ஆக்டிங் பண்ண தண்ணி புடிக்க வேண்டும் என தங்க மயிலை வெளியே அனுப்புகிறார். உடனே செந்தில் மற்றும் கதிரிடம் அப்பா திட்டினதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டாம் என கேட்கிறார் அவர் திட்டுனா திட்டிட்டு போகட்டும் அத பத்தி நாங்க கவலைப்படுவதில்லை என பேசுகிறார்கள். இருவரும்

ஆனால் சரவணன் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அப்பா உங்களை திட்டுவது என கூறுகிறார்கள். உடனே செந்திலின் மாமா உங்களுக்கு எல்லாம் வெட்கமாக இல்லையா ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பையும் ஒரு கண்ணுக்கு வெண்ணையும் வைக்கிறாரு உங்க அப்பா என கூற  எங்க அண்ணன்தான என புகழ்கிறார்கள் அதுல எங்களுக்கு பெருமைதான் என பேசுகிறார் ஆனால் நீங்கள் மூணு பேரும் ஒத்துமையா இருக்கணும் பிரிஞ்சிடாதிங்க என கோமதி வருத்தப்படுகிறார்.

கதிருக்கு சட்னி போட உடனே  கோமதியை தடுத்து நிறுத்துகிறார் இன்னும் கோமதி மீது கோபத்தில் தான் இருக்கிறார் கதிர். உடனே மருமகளிடம் பேசிய கோமதி பாசமாக பேசுவது போல் செய்கிறார் இந்த புடவை நல்லா இருக்கு என கேட்க நான் தொவைத்து இன்று சாயந்திரம் உங்களுக்கு கொடுத்து விடுகிறேன் என கிண்டலடிக்கிறார் உடனே எதைக் கேட்டாலும் ப்ரீயா தந்துடுவியா என கோமதி கேட்க இல்ல உங்க புடவையில் நாலு நான் எடுத்துக்க போறேன் என கூறுகிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.

நாளைய எபிசோடில் தங்கமயில் உருட்டி கொண்டு இருக்க இன்னைக்கு மயிலுக்கு எனக்கு ஒரு பாடம் புகட்டு கிறேன் என கோமதி கூறுகிறார் சரவணனுக்கு வேணா சாப்பாடு கொண்டு போகட்டும் ஆனா அவருக்கு தேவையில்லை எனவும் கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் இனிமே தங்கமயில் இடம் இருந்து  கொத்து சாவி போகப்போகிறது அவங்க கிட்ட தான் பணமும் போகப் போகிறது இனிமே உங்க பசங்க எல்லாம் உங்களை டம்மியா தான் பாக்க போறாங்க என மீனா மற்றும் ராஜி மாற்றி மாற்றி ஏற்றி விடுகிறார்கள் கோமதியை  இத்துடன் நாளைய ப்ரோமோ முடிகிறது.