பாண்டியனின் அராஜகத்திற்கு பதிலடி கொடுத்த மச்சான்கள். ராஜி சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மீனா..

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் விறுவிறுப்பான கதை கதத்துடன் தற்பொழுது சென்று கொண்டிருக்கிறது வீட்டிற்கு தெரியாமல் ராஜி டியூஷன் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

அதேபோல் மற்றொரு பக்கம் ராஜி நகையை எடுத்துக் கொண்டு போனது முத்துவுக்கு தெரிய வருகிறது ஆனால் அதனை ராஜியின் அம்மா தான் கொடுத்ததாக ஒப்புக்கொள்கிறார். அப்படி இருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் முத்து தன்னுடைய பொண்டாட்டியை அடித்து நகை எங்கே போனது என கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஒரு வழியாக நகையை கொடுத்ததை ஒப்புக்கொள்கிறார்கள் மற்றொரு பக்கம் ராஜி டியுஷன்  எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கு ராஜியின் சித்தப்பா வருகிறார் அப்பொழுது பிள்ளைகளை பார்த்துக்கொண்டு நல்லா படிங்க என சொல்லிவிட்டு வெளியே செல்கிறார்.

எதர்ச்சியாக உள்ளே வந்த ராஜியின் சித்தப்பா ராஜி இங்கு டியூஷன் எடுப்பதை பார்த்து கேவலமாக பேசுகிறார்.

நம்மிடம் கைகட்டி கொண்டு வேலை பார்க்கும் ஒருவரின் வீட்டில் டியூஷன் எடுக்கிறாயா உனக்கெல்லாம் வெக்கமாவே இல்லையா உன்னை எல்லாம் எதுக்கு நாங்க தலையில் தூக்கி வைத்து ஆடணும் என கேவலமாக பேசுகிறார்.

அந்த சமயத்தில் வீட்டிற்கு வந்த ராஜியின் சித்தப்பாவிற்கு முத்து நகை விஷயத்தை சொல்ல பதிலுக்கு டியுஷன் விஷயம் தெரிகிறது உடனே பாண்டியன் வெளியே கிளம்பும் நேரத்தில் ராஜி வருகிறார் இப்பதான் வந்தியா மாமா என பேசிவிட்டு வெளியே கிளம்புகிறார் அப்பொழுது ராஜியின் அப்பா சித்தப்பா என அனைவரும் வெள்ளையும் சொல்லையுமா போறானே வெக்கமா இல்லையா என கேட்க கோபம் வருகிறது பாண்டியனுக்கு.

அந்த பக்கம் ராஜி மீனாவிடம் சித்தப்பாவுக்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது என கூறுகிறார் இதனால் மீனா வாயைப் பிளந்து அதிர்ச்சி அடைகிறார் ஆனால் பாண்டியன் கோபப்பட்டு ராஜியின் அப்பா சித்தப்பாவிடம் சண்டைக்கு போகிறார் அப்பொழுது நகையை வாங்கிக்கொண்டு டியூஷன் எடுக்க அனுப்பியிருகீர்களே என வார்த்தையை விடுகிறார் இதனால் பாண்டியன் அதிர்ச்சி அடைகிறார் இத்துடன் எபிசோடு முடிகிறது.

மீண்டும் இந்த பிரச்சனையில் ராஜி மற்றும் மீனாதான் பாண்டியனிடம் திட்டு வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.