கதிர் பேசியதில் என்ன தப்பு இருக்கு பாண்டியா இப்படி அடிக்கிறீங்க.. பரபரப்பின் உச்சத்தில் பாண்டியன் ஸ்டோர்..

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் வீட்டில் நடந்த பிரச்சனைகளை பற்றி மயில் மற்றும் சரவணன் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது மயில் நம்ம வீட்டில் நடப்பது மட்டும் சுவாரசியமாக இருக்கிறது என்னதான் சண்டை வந்தாலும் அடுத்த ஐந்து நிமிடத்தில் சமாதானம் ஆகி விடுகிறார்கள் ஆனாலும் மாமாவுக்கு ராஜி மேலையும் மீனா மேலையும் தனி அக்கறை எனவும் கூறுகிறார் தங்கமயில்.

அதற்கு சரவணா அப்படியெல்லாம் கிடையாது உன்கிட்ட சண்டை போட்டாலும் அப்படித்தான் அப்பா நடந்து கொள்வார் உன்னையும் சமாதானப்படுத்த ஏதாவது வாங்கி தருவார் என பேசுகிறார். நான் எதுக்கு மாமாவை எதிர்த்து பேச போறேன் மாமாவுக்கு தெரியாம செய்யப் போறேன் என கூறுகிறார். ஆனாலும் ராஜி என்ன பேசினது என்னால மறக்க முடியவில்லை எனக் கூற நீ எதுக்கு தேவையில்லாம எல்லாரும் விஷயத்தையும் தலையிட என கேட்கிறார்.

மீனாவும் வேலைக்கு போகுது ராசியும் காலேஜுக்கு போகுது ஆனா நீ மட்டும் வீட்டிலேயே இருக்க பேசாம நீயும் வேலைக்கு போ என கூற மயிலுக்கு தூக்கி வாரி போடுகிறது. இல்ல இல்ல நான் வேலைக்கு போயிட்டா வீட்ல உள்ளவர்களை யார் பார்த்துப்பா அதனால் நான் வேலைக்கு போக மாட்டேன் வீட்ல உள்ளவங்கள தான் பாத்துப்பேன் என கூறி சமாளிக்கிறார் அது மட்டும் இல்லாமல் இதுக்கு மேல முழிச்சிட்டு இருந்தா அவ்வளவுதான் நம்பமான கப்பலரிடம் என இழுத்து போர்த்திக் கொண்டு தூங்குகிறார்.

அடுத்த காட்சி பாண்டியன் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது கதிர் லேட் ஆக எழுந்து வருகிறார் உடனே கதிரிடம் இனிமே இந்த சாப்பாடு கொடுக்கிற வேலைக்கு போக வேண்டாம் ஒழுங்கா காலேஜ் படிச்சு முடிச்சிட்டு கடையில வந்து வேலைய பாக்கணும்னா கூறுகிறார் உடனே கதிர் அதெல்லாம் வர முடியாது எனக் கூறுகிறார்.

நான் எப்படி சொன்னேனோ அதே மாதிரி இந்த மாசமும் பத்தாயிரம் தந்து விடுவேன் அது என்னோட பிரச்சனை ஆனா உங்க கிட்ட கடையில வந்து அசிங்கப்பட எனக்கு விருப்பம் இல்லை ஏற்கனவே இங்க அசிங்கப்படுத்துவது பத்தாதா என பேசுகிறார் இதனால் பாண்டியனுக்கு கோபம் வந்து கதிரை அறைந்து விடுகிறார். உடனே அனைவரும் சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.

வெளியே போன பாண்டியன் வண்டியில் போகும்பொழுது கோமதியின் தம்பி பாண்டியனுக்கு அறிவுரை கூறுகிறார் அந்த பொண்ணு முன்னாடியே அப்படி அடிகிரிங்களே அந்த பொண்ணு இனிமே கதிர மதிக்குமா மீனா முன்னாடியும் இது மாதிரி செய்யலாமா அப்புறம் கதிருக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்குமா என எடுத்து கூறி புரிய வைக்கிறார் இதனால் பாண்டியன் முகம் மாறுகிறது இத்துடன் எபிசோட் முடிகிறது.