மீண்டும் பாண்டியனிடம் உண்மையை மறைத்து சிக்கப் போகும் மருமகள்கள்.. கோமதிக்கு வந்த சந்தேகம்..

pandian stores 2 September 12 : பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சமீபத்திய எபிசோடில் ராஜி டியூஷன் எடுத்ததால் ராஜி வீட்டில் இருந்து திட்டுகிறார்கள் இதனால் பாண்டியன் டென்ஷன் ஆகி ராஜி மற்றும் மீனாவை திட்டு விடுகிறார்.

அதுமட்டுமில்லாமல் ராஜி மற்றும் மீனா விடம் பேசாமல் அமைதியாக இருந்து வந்தார் மீனா ஆபீஸ் போயிட்டு வருகிறேன் எனக் கூறினார் ஆனாலும் பாண்டியன் கண்டு கொள்ளாமல் தன் வேலையை பார்த்து வந்தார். இதனால் மீனா பாண்டியன் வேலை செய்யும் கடைக்கு சென்று எனக்கு அப்பா அம்மா நினைப்பே  வராததற்கு காரணம் நீங்கதான் நீங்களே பேசாமல் இருந்தால் எப்படி என கேள்வி எழுப்புகிறார்.

அது மட்டும் இல்லாமல் மீனா அழுததால் பாண்டியன் ஒரு வழியாக நான் இனிமேல் பேசுகிறேன் நான் பேசாம எங்க போகப்போறேன் என கூறுகிறார் இதனால் மீனா சந்தோஷமாக ஆபீஸ் கிளம்புகிறார்.

இந்த நிலையில் புதிதாக ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோ வீடியோவில் மீனா, தங்கமயில், ராஜி மூவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது இந்த மாதம் மாமாவுக்கு பிறந்தநாள் வருகிறது அதனால் அமர்க்களமாக கொண்டாட வேண்டும் என கூறுகிறார்கள்.

நல்லா சமைக்கிறோம், வீடு டெக்கரேஷன் பண்றோம் கேக் வெட்டுவோம் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள் கிப்ட் வாங்குகிறோம் என மீனா கூறிய பொழுது எப்பொழுது வாங்க போகிறோம் என ராஜி கேட்கிறார் இப்பொழுதே போகலாம் என கூறிவிடுகிறார் மீனா.

அந்த சமயத்தில் பாண்டியன் வருகிறார், உடனே பாண்டியன் எங்கு செல்கிறீர்கள் என கேட்க உடனடியாக ராஜி தங்கமயில் அக்கா வீட்டிற்கு செல்கிறோம் என பொய் சொல்லுகிறார்கள் இதனால் கோமதி ஏதோ இவங்க மூணு பேரும் பண்றது சரி இல்லை என சந்தேகப்படுகிறார் அப்பாடா தப்பிச்சோம் என மூன்று பேரும் கிளம்புகிறார்கள் இத்துடன் ப்ரோமோ முடிகிறது.

Exit mobile version