மாமனாரிடம் சொல்லி மாமியாருக்கு விபூதி அடித்த தங்கமயில்… என்ன அத்தை இது போதுமா.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சமீபத்திய எபிசோடில் தங்கமயில் பாண்டியனிடம் எதை சொல்லக்கூடாதோ அதனை சொல்லி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இதனால் தங்கமயில் மீது அனைவரும் கோபத்தில் இருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் கதிர் நேருக்கு நேராக உங்களுக்கு தேவையில்லாத விஷயத்தில் நீங்கள் தலையிடுவதாக மூஞ்சியில் அடித்தது போல் கூறிவிடுகிறார்.

அப்படி இருக்கும் நிலையில் செந்தில் பீச்சில் சந்தோஷமாக இருப்பதையும் பாண்டியனிடம் போட்டு கொடுத்து பெரிய பூகம்பம் வெடித்தது இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளதாக இந்த ப்ரோமோ வீடியோவில் மீனா கோமதியிடம் கிச்சனில் தங்கமயில் உருட்டிக் கொண்டிருக்கிறார் என கூறுகிறார் இன்னைக்கு அவ எப்படி சாப்பாடு எடுத்துக் கொண்டு போகிறார் என்று பார்ப்போம் என கோமதி கூறுகிறார்.

அதற்கு ராஜி நீங்க சொன்னா மட்டும் எப்படி கேப்பாங்க என கேட்கிறார் அதற்கு மீனா அத்தை சொன்னா கேட்டு தான் ஆக வேண்டும் என ஏற்றி விடுகிறார். உடனே அந்த சமயத்தில் மயில் சாப்பாடை மூட்டை கட்ட உடனே கோமதி நீ சரவணனுக்கு வேணா சாப்பாடு எடுத்துக் கொண்டு போ ஆனால் அவருக்கு தேவை இல்லை என கூறுகிறார்.

அதற்கு தங்கமயில் சரி இருங்க மாமா கிட்ட கேட்டு விடலாம் என தங்கமயில் பாண்டியனுக்கு போன் பண்ணுகிறார் உடனே பாண்டியன் உனக்கு கஷ்டமா இருந்தா வேண்டாம் என கூறுகிறார் பார்த்தீர்களா, மாமா சாப்பாடு எடுத்துட்டு வர சொல்றாரு என கூறிவிட்டு செல்கிறார் இதனால் கோமதி மூக்கு உடைந்து நிற்கிறார் இத்துடன் ப்ரோமோ முடிகிறது..

Exit mobile version