திருமணதிற்கு முன்பே திருட்டுத்தனமாக தங்கமயில் செய்த வேலை.. கையும் களவுமாக சிக்கிய சரவணன்.. கல்யாணம் பெண்ணை தூக்க வந்த ரவுடிகள்…

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் சரவணன் தங்க மயிலுக்கு போன் பண்ணி இப்பொழுது எப்படி இருக்கிறது என கேட்கிறார் பரவாயில்லை எனக் கூற  நீ ஒழுங்கா சாப்பிடுவதே கிடையாது அதனால் தான் மயக்கம் வருகிறது கொறிச்சி கொறிச்சி  சாப்பிட்டா எப்படி உடம்பில் ஒட்டும் ஒழுங்கா நல்லா சாப்பிடணும் என பேசிக்கொண்டு இருக்க அது மட்டும் இல்லாமல் இப்பொழுது நான் உன்னை வந்து பார்க்கணும் ரெண்டு நிமிஷம் பேசிட்டு உடனே போயிடுறேன் என பேச தங்கம்யில் முடியாது என ஆரம்பத்தில் கூறுகிறார் பிறகு ஓகே வா என கூறி விடுகிறார்.

சரவணன் தன்னுடைய தம்பிகளுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாய் எழுந்து செல்கிறார் ஆனால் அவர்கள் தம்பி தூங்காமல் சரவணன் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள் திடீரென சரவணனை பின்தொடர்ந்து போகிறார்கள் சரவணன் தங்கமயில் அரை என நினைத்துக் கொண்டு போன் பண்ணி பார்க்கிறார் ஆனால் போனை எடுக்காமல் தங்கமயில் இருக்க பிறகு தங்கமயில் அம்மா அதெல்லாம் பேசக்கூடாது இப்பொழுது என போனை பிடுங்கி வைத்துக் கொள்கிறார்.

உடனே சரவணன் மணமகள் அறையை தட்டுகிறார் அங்கு ராஜூ மற்றும் மீனா உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது கதவை தட்டும் சத்தம் கேட்டு வெளியே வருகிறார்கள் வெளியே சரவணன் தங்கமயில் எனக் கூற உடனே என்ன ஆச்சு மாமா என மீனா மற்றும் ராஜு கேட்கிறார்கள் திருமணம் செய்வதற்கு முன்பே திருட்டுத்தனமா பொண்ண பார்க்க வந்தீங்களா என பேசுகிறார்கள். அதெல்லாம் இல்ல சும்மா என சரவணன் மழுப்பி கொண்டு  இந்த விஷயத்தை என்னுடைய தம்பி கதிர் மற்றும் செந்தில் இடம் சொல்லக் கூடாது என சொல்லிவிட்டு திரும்பும் பொழுது இருவரும் பக்கத்தில் நிற்கிறார்கள்.

என்ன அண்ணா இங்கெல்லாம் என இருவரும் கேட்க வெக்கப்பட்டு கொண்டு சரவணன் ஓடுகிறார். செந்தில் மற்றும் கதிர் இருவரும் மணமேடையில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது பாண்டியன் வருகிறார் நீங்க இன்னும் தூங்கலையா என பாண்டியன் கேட்க அதற்கு செந்தில் கதிர் இல்லப்பா இனிமே தான் தூங்கணும் என பேசுகிறார் உடனே நீங்க தூங்கலையா அப்பா என செந்தில் கேட்கிறார். மற்றொரு பக்கம் குமார் பெண்ணை கடத்துவதற்கு ஆள் வைத்துள்ளார் அந்த ரவுடிகள் கதவை திறந்து பார்க்க ராஜி மற்றும் மீனா தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

உடனே குமாரிடம் போன் பண்ணி இரண்டு பெண்கள் இருக்கிறார்கள் என கூற ரெண்டு பேரையும் தூக்கிட என பேசுகிறார். மேலும் குமார் வீட்டில் அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இப்ப பேசி என்ன பண்றது கல்யாணம் நடக்கக்கூடாதுனா பொண்ண தூக்கி தான் ஆகணும் என குமார் சொல்ல ராஜியின் அப்பா ஓங்கி அரைக்கிறார் நம்ம வீட்டுப் பிள்ளையை ஒழுங்கா வளர்க்க முடியல அடுத்தவங்க வீட்டு பிள்ளை நம்ம தூக்கிறதா என பேசுகிறார் எனவும் கூறுகிறார்.

இப்படியே போக குமார் வெளியே வந்ததும் பெண்ணை தூக்கி விடு என கூறுகிறார் அந்த சமயத்தில் ரவுடிகள் தங்கமயில் வெளியே வருவதால் ஒளிந்து கொள்கிறார்கள் இவர் தான் கல்யாண பெண் என ரவுடிகள் முடிவு செய்துள்ளார்கள் ஆனால் இப்பொழுது யாரை தூக்குவார்கள் என்பது தெரியவில்லை நாளைய எபிசோடில் என்ன என்பது தெரிய வரும்.