பாண்டியனிடம் கோல் மூட்டி விடும் மயில்… நாரதர் வேலைக்கு பத்து பொருத்தமும் பக்காவா இருக்கே..

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோட்டில் ராஜி டியூஷன் எடுக்கப் போவதை எப்படியாவது பாண்டியனிடம் சொல்ல வேண்டும் என முயற்சி செய்கிறார் அதனால் கோமதியிடம் சொல்லி எப்படியாவது மாமாவிடம் சொல்லி விடுங்கள் என கூறுகிறார் கண்டிப்பாக நான் இன்னைக்கு சொல்லிவிடுகிறேன் என அவரும் வாக்குறுதி கொடுக்கிறார்.

ஆனால் வீட்டிற்கு வந்த பாண்டியன் மிகவும் டென்ஷனாக இருக்கிறார் எவனும் காசை தரல பொருளா வாங்கிட்டு போரானே தவிர எவனுமே காசு தர்ற மாதிரி ஐடியாவே கிடையாது என கோபப்பட கோமதி என்னாச்சு என கேட்கிறார் நடந்த விவரத்தை சொல்ல கோமதி சொல்ல வந்ததை இப்போது சொல்ல வேண்டாம் என மூடி மறைக்கிறார்.

அதே போல் தங்க மயிலிடம் டியூஷன் எடுப்பது குறித்து நீங்கள் தயவு செய்து சொல்ல வேண்டாம் நாங்களே சொல்லிக் கொள்கிறோம் என ராஜி மற்றும் மீனா  இருவரும் கூறுகிறார்கள் நீங்க இவ்வளவு சொன்னதுக்கு பிறகு நான் எதற்கு சொல்ல போகிறேன் என மயிலும் கூறுகிறார்.

அடுத்த காட்சியில் வீட்டில் உப்புமா செய்துள்ளார் கோமதி அது தெரியாமல் ராஜியின் சித்தப்பா என்ன ஐட்டம் கம்மியா இருக்கு இன்னைக்கு பிரியாணியா என கேள்வி எழுப்புகிறார் உடனே கோமதி இன்னைக்கு உம்மா சட்னி மட்டும்தான் எனக் கூறுகிறார் அதற்கு மயில் என்னை விட்டிருந்தால் நிறைய சமைத்து இருப்பேன் என கூற அரசி அன்னியவே சமைக்க சொல்ல வேண்டியது தானே நீங்க எதுக்கு சமைச்சீங்க என கேள்வி எழுப்புகிறார்.

உங்களுக்கெல்லாம் அவ்வளவு ஆயிடுச்சா என்ன இருக்கோ அத சாப்பிடுங்க என பாண்டியன் கூறுகிறார் அதற்குள் அனைவரும் சாப்பிட்டு விட்டு அவரவர்கள் வேலையை பார்க்கும் பொழுது மேலே கதிரின் மாமா கதரிடம் சொல்லி பரோட்டா வாங்கி வர வைத்துள்ளார். பாண்டியனுக்கு தெரியாமல் கதிர், செந்தில், சரவணன் என அனைவரும் பரோட்டா சாப்பிட ரெடியாகிறார்கள். அப்பொழுது மீனா மட்டும் ராஜி வந்து பார்த்து விடுகிறார்கள் உடனே அவர்களையும் கூட்டத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள்.

பரோட்டாவை பிச்சி தின்று கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் மயில் வந்து சரவணன் அவர்களிடம் மாமா பேச்சை நீங்களாவது கேட்கணும் கண்டிப்பா நீங்க இதை திங்க கூடாது வாங்க கீழே போகலாம் என அழைத்துச் செல்கிறார் சரவணன் போய் படுத்தவுடன் மயிலிடம் பாண்டியன் தண்ணீர் கேட்கிறார் தண்ணீர் கொடுத்தவுடன், பாண்டியன் மயிலுவிடம் மற்றவர்கள் எங்கே வீடு அமைதியாக இருக்கிறது என கேட்க மேலே பரோட்டா சாப்பிடுகிறார்கள் என நாசுக்காக போட்டுக் கொடுக்கிறார்.

மேலே சென்று அனைவரும் பரோட்டா சாப்பிடுவதை பார்த்துவிட்டு பாண்டியன் கத்து கிறார் உடனே கதிர் நா வாங்கிக் கொண்டு வந்ததுதான் என் காசில்தான் வாங்கிக் கொண்டு வந்தேன் என தெனாவட்டாக பேச பாண்டியன் அமைதியாக செல்கிறார். பிறகு கோவிலுக்கு மயில் சென்று விட்டு வருகிறார் அப்பொழுது எதர்ச்சியாக பாண்டியனை பார்க்க உனக்கு வேலைக்கு போகணும்னு ஏதாவது ஐடியா இருக்கா என பாண்டியன் கேட்கிறார் ஆனால் மயிலு எனக்கு வீட்டை பார்க்க வேண்டும் வீட்டில் உள்ளவர்களை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறிக் கொண்டிருக்கிறார்.

மேலும் பேசிய மயில் மீனா அக்கா வேலைக்கு போறாங்க ராஜி படிச்சுக்கிட்டு வேலைக்கு போறாங்க என போட்டுக் கொடுக்கிறார் அதன் பிறகு டியூஷன் எடுக்கிறார் என்பதையும் நாசுக்காக போட்டு கொடுத்து வீட்டில் பிரளயத்தை உருவாக்குகிறார் மயிலு எது எப்படி இருந்தாலும் நாரதர் வேலையை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார் தங்கமயில் என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.