தங்கத்தை உரசி பார்ப்பார்களா.. தங்கமயில் கேட்ட கேள்வி அதிர்ச்சி அடைந்த கோமதி.. இனி நிகழப்போவது என்ன

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சமீபத்திய எபிசோடில் கதிர் வீட்டு செலவுக்காக பாண்டியனிடம் காசு கொடுக்கிறார் இதனால் கோமதி கோபப்பட்டு ஏண்டா இப்படி பண்ணிட்ட என திட்டுகிறார் அது மட்டும் இல்லாமல் அதற்கு புரிய வைக்கும் விதமாக கோமதியிடம் கதிர் அப்பா உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்க வீட்ல செலவு பண்ணட்டும் நெனச்சாரா அவரு தானே எல்லா செலவும் பண்ணனும்னு நீ நெனச்ச அதே மாதிரி தான் ராஜ்கும் இருக்கும் என பேசுகிறார்.

உடனே தங்கமயில் நடந்த விஷயத்தை தன்னுடைய அம்மாவிடம் கூற அவர் ஏதோ பக்காவாக பிளான் போடுகிறார் அது மட்டும் இல்லாமல் விருந்திற்கு தன்னுடைய சித்தி அழைத்ததாக கூற தங்கமயில் நான் மாமாவிடம் கேட்டுவிட்டு சொல்கிறேன் என கூறி விடுகிறார். மேலும் தங்கமயில் சரவணனுக்காக சமைத்து வேலை செய்யும் இடத்திற்கு எடுத்து செல்கிறார்.

அப்படி இருக்க தற்பொழுது ஒரு புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் வீட்டில் இருந்த பித்தளைக் குடத்தை காணும் என தங்க மயில் நாடாகம் ஆடுகிறார் அதனால் வீட்டில் நகை இருக்கிறது என கோமதி கூற உடனே லாக்கரில் வைத்து விடலாம் என தங்கமயில் பேசுகிறார் அதற்கு பாண்டியன் எதற்கு உங்க அம்மா பேரில் வைக்க வேண்டும் கோமதி பெயரிலேயே லாக்கர் இருக்கிறது அங்கே வைத்துவிடலாம் என கூறுகிறார்.

மேலும் தங்கமயில் லாக்கரில் வைக்கும் போது தங்கத்தை உரசி பார்க்க மாட்டாங்களா என கேள்வி எழுப்புகிறார் ஏன் இப்படி எல்லாம் கேட்கிற என மற்றவர்கள் கேட்க தங்க மயிலுக்கு அதிர்ச்சடைகிறது ஒருவேளை தான் சிக்கி விடுவோமோ என பயத்தில் இருக்கிறார்..

Exit mobile version