எதுக்கு பாண்டியா கதிர்கிட்ட சீன் போட்டீங்க.. உங்கள பத்தி எல்லாம் புட்டு புட்டு வச்சுட்டாங்களே.. தங்க மயிலுக்கு டோஸ் விட்ட கோமதி மற்றும் ராஜி

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பெரியண்ணா வேலை செய்றாரு சின்ன அண்ணா கடையில வேலை செய்றாரு எல்லாரும் வீட்டுக்கு ஹெல்ப் ஃபுல்லா இருக்காங்க ஆனா என்னால மட்டும் எதுவுமே தரமுடியாம இருக்க முடியாது அதனால் இந்தாங்க பணம் என 6 ஆயிரத்தை எடுத்துக் கொடுக்கிறார் பாண்டியன் கோவப்பட்டு இவங்க ரெண்டு பேரும் வீட்ல இருக்க எவ்வளவு செலவாகும் என கேட்கிறார்.

கோமதி அவன் சின்ன பையன் எதுக்காக  இப்படி கேக்குறீங்க என பேசுகிறார் நீ சொல்ல மாட்டியா என பாண்டியன் மிரட்டுகிறார் உடனே தங்கமயில் வர தங்கமயில் இடம் கேட்க 8 டு 10,000 செலவாகும் என கூறுகிறார் 6 ஆறாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு என்ன பேச்சு பேசுறான் என பேசுகிறார் வைராக்கியம் வார்த்தையில் இருக்க கூடாது செயலில் இருக்கணும் என பாண்டியன் கூற இந்த மாசம் இவ்வளவுதான் கொடுக்க முடியும் அடுத்த மாசம் என் வைராக்கியத்தை நீங்க பார்க்க தான் போறீங்க என கதிர் பேசுகிறார்.

உடனே அனைவரும் கதிரை திட்டுகிறார்கள் அப்பாவை ஏன்டா எதிர்த்து பேசுற என பேசுகிறார்கள். இந்த நிலையில் கோமதி கதிரிடம் தனியாக சென்று எதற்காக இப்படி பேசுகிறாய் என கேட்க நீ கல்யாணம் பண்ணிட்டு வந்த புதுசுல உங்க வீட்ல செலவு பண்ணனும்னு எதிர்பார்த்தியா இல்ல அப்பா செலவு பண்ணனும்னு எதிர்பார்த்தியா என கேள்வி கேட்கிறார் அதற்கு அப்பா தான் செலவு பண்ணுவார் என எதிர்பார்த்தேன் என கூறுகிறார் அப்ப ராஜியும் அப்படித்தானே இருக்கணும்னு நினைப்பா.

மத்த ரெண்டு பேரும் கெத்தா இருக்கும்போது ராஜி மட்டும் ஏன் அப்படி இருக்கணும் நான் பணம் கொடுத்தாதானே அவளை கொஞ்சமாவது மதிப்பாங்க என பேசுகிறார் அதுமட்டுமில்லாமல் ராஜி அடிக்கடி அப்பாகிட்ட காசு கேக்குறது அவர் அசிங்கப்படுத்துவது எனக்கு சுத்தமா பிடிக்கல எப்படி  கல்யாணம் நடந்தாலும் இப்ப அவ என் பொண்டாட்டி அதனால அவளுக்காக நான் கொஞ்சமாவது சம்பாதித்து தான் ஆகணும் என பேசுகிறார்.

இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை வெளியே நின்று ராஜி ஒட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார் இவ்வாறு பேசியது ராஜிக்கு ஒரே சந்தோஷமாக இருக்கிறது. உடனே கோமதி உட்கார்ந்து கதிர் இப்படி பேசிட்டானே என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது மீனா அதெல்லாம் ஒரு தப்பும் கிடையாது அந்தக் கதிர் அவன் பொண்டாட்டிக்காக இவ்வளவு பண்றான் என பேசும்பொழுது அதுல என்ன தப்பு இருக்கு என மீனா பேசுகிறார் அப்பொழுது ராஜி வருகிறார் ராஜி குஷியில் வரும் பொழுது எல்லாத்தையும் கேள்விப்பட்டேன் ஒரே குஷியா இருக்கியா என மீனா கேட்கிறார்.

கதிர நான் என்னமோ நெனச்சேன் ஆனா அவனுக்குள்ளையும் ஒரு ஈரம் இருக்கிறது என பேசுகிறார். அதற்கு கோமதி என்ன தான் இருந்தாலும் அப்படி பேசினது தப்பு தான் என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது தங்கமயில் வருகிறார் ஓவர் பில்டப் பண்ணி தங்கமயில் ஆமா பேசியது தப்பு தான் எங்க வீட்டில் எல்லாம் நான் எதிர்த்தே பேசமாட்டேன் இந்த அளவு தைரியம் எல்லாம் யாருக்குமே இருக்காது என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது ராஜி அவர் ஒன்னும் தப்பா பேசலையே காசு தானே செலவுக்கு கொடுத்தார் என பதிலுக்கு பேசுகிறார்.

அப்படித்தானே அத்தா என கேட்க கோமதியும் ஆமாம் என தலையை ஆட்டி விடுகிறார் உடனே தங்க மயிலுக்கு மூஞ்சியில் அடித்தது போல் ஆகிவிடுகிறது சோகமாகிறார் கோமதி உடனே போய் ரெஸ்ட் எடுக்கிறேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறார். மற்றொரு பக்கம் கடையில் அனைவரும் நடந்த விஷயத்தை பேசிக் கொண்டிருக்கும் பொழுது பாண்டியன் வருகிறார் உன் தம்பிக்கு என்னவாம் செந்திலிடம் கேட்க காலேஜ் நிறுத்தினா அவ்வளவுதான் என பாண்டியன் பேசுகிறார் அதற்கு செந்தில் அவன் நிறுத்துறேன்னு சொல்லவே இல்லையே என மனதுக்குள் பேசுகிறார்.

எல்லாமே அவன் இஷ்டத்துக்கு நடந்துக்கலாம்னு பார்க்கிறானா கல்யாணம் கூட பண்ணிக்கிட்டா என பேச செந்தில் இதுக்கு மேல இருந்தா நம்ம பக்கம் பாஞ்சுருவாங்க என டெலிவரிக்கு கிளம்புவதாக பாக்ஸ் எடுத்துக்கொண்டு செல்கிறார் அதேபோல் செந்தில் மாமாவும் கிளம்புகிறார் அப்பொழுது வேலை செய்யும் நபர் இருக்கும் பொழுது பாண்டியனிடம் உன் சின்ன வயசு நினைச்சு பார்த்தியா என கேட்கிறார் அதற்கு பாண்டியன் சிரிக்கிறார்.

இந்த கதிர் அப்படியே என்ன மாதிரியே இருக்கிறான் நானும் சின்ன வயசுல இப்படித்தான் இருப்பேன் என சொல்லி சிரிக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.