செந்திலிடம் உண்மையை உடைத்த மீனா.. சரவணன் தலையில் இடியை இறக்கும் தங்கமயில்.. கதிருக்காக வேலைக்கு போக முடிவெடுத்த ராஜி..

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சமீபத்திய எபிசோடில் பாண்டியன் தங்கமயிலை பெருமையாக பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் சாப்பாடு விஷயத்தில் தங்க மயிலை பெருமையாக பேசிவிட்டு ராஜி மற்றும் மீனாவை குத்தி காட்டுகிறார் இதனால் கோமதி கோவப்பட்டு இத்தனை நாள் நான் சமைச்சனே என கேள்வி கேட்க ஒத்த ஆளாக பத்து பேருக்கு சமைப்பது எவ்வளவு பெரிய கஷ்டம் தெரியுமா என பாண்டியன் பேசுகிறார்.

இந்த விஷயம் நடந்து முடிந்ததும் கோமதி இதுக்கு அப்புறம் எதுக்காவது என்ன கூப்பிடட்டும் அப்புறம் பேசிக்கொள்கிறேன் என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது பாண்டியன் தங்கமையிலை கூப்பிட்டு சின்ன வேலை இருப்பதாக கூறுகிறார் இதனால் கோமதி கோபப்படுகிறார்.  மீனா ரூமில் இருக்க உடனே செந்தில் சோகமாக வந்து உட்காருகிறார் அப்பொழுது மீனா சென்னைக்கு போறத பத்தி மாமாவிடம் பேசினீங்களா என மீனா கேட்க அதற்கு செந்தில் இன்னும் பேசவில்லை அவர்தான் வேற எதையோ பேசிட்டு இருந்தாரே எப்படி பேசுறது என கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் காலையில் பேசிவிடலாம் என பேச மறக்காம காலையில் பேசிவிட வேண்டும் என பேசுகிறார்கள்.

இந்த நிலையில் செந்தில் மீனாவிடம் உனக்கு கஷ்டமா இல்லையா என கேட்க எதுக்கு கஷ்டமா இல்லையான்னு கேக்குறீங்க என பதிலுக்கு கேட்கிறார் அதற்கு செந்தில் அப்பா அண்ணியை புகழ்ந்து பேசி உன்னையும் ராஜியையும் குத்தி காட்டினாரே அதை பத்தி தான் எனக் கேட்க எனக்கு ஒன்னும் கஷ்டமா தெரியல நான் ஒன்னும்  நல்ல மருமகளா பேர் எடுக்கணும்னு அவசியமே கிடையாது அதுமட்டுமில்லாமல் நல்ல மருமகள் கிரீடத்த தலையில வச்சுக்கிட்டு சுத்தவ போறோம் எனக்கு வேலை குறைந்தால் சரி என பேசுகிறார்.

அதற்கு செந்தில் எப்படி பொண்டாட்டி இப்படி எல்லாம் இருக்க இதுவே வேற ஒரு பொண்ணா இருந்தா என்ன நடக்கும் தெரியுமா என பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் அப்பொழுது மீனா அவங்க ரொம்ப டிராமா போடுறாங்கன்னு தெரியுது அத பத்தி நான் பேச விரும்பவில்லை என கூறுகிறார் மேலும் பேசிய மீனா எனக்கு எந்த ஒரு கஷ்டமும் தெரியல என கூறுகிறார் அப்பொழுது செந்தில் ஒரே ஒரு முறை என்னை மாமா என்று கூப்பிடு என சொல்ல அதற்கு மீனா அதெல்லாம் என்னால முடியாது எனக்கு ஒரு மாதிரியா இருக்கு என பேசுகிறார்.

மற்றொரு பக்கம் சரவணன் கட்டிலில் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது தங்கமயில் வெட்கத்துடன் வந்து நிற்கிறார் அப்பொழுது அவர் மிகவும் வெட்கப்பட சரவணன் கட்டிலில் உட்கார சொல்கிறார் உடனே முதல் இரவில் நடந்ததற்கு சாரி என கேட்க அதை பத்தி நான் எத்தன டைம் சொல்றது தூக்கம் வந்தா தூங்க வேண்டியது தான் இதுல என்ன இருக்கு என பேசுகிறார் சரவணன்.

அப்பொழுது தங்கமயில் கையை சரவணன் தொட உடனே வெடுக்கென எடுத்து கொள்கிறார் அப்பொழுது தங்கமயில் இதற்கும் சாரி கேட்க அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லை என சரவணன் பேசுகிறார் உடனே தங்கமயில் சரவணனிடம் நான் ஒன்னு கேட்பேன் உண்மைய சொல்றீங்களா என கேட்கிறார் அதற்கு நீ கேளு சொல்கிறேன் என சரவணன் சொல்ல நீங்க முதலில் காதலிச்சிங்களே அந்த கதையை என்கிட்ட சொல்ல முடியுமா என பேசுகிறார் அதற்கு சரவணன் அதிர்ச்சி அடைகிறார் இப்ப எதுக்கு அது என கேட்கிறார் ப்ளீஸ் சொல்லுங்களேன் என தங்கமயில் வற்புறுத்துகிறார். ஆனால் சரவணன் சொல்ல மறுக்கிறார்.

மற்றொரு பக்கம் கதிர் கணக்கு பார்த்து பணத்தை ராஜியிடம் செலவுக்கு வைத்துக் கொள் என கொடுக்க ராஜி வேண்டாம் என மறுக்கிறார் பிறகு கதிர் உனக்கு பஸ்ஸுக்கு போக காலேஜில் ஏதாவது வாங்கி சாப்பிட புக் வாங்க எல்லாத்துக்கும் தேவை என கூறுகிறார். உடனே வாங்கிக்கோ என்று சொல்ல ராஜு வாங்கிக் கொள்கிறார் உடனே ராஜு உனக்கு வேலைக்கு போயிட்டு படிக்க கஷ்டமா இருக்கு என்றால் நான் வேணா வேலைக்கு போகட்டுமா என கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Exit mobile version