மாமனாரை கைக்குள் போட்டுக்கொண்டு வத்தி வைத்த தங்கமயில்.. எரி மலையாக வெடித்த பாண்டியன்.. சிதைய போகும் குடும்பம்..

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் செந்தில் எப்படியாவது இன்று வெளியில் போய் விட வேண்டும் என முடிவு செய்து மீனாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் மீனாவிடம் சாரி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது பாண்டியம் மறுபடியும் போன் பண்ணுகிறார் பாண்டியன் போனை முதலில் அட்டென்ட் பண்ணாமல் இருந்த செந்தில் பிறகு மீனாவை வெளியே அனுப்பி வைத்துவிட்டு அட்டென்ட் செய்கிறார்.

அப்பொழுது பாண்டியன் போனை எடுக்க இவ்வளவு நேரமா நான் சொன்ன வேலையெல்லாம் முடிச்சிட்டியா இல்ல சும்மா ரூம்ல அடைந்து கிடகிறாயா என பேசுகிறார் அதற்கு செந்தில் அதெல்லாம் முடிச்சுட்டேன்பா அந்த ஒருவரை மட்டும் பார்க்க முடியவில்லை எனக் கூற அவர் கடையில் தான் இருந்தார் நீ புது நம்பரில் இருந்து கால் செய்ததால் அட்டென்ட் பண்ணவில்லையாம் இன்று போய் பார்த்துவிட்டு வா என கூறுகிறார்.

ஆரம்பத்தில் செந்தில் தயங்கி தயங்கி பேச ஏன் வெளியில் ஏதாவது ஊர் சுத்த போவனுமா என பாண்டியன் கேட்க இல்ல நான் போய் பாத்துட்டு வருகிறேன் என கூறி விடுகிறார். வெளியே வந்து மீனாவிடம் இன்னைக்கு நீ சீக்கிரம் வந்துரு நானும் வந்து விடுகிறேன் என பேசிவிட்டு செந்தில் வெளியே செல்கிறார் மீனாவும் சரி என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

மற்றொரு பக்கம் சரவணனிடம் தங்கமயில் டியூஷன் எடுக்கும் மேட்டரை பாண்டியனிடம் சொல்லி சண்டை வந்ததை சரவணனிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் கதிர் தம்பி உங்க வேலையை மட்டும் பார் என்று சொல்லிவிட்டார் என சரவணன் அவரிடம் சொல்லி அழுகிறார் மேலும் சரவணன் நீ எதற்கு இந்த டியூஷன் மேட்டரை அப்பாவிடம் ஏன் சொன்னாய் என கேட்க நான் எதர்ச்சியாக தான் சொன்னேன் என சமாளிக்கிறார்.

மேலும் தங்கமயில் நீங்க உங்க தம்பியை கேக்கணும் அண்ணி கிட்ட இப்படி எல்லாம் பேசக்கூடாதுன்னு சொல்லணும் இல்லனா வீட்ல யாரும் என்னை மதிக்க மாட்டாங்க என கூறுகிறார். அதற்கு சரவணன் அழாத நான் கேட்கிறேன் என சொல்லி சமாளிக்கிறார் அடுத்ததாக சாப்பாடு கேரியரில் எடுத்துக் கொண்டு பாண்டியனை பார்க்க போகிறார் அங்கு பாண்டியனிடம் பேசிவிட்டு சாப்பாடு பரிமாறும் நேரத்தில் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு பேசுகிறார் உடனே என்னாச்சு என கேட்க நான் உங்களிடம் டியூஷன் பற்றி சொன்னது யாருக்குமே பிடிக்கல எல்லாரும் என்ன ஒரு மாதிரியா பேசுறாங்க என்பது போல் பேசுகிறார்.

இதை என்கிட்ட மறைச்சது தப்பு இதுல உன் மேல கோபப்பட என்ன இருக்கு உன்ன பாத்தா பெருமையா தானே இருக்கணும் என பாண்டியன் பதிலுக்கு பேச நான் வீட்டுக்கு போயிட்டு பேசுகிறேன் என பாண்டியன் கூறுகிறார் அதற்கு வேண்டாம் இதுக்கும் நான் தான் காரணம் என்று என்னைய தான் திட்டுவாங்க என தங்கமயில் நாடகம் ஆடுகிறார். உடனே மீனா ஆபீஸிலிருந்து வந்து ரூமில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அப்பொழுது செந்தில் இன்னும் வரவில்லை.

செந்திலுக்கு போன் பண்ணி எப்பொழுது வருவாய் என ஒரு மணி நேரம் ஆகும் என செந்தில் கூறி விடுகிறார் இந்த சமயத்தில் ராஜி மீனாவிடம் போன் பண்ணி நடந்த அனைத்தையும் கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் ராஜி நாம என்ன தப்பு செஞ்சாலும் அதை பெரிய தப்பா சொல்றாங்க ஆனா தங்கமயில் எந்த தப்பு செஞ்சாலும் அதை பெருசாவே எதுவும் சொல்லவில்லை என கூறுகிறார்.

ஒருவேளை நாமளும் அரேஞ்ச் மேரேஜ் பண்ணி இருந்தா இந்த பிரச்சனை இருக்காது என நினைக்கிறேன் என்று மீனா கூற அதற்கு உங்களுக்கு அரேஞ்ச் மேரேஜ் ஐடியா கூட இருந்துச்சு ஆனா எனக்கெல்லாம் அதுக்கு வாய்ப்பே கிடையாது என பேசுகிறார் எப்படி இருவரும் மாறி மாறி தங்களுடைய கஷ்டங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் இத்துடன் எபிசோட் முடிகிறது.