மாமனாரை கொஞ்சம் கொஞ்சமாக தனது கட்டுக்குள் கொண்டுவரும் தங்கமயில்..! கோமதி உன் நிலைமை அவ்வளவு தானா..

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில் ராஜி டியூஷன் எடுப்பது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது இரண்டு தாய்மார்கள் குழந்தையை கூட்டிக் கொண்டு வந்து எப்பொழுது டியூஷன் அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார் இன்று மாலையே அனுப்பி விடுங்கள் எனவும் கூறுகிறார் அப்பொழுது ராஜியின் சித்தப்பா ராஜியை பற்றி புகழ்ந்து பேசுகிறார் அதேபோல் கோமதியும் வாத்தியாருக்கு பாடம் எடுப்பார் எனவும் புகழ்ந்து பேசுகிறார்.

இப்படி ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க அடுத்ததாக மற்றொரு பக்கம் மீனாவிற்கு செந்தில் ஐஸ் வைத்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது இரண்டு பேரும் வெளியே போகலாம் என கூறிக் கொண்டிருக்கிறார் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென ரொமான்ஸ் செய்ய ஆரம்பிக்கிறார்கள் அந்த சமயத்தில் நந்தி மாதிரி குறுக்கே போன் செய்து இருவரின் ரொமான்ஸை கெடுக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் செந்திலிடம் பாண்டியன் நீ சும்மா தானே இருப்ப அப்பொழுது இங்கு போய் அவரை சந்தித்து விட்டு வா என வாய்க்கு வந்தபடி பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் பல வேலைகளை கொடுப்பதால் மீனா கண்டுபிடித்து விடுகிறார் அப்பொழுது செந்தில் சோகமாக இருப்பதை பார்த்து உன்னை  மாமா நாலு வேலை விட்டு இருக்காங்க அதனால உன்கூட சாப்பிட வர முடியாது உன்னோட மீட்டிங் வரமுடியாது அவ்வளவுதானா என கேட்கிறார் அதற்கு செந்தில் ஆமாம் எனக்கு கூறுகிறார்.

எனக்கே கோவம் வருது உனக்கு கோவம் வரலையா என கேட்க இதெல்லாம் பழகிடுச்சு என பேசுகிறார் நீங்க போயிட்டு சீக்கிரம் வாங்க நாம பிளான நைட்டு பண்ணிக்கலாம் என பேசுகிறார்கள் மற்றொரு பக்கம் ராஜி வீடியோ பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்  அந்த வீடியோவை அரசியிடம் காட்ட பிறகு கோமதியும் வீடியோவை பார்த்து சிரிக்க அந்த சமயத்தில் தங்கமயில் இரண்டு கேரியர் எடுத்துக் கொண்டு சாப்பாடு வேண்டும் என கூற அதற்கு மாமாவுக்கும் சாப்பாடு எடுத்துக் கொண்டு போகிறேன் என கூறியுள்ளார்.

கோமதி எவ்வளவு சொல்லியும் தங்கமயில் கேட்பது போல் தெரியவில்லை சாப்பாடை எடுத்துச் செல்கிறார் சாப்பாடு எடுத்துக்கொண்ட சரவணன் இடம் கொடுத்துவிட்டு பிறகு கடைக்கு வருகிறார். கடைக்கு வந்த தங்கமயில் சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன் என கூற இது இன்னைக்கே கடைசியா இருக்கனும் இது அப்புறம் பழகிடும் என பேசுகிறார்கள் நீங்க எல்லாரும் அலையறதுக்கு  நான் ஒண்டி தானே நானே எடுத்துக் கொண்டு வருகிறேன் என கூறி விடுகிறார் அது மட்டும் இல்லாமல் கணக்கு வேணா நான் பாக்கட்டுமா என கேட்கிறார் இப்படி ஓவராக ஆக்சன் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

மேலும் சாப்பாடு பரிமாறிக் கொண்டிருக்கும் பொழுது ஒருவர் வருகிறார் அப்பொழுது முட்டை நான்கு இரண்டு துணி சோப்பு வேண்டும் என கேட்க ஐந்து முட்டையாக வாங்கிக் கொள்ளுங்கள் 30 ரூபாய் ஆகிவிடும் ஆக மொத்தம் 50 ரூபாய் என பேசுகிறார் அவரும்  சரியென கூறுகிறார் இதனால் பாண்டியன் தங்க மயிலை பார்த்து பெருமிதம் அடைகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.