குடும்பத் தலைவிக்காக அடித்துக் கொள்ளும் மாமியார் மருமகள்.! மயிலிடம் தோற்கப் போகும் கோமதி.?

சமையல் கட்டை நான் பார்த்துகிறேன் என்று கூறிய மயிலை காய்கறி வெட்டி கண்கலங்க வைத்துவிட்டார் கோமதி. அந்த சமயத்தில் ராஜி சமையல் கட்டு அறையில் உள்ளே வர அப்போது தனது தோள்பட்டையையும் புருவத்தையும் தூக்கி எப்படி சாதிச்சேன் என்று காட்டினால் கோமதி.

அதன் பிறகு சமையல் கட்டை விட்டு வெளியே வந்த ராஜிவை பார்த்து மீனா என்ன ஆச்சு என கேட்டால் அதற்கு ராஜி மீனாவிடம் சமையல் கட்டின் தலைவி யார் என இருவரும் அடித்துக் கொள்ளாத ஒரு குறையாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறினாள்.
அதன் பிறகு கதிருக்கு ராஜி மெசேஜ் செய்கிறாள் அதை பார்த்த மீனா ஏன் மெசேஜ் செய்ற கால் பண்ணி கேட்டா என்ன என கூறினால். ஏனென்றால் பாண்டியன் ஏற்கனவே லேட்டா வந்தால் கதவை திறக்க கூடாது என கூறியிருக்கிறார் அதனால் ராஜி கதிர் லேட்டா வந்தா கதவை தட்ட வேண்டாம் போன் அடிக்க சொல்வோம் என்று மெசேஜ் செய்திருந்தால்.

அதன் பிறகு மீனா கால் செய்ய சொன்னதும் கால் செய்து கதிரிடம் நீ தாமதமாக வர மாதிரி இருந்தால் எனக்கு கால் செய்துவிட்டு வா என கேட்டுக் கொண்டால். அதன் பிறகு கதிர் வீட்டுக்கு வந்த உடனே கால் செய்ய போனை எடுக்கும்போதே ராஜி கதவைத் திறந்து கதிரை உள்ளே அழைத்தால்.

அதன் பிறகு ராஜீவும் கதிரும் தூங்க சென்றபோது ராஜீவுக்கு கதிர் ஒரு பேனாவை கிப்ட் அளித்தான். இதைப் பார்த்து சந்தோஷப்பட்ட ராஜி என்ன செய்வது என்றே தெரியாமல் கதிரைப் பார்த்து ஒருவர் ரொமான்டிக் லுக்கு விட்டு தூங்கிவிட்டால். அதன் பிறகு மயில் தனது கணவன் சரவணனிடம் நேற்று நடந்தது பற்றியும் அத்துடன் சேற்று மீனாவை பற்றி கோலுமூட்டிவிட்டாள் அந்த புள்ளையா இப்படி செய்தது என சரவணன் யோசித்துக் கொண்டே இருக்கிறான். இத்துடன் பாண்டியன் ஸ்டோரின் இன்றைய எபிசோடு முடிகிறது…

Exit mobile version