பாண்டியன் சொன்னதை மறுத்த மீனா மற்றும் ராஜி.. மீண்டும் குடும்பத்தில் வெடித்த பிரச்சனை.!

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் பாண்டியன் மூன்று ஜோடிகளையும் ஹனிமூன் போயிட்டு வரக் கூறுகிறார் அதற்கு சரவணன் சந்தோஷத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது எழுந்து நின்று உண்மையாலும் சொல்றீங்களா அப்பா என கேட்கிறார் அட ஆமாண்டா இதுக்கு ஏன் எழுந்திருக்கிற ஒழுங்கா உட்கார்ந்து சாப்பிடு எனக் கூறுகிறார் பாண்டியன்.

அதே போல் மற்றவர்களும் சந்தோஷப்படுகிறார்கள் அந்த சமயத்தில் தங்கமயில் இடம் எங்கு போகலாம் என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என பாண்டியன் கூற சட்டென தங்கமயில் சென்னை என கூறுகிறார் சென்னையா என அரசி மற்றும் ராஜி மீனா என அதிர்ச்சி அடைய ஏன் உங்களுக்கு அங்க போக விருப்பம் இல்லையா என பதிலுக்கு தங்கமயில் கேட்கிறார் அதெல்லாம் ஒன்னும் இல்ல போகலாமே என மீனாவும் கூறிவிடுகிறார்.

பிறகு சரவணன் ரூமுக்கு சென்று விடுகிறார் அப்பொழுது தங்கமயில் வருகிறார்கள் சரவணன் வழக்கத்துக்கு மாறாக சந்தோஷமாக இருக்க தங்கமயில் அவரை பார்த்து என்ன ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க என பேசுகிறார். நான் கூட தம்பிகளெல்லாம் வராம கஷ்டமா இருக்கும் என நினைத்தேன் ஆனால் அப்பா திடீர்னு அப்படி சொல்வார் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என சரவணன் கூறுகிறார்.

உனக்கு ஏதாவது கஷ்டமா இருக்கா அவங்க எல்லாம் வருவதால் என சரவணன் கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லையே ஆனா கனிமூன் என்பது ரெண்டு பேர் மட்டும் போகணும் அப்பதான் நாம மனச ஒருத்தர் புரிஞ்சுக்கலாம் என தங்கமயில் கூறுகிறார் ஆனால் சரவணன் அதை எல்லாம் காதில் வாங்காமல் அதெல்லாம் பாத்துக்கலாம் போயிட்டு வந்துடலாம் என பேசுகிறார்.

ஆனால் தங்கமயில் ராஜி மற்றும் மீனாவுக்கு இதில் விருப்பமில்லை என்பது போல் தெரிகிறது மாமா சொன்னவுடன் அவர்கள் ரொம்ப சந்தோஷப்படவில்லை எனவும் கூறுகிறார் அப்படியெல்லாம் இல்லை என்னோட தம்பிகள் இப்படித்தான் பேசிட்டு இருப்பாங்க என சரவணன் ஆசையாக கூறுகிறார் மற்றொரு பக்கம் மீனா மற்றும் செந்தில் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது மீனாவிடம் செந்தில் எனக்கு சென்னைக்கு போக விருப்பமே இல்லை எனக் கூறுகிறார் உடனே மீனாவும் சந்தோஷப்படுகிறார்.

அப்ப என்றால் நீங்க உங்க அப்பா கிட்ட எனக்கு லீவு கிடைக்கவில்லை என்று சொல்லிடுங்க என பேசுகிறார் அதே போல் கதிர் ராஜி பேசிக்கொண்டிருக்கும் பொழுது இதே தான் அவர்களும் யோசிக்கிறார்கள் அதனால் அவர்களும் சென்னைக்கு வர மறுக்கிறார்கள் இந்த நிலையில் மீனா பேமிலி மற்றும் ராஜு ஃபேமிலி இருவரும் சென்னைக்கு போக மறுக்க அதனை பாண்டியனிடம் வந்து கூறுகிறார்கள் இதனால் பாண்டியன் கோபப்படுகிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.