தங்கமயில் தலையில் அணுகுண்டை வீசிய பாண்டியன்.. நாசுக்காக காரியத்தை சாதித்துக் கொண்ட ராஜி..

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் ராஜி மற்றும் மீனா இருவரும் ரூமில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது டியூஷன் எடுப்பது பற்றி என்ன யோசிக்கிறீர்கள் என கேட்க ராஜி அதெல்லாம் முடிவு பண்ணிட்டேன் இனிமே எடுத்தே தான் ஆக வேண்டும் என பிடிவாதமாக கூறுகிறார். உடனே எப்படியாவது அத்தை தனியாக இருக்கிறார்கள் கூறிவிடு என ராஜியிடம் மீனா சொல்ல உடனே வெளியே வருகிறார்கள்.

அப்பொழுது அரசிக்கு கோமதி தலை வாரிவிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த ஹேர் ஸ்டைல் நல்லா இருக்கிறதா என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது ராஜி இந்த டிரஸ்க்கு இந்த ஹேர் ஸ்டைல் சூப்பராக இருக்கிறது எனக்கூறுகிறார். மேலும் அந்த சமயத்தில் மீனா ராஜியிடம் சொல்லிவிடு எனக் கூற கோமதியிடம் ராஜி அக்கா மாதிரி கவர்மெண்ட் வேலைக்கு போக வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது அதனால் கோச்சிங் சென்டர் போகப் போகிறேன் என கூறுகிறார் இதனை மாமாவிடம் சொல்ல வேண்டும் எனவும் பதிலுக்கு கோமதியும் கூறுகிறார்.

அந்த சமயத்தில் தங்கமயில் வர எங்கு கோச்சிங் சென்டர் எப்பொழுது என விசாரித்துக் கொண்டிருக்கிறார் நன்றாக மாட்டிக் கொண்டோம் என ராஜி நினைக்க மீனா நீங்களும் வாங்க அந்த கோச்சிங் சென்டர் பார்த்துட்டு நீங்களும் சேர்ந்து கவர்மெண்ட் வேலைக்கு போகலாம் என மீனா கூற தங்கமயில் படபடப்புடன் அய்யய்யோ வீட்டு வேலை எல்லாம் யாரு பாக்குறது என்னால வர முடியாது என பேசுகிறார் உடனே மோட்டார் வழிந்து ஓடுகிறது நான் போய் மோட்டாரை நிறுத்தி விட்டு வருகிறேன் எனக் கூறிவிட்டு தப்பித்து ஓடுகிறார்.

பிறகு ராஜி மீனா இருவரும் சென்று கொண்டிருக்கிறார்கள் டியூஷன் எடுக்கும் வீட்டை அடைந்தவுடன் சாமி கும்பிட்டு விட்டு வீட்டிற்குள் செல்கிறார்கள் அப்பொழுது இரண்டு குழந்தைகளுக்கு டியூஷன் எடுக்கும் பொழுது அந்த இரண்டு குழந்தையும் அடித்துக் கொள்கிறார்கள் அதனை சமாளிக்க முடியாமல் ராஜி தினர உடனே மீனா அதட்டி அவர்களை அமைதியாக இருக்க கூறுகிறார். டியூஷன் எடுத்து முடித்துவிட்டு அடுத்த காட்சியில் அனைவரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள்.

அப்பொழுது மீனா சொல்லிவிடு என ராஜி இடம் சைகை காட்ட ராஜ்ஜியம் பாண்டியனிடம் கோச்சிங் சென்டர் போகப் போகிறேன் என கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் ஃப்ரீ கோச்சிங் சென்டர் தான் என கூற பாண்டியனும் ஓகே சொல்லிவிடுகிறார் அதேபோல் பாண்டியனும் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என கூறி இருந்ததால் என்ன விஷயம் என கேட்க சரவணன் லீவ் சொல்லியாச்சா என பாண்டியன் கேட்க சரவணன் சொல்லியாச்சு எனக்கு கூறுகிறார் அதே போல் தங்கமயிலும் வீட்டில் சொல்லி விட்டாயா என கேட்க தங்கம் மேலும் ஓகே சொல்லிவிடுகிறார்.

அது மட்டுமில்லாமல் கதிர் மற்றும் மீனா இருவரையும் லீவ் சொல்ல சொல்லி பாண்டியன் கூற கோமதி எதற்கு என கேட்கிறார் நான் தனியாக உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால் நீ சொல்றது தான் கரெக்ட்டு மூன்று ஜோடியும் போயிட்டு வரட்டும் என சந்தோஷமாக பாண்டியன் கூறுகிறார் இதனால் அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள் இத்துடன் எபிசோட் முடிகிறது ஆனால் பாண்டியன் மூன்று ஜோடியும் போய்ட்டு வரட்டும் என்றவுடன் தங்கமயில் முகம் வாடுகிறது பாண்டியன் இவ்வாறு சொன்னது தங்க மயலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.