மாப்பிள்ளை என்று கூட பார்க்காமல் செந்திலை அசிங்கப்படுத்திய மீனாவின் அப்பா.. பரபரப்பின் உச்சத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நேற்று மயில் சரவணனிடம் நேற்று ராஜு என்ன திட்றா சின்ன பொண்ணு கேட்டுகிட்டே நீங்க நிக்கிறீங்க அவகிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல ஏதோ கோவத்துல பேசி இருப்பானு சொல்றீங்க நான் எவ்வளவு வருத்தப்பட்டு இருப்பேன் அதுக்காகவாது நாலு வார்த்தை ஆறுதலா பேசினீங்களா அப்படியெல்லாம் செய்யாம உங்க தம்பியோட சேர்ந்து தூங்க தான போனீங்க என தன்னுடைய வருத்தங்களை கூறி புலம்பி கொண்டிருக்கிறார்.

இதற்கு சரவணன் இதையெஎல்லாம் வைத்து தான் உன் மேல எனக்கு அன்பு இல்லன்னு சொல்ல வரியா என கேட்க அதற்கு மயிலும் ஆமா என் மேல அன்பு இருந்தா எனக்கு ஆறுதலா இருந்திருப்பீங்க என்று சொல்ல உடனே சரவணன் சரி மயிலே நடந்ததெல்லாம் விட்டுடு இப்ப கேட்கிறேன் நான் என்ன பண்ணா உன் மேல எனக்கு அன்பு இருக்குன்னு நம்புவ என கேட்க அதற்கு மயில் உங்கள்ட்ட ஹனிமூன் போகணும்னு நான் சொன்னேன்ல அதுக்கு என்ன கூட்டிட்டு போங்க என கூற சரவணன் ஷாக்காகுகிறார்.

இவ்வாறு இது ஒருபுறம் போய்க்கொண்டிருக்க தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் மீனா தனது அப்பாவின் பிறந்த நாளுக்காக வாட்ச் ஒன்றை வாங்கி வைத்திருக்க செந்தில் அவருக்காக வாங்கி வச்சிருக்க அவர்கிட்ட கொடுக்கலாம் என கூறி மீனாவை செந்தில் தனது மாமனார் வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.

மீனா தனது அப்பாவிடம் உங்களோட பர்த்டே கிப்ட் எனக் கூறிவிட்டு வாட்ச்சை கொடுக்க இதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என வாட்ச்சை தூக்கி போட்டு விட்டு வெளியே போ எனக் கூற மீனா அழுது கொண்டே செல்கிறார். பிறகு செந்தில் கதிரிடம் என்ன கல்யாணம் பண்ணுன ஒரே காரணத்திற்காக மீனா கனவில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரக்கூடாது அவங்க அப்பாவுக்கு என்ன கவர்மெண்ட் மாப்பிள்ளை தான வேணும் நான் படிச்சு கவர்மெண்ட் வேலைக்கு போறதா முடிவு பண்ணிட்டேன் என கூறிவிட்டு அடுத்த நாள் படிக்க கிளம்புகிறார்.

அப்பொழுது மீனா எனக்காக தான் நீ கவர்மெண்ட் வேலைக்கு போறியா என செந்திலிடம் கேட்க ஆமா என சொல்ல உடனே மீனா மிகவும் சந்தோஷமாக செந்திலை கட்டி பிடிக்கிறார்.