கட்டின பொண்டாட்டிக்காக அடிமட்ட லெவலுக்கு இறங்கி சம்பாதிக்கும் கதிர்.. கண்கலங்கி நிற்கும் ராஜி.. மீனா சொல்றத கொஞ்சம் கேளுங்க கதிர்..

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் குமரவேலுக்கு பெண் பார்க்க கிளம்புகிறார்கள் அப்பொழுது ராஜியின் அப்பா தன்னுடைய மனைவியிடம் எங்கே உன் நகை போய் நகையை போட்டுக் கொண்டு வா இப்படியே போனா பெண் வீட்டார் நம்மளை பற்றி என்ன நினைப்பாங்க என கேள்வி எழுப்புகிறார்.

நகை பத்தி கேட்டதும் ராஜியின் அம்மா பதறுகிறார் அதுமட்டுமில்லாமல் பாட்டி மற்றும் சித்தி என அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள் உடனே லாக்கரில் வைத்துள்ளதாக ஒரு பொய் சொல்லுகிறார்கள் ஏனென்றால் ராஜி நகையை எடுத்து சென்று விட்டதை அவர் மறந்துவிட்டார் என தெரிகிறது. உடனே லாக்கரில் என்னை கேட்காமல் எதற்கு வைத்தீர்கள் என கேட்க ஒரு வாரத்திற்கு முன்புதான் வைத்தேன் என கூறி சமாளிக்கிறார்கள்..

இப்ப என்ன மதனி வெறும் கழுத்தோட போகக்கூடாது அவ்வளவுதானே என ராஜியின் சித்தி இரண்டு நகைகளை கழட்டி ராஜியின் அம்மாவிற்கு போடுகிறார். உடனே அனைவரும் கிளம்பி போகிறார்கள் அப்பொழுது கதிர் பைக்கை துடைத்துக் கொண்டிருக்கும் பொழுது கதிரின் மாமா என்ன மாப்ள பைக்கை துடைக்கிற அப்படியே எல்லாம் பைக்கையும் தொடைசிடு எனக் கிண்டல் அடிக்க அதற்கு பதிலுக்கு கதிரும் கிண்டல் அடிக்கிறார்.

அந்த சமயத்தில் கதிரின் தோழன் பைக்கை இன்னைக்கு கொடுக்க முடியுமா எனக் கேட்க சரி கொடுத்து விடுகிறேன் என கூறிவிடுகிறார் இப்பொழுது எப்படி டெலிவரி செய்வாய் என ராஜியின் சித்தப்பா கேட்க கதிர் ஏதாவது ஒரு வழி கிடைக்கும் என பேசுகிறார் உடனே ராஜியின் சித்தப்பா என்னிடம் பழைய சைக்கிள் ஒன்று இருக்கிறது அதை வேணால் நீ பயன்படுத்தலாம் என கூறுகிறார்.

ஆனால் டெலிவரி செய்ய அது செட் ஆகுமான்னு எனக்கு தெரியல என பேசுகிறார் அதற்கு அதெல்லாம் பாத்துக்கலாம் என சைக்கிளை எடுத்து வந்து பார்க்கிறார்கள் அப்பொழுது சைக்கிள் பொலபொலவென கொட்டுகிறது. உடனே வேணும்னா உங்க அப்பா கிட்ட அந்த பழைய பைக்கை கேட்கலாம் என பேச அதை பத்தி பேசாதீங்க அவர்ட்டே சவால் விட்டுட்டு அவர்கிட்டயே போய் கேட்கிறதா தேவையே இல்லை என பேசுகிறார்.

மீனா மற்றும் ராஜி இருவரும் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார்கள். அப்பொழுது மயில் எங்கே என கேட்க அவளுக்கு தலைவலி என கூறுகிறார்கள் உடனே அங்கு சென்று மயிலை பார்த்துவிட்டு இருவரும் வெளியே வந்து நின்று கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்தில் சரவணன் வந்து தங்கமயிலிடம் கூப்பிட அவர் தூங்குவது போல் நடிக்கிறார் உடம்புக்கு முடியலையா சரி தூங்கு என கூறிவிட்டு வெளியே செல்கிறார் உடனே மயில் சோகமாகிறார் அவ்வளவுதானா உடம்புக்கு சரியில்லையா எனக் கேட்டுவிட்டு வெளியே கிளம்பிட்டாரே என பீல் பண்ணுகிறார்.

அடுத்த காட்சியில் ராஜீ மற்றும் மீனா இருவரும் வெளியே நிற்க செந்தில் மற்றும் சித்தப்பா இருவரும் வருகிறார்கள் அப்பொழுது சாப்பிடலாம் வாங்க என மீனா அழைக்க கதிர் வந்து விடட்டும் என பேசுகிறார்கள் கதிர் சைக்கிளில் டெலிவரி செய்யப் போவதை சொல்ல அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள் உடனே மீனா என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது அதை எடுத்துக்கொண்டு பைக் வாங்கிக் கொள்ளுங்கள் என கூற அதெல்லாம் வேண்டாம் உங்களுக்கு எதுக்காவது தேவைப்படும் என கூறுகிறார்கள். இத்துடன் எபிசோட் முடிகிறது.