பொண்டாட்டிக்காக அப்பாவையே கேள்வி கேட்ட செந்தில்… மீனாவிடம் வந்து அந்தர் பல்டி அடித்த பாண்டியன்..

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் பாண்டியன் கடையில் இருக்கும் பொழுது அந்த டெலிவரி என்ன ஆச்சு என கேட்டுக் கொண்டிருக்கிறார் செந்தில் நான் போகிறேன் என சொல்லும் பொழுது ஏன் அவன் போக மாட்டானா என செந்தில் மாமாவை பார்த்து கேட்க உடனே பாண்டியன் வீட்டுலையும் பிரச்சனை இங்கேயும் பிரச்சனையா என கூறுகிறார்.

அந்த சமயத்தில் செந்தில் ஆனாலும் நீங்க மீனாவ திட்டினது தப்பு அப்பா அவன் எதுவுமே பேச மாட்டான் என்பதற்காக நீங்க வாய்க்கு வந்தபடி திட்டலாமா என கேள்வி எழுப்புகிறார் உடனே செந்திலை மாமா வாட் டெலிவரி பண்ண போகலாம் என நைசாக அழைத்து செல்கிறார் கடையில் வேலை செய்யும் நபர் ஒருவர் என்னாச்சு என கேட்க என் மருமகளை திட்டுவதற்கு எனக்கு உரிமை இல்லையா என்பது போல் பேசுகிறார்.

மற்றொரு பக்கம் மயில் சரவணன் இடம் சாப்பாட்டை எடுத்து சென்று பேசிக் கொண்டிருக்கிறார் வீட்டில் உள்ள பிரச்சினையை கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் எங்கேயாவது நான்கு நாட்கள் போக வேண்டும் எனக் கூற உங்க அம்மா வீட்டுக்கு போறியா என ஆவலுடன் கேட்கிறார் சரவணன் இல்லை நாம ஹனிமூன் போகலாம் என கூறுகிறார் அதற்கு நீங்கள் பர்மிஷன் கேளுங்கள் எனவும் சொல்லுகிறார்.

அடுத்த காட்சியில் பாண்டியன் அதிரசம் மற்றும் சமோசா வாங்கி வந்து ராஜி மற்றும் மீனாவை சமாதானப்படுத்துகிறார் சமோசாவை வாங்கிக் கொள் என மீனாவிடம்  கூற இருக்கட்டும் இருக்கட்டும் என ஜாடை மடையாக கூறுகிறார் உங்கள் அப்பா உன்னை திட்டவே கிடையாதா அப்புறம் ஏதாவது வாங்கி கொடுத்தா நீ சாப்பிட மாட்டியா என கேட்க சென்டிமென்டாக பாண்டியன் பேச மீனா மனசு இலகுகிறது.

மேலும் பாண்டியன் எனக்கு உங்களை திட்டுவதற்கு உரிமை இல்லையா என கேட்க எல்லா உரிமையும் இருக்கு மாமா என கூறுகிறார் என்னால தான் அக்காவும் அத்தனையும் திட்டுவாங்கினாங்க  அதுதான் எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு என ராஜி கூறுகிறார் உடனே எடுத்து சாப்பிடுங்க அம்மா எனக் கூற அதற்கு சாப்பிட ஆரம்பிக்கிறார்கள் அப்பொழுது தங்க மயில் நீயும் சாப்டு எனக் கூற அவர்கள் கடப்பலகாரம் சாப்பிட மாட்டாங்க என மீனா அவரை நோஸ்கட் செய்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.