அடுத்தவங்க பெட்ரூமில் நுழையரது எங்க வேலை கிடையாது.. மயிலுக்கு தரமான பதிலடி கொடுத்த ராஜி மற்றும் மீனா

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் பாண்டியன் திட்டியதால் ராஜி அழுது கொண்டிருக்கிறார். அப்பொழுது கதிர் ராஜியின் பக்கத்தில் அமர்ந்து கையைப் பிடித்துக் கொண்டு ஆறுதலாக பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் நான் கஷ்டப்படுறேன் என உன்கிட்ட நான்  சொன்னேனா எதுக்காக நீ தேவையில்லாம இப்படி திட்டு வாங்குற.

நான் ஆரம்பத்தில் இருந்தே வேலை செய்து கொண்டிருக்கிறேன் நீ எதுக்கு தேவையில்லாம நான் கஷ்டப்படுகிறேன் என்று நினைத்து ஏதாவது செய்ய போயி கடைசில திட்டு வாங்குகிறாய் என பேசுகிறார். இனிமேல் எனக்காக எதுவும் செய்யாதே எனக் கூறுகிறார். அடுத்த காட்சியில் தங்கமயில் தன்னுடைய அம்மாவிடம் போன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது பாண்டியனிடம் டியூஷன் மேட்டரை சொன்னது குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்பொழுது கோமதி சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது மீனா மற்றும் ராஜியும் வந்து  பேசுகிறார்கள் அப்பொழுது மீனா எல்லா பிரச்சனைக்கும் நான் தான் காரணமாக என கேட்டுவிட்டு அழுகிறார். அந்த ஆள் தான் கூறுகெட்ட தனமாக கோவத்தில் சொல்லிவிட்டு போறார் என்றால் நீ எதற்காக அதை பற்றி யோசிக்கிறாய் என பேசுகிறார். அது மட்டும் இல்லாமல் காலையில் நான் யார் முகத்தில் முழிச்சோம் என பேச ஆமா மாமா முகத்தில் தான் முடிச்சேன் அதனாலதான் இவ்வளவு பிரச்சனையும் என் பேசி அனைவரையும் சிரிக்க வைக்கிறார்.

டியூஷன் மேட்டர் எப்படி மாமா காதுக்கு சென்றது நாம் மூன்று பேர தவிர யாருக்கும் தெரியாதே என ராஜி கேட்க ஒரு வழியாக நான்காவது ஒரு ஆளுக்கு தெரியும் என தங்க மயில் கூறுகிறார் உடனே தங்க மயிலிடம் சென்று இருவரும் கேட்க போகிறார்கள் ஆனால் தங்கமயில் உள்ளே அழைக்க யார் பெட்ரூம் குள்ளேயும் நுழைய  மாட்டோம் அடுத்தவங்க விஷயத்தில் தலையிட மாட்டோம் என மீனா மற்றும் ராஜி தரமான பதிலடி கொடுக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் தேவையில்லாமல் எங்க விஷயத்தில் நீங்கள் மூக்கு நுழைக்கிறீங்க நீங்க மாமா மாமியார் அப்படிங்குறதோடு நிறுத்திக்கிங்க எங்களை பத்தி அவங்ககிட்ட சொல்லணும்னு அவசியம் கிடையாது மாமா கிட்ட நான் சொல்லாம இருக்க மாட்டோம் கண்டிப்பா சொல்லி இருப்போம் இடம் பொருள் ஏவல் பார்த்து தான் சொல்லி இருப்போம். ஆனா நீங்க வேணும்னே சொல்லி மாட்டிவிட்டது மாதிரி இருக்கு தேவையில்லாம இனிமே எங்க விஷயத்தில் தலையிடாதீர்கள் என கூறுகிறார். அடுத்த நாள் காட்சியில் செந்தில் பாண்டியனிடம் மீனா எதுவுமே பேசாமல் இருக்கா என்பதற்காக அவளை ஏறி மிதிக்க வேண்டாம் என தன்னுடைய அப்பாவிடம் செந்தில் கூறுகிறார் இத்துடன் ப்ரோமோ முடிகிறது.