எல்லா தப்புக்கும் காரணம் நீதான். குடும்பத்தை செதச்சதும் நீதான் மீனா மீது அபாண்டமாக பழி போடும் பாண்டியன்… இதுக்கெல்லாம் காரணம் அந்த கோல் முட்டி தங்கமயில் தான்..

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் பாண்டியன் நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது தங்கமயில் அவரை அழைத்துப் பேசிக் கொண்டு வருகிறார். அப்பொழுது வேலைக்கு போக உனக்கு விருப்பமா என கேட்க இல்லை குடும்பத்தை பார்த்துக் கொள்ளதான் எனக்கு பிடிக்கும் என கூறிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது ராஜி படித்துக் கொண்டு டியூஷன் எடுக்கப் போகிறார் என்பது நாசுக்காக போட்டுக் கொடுக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் போட்டுக் கொடுத்துவிட்டு நான்தான் சொன்னேன் என்பதை சொல்ல வேண்டாம் என பாண்டியனிடம் சொல்கிறார். உடனே நீ சொன்னதை நான் எதுக்கு சொல்லணும் நான் வீட்ல போய் வச்சுக்கிறேன் என வீட்டிற்கு கோபமாக செல்கிறார். அப்பொழுது பேகை வைத்துவிட்டு கோமதி கோமதி என கத்துகிறார். கோமதி வந்ததும்  ராஜி, மீனா என அனைவரையும் அழைக்கிறார் உடனே கோமதியை எனக்கு தெரியாமல் எல்லாத்தையும் செய்யலாம் என்று முடிவு செய்து விட்டீர்களா என திட்டுகிறார்.

நான் அவ்வளவு சொல்லியும் டியூஷன் எடுப்பது பற்றி மறுபடியும் முடிவு பண்ணி இருக்கியா இது நியாயமா உன் அண்ணன், அப்பாவும் என்னை இன்னும் அசிங்கப்படுத்தனும்னு நினைக்கிறியா என பேசுகிறார். இத எல்லாத்துக்கும் காரணம் நீதான் மீனாவை பார்த்து கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் இந்த குடும்பத்தில் பிரச்சனை வர காரணமே நீதான் இந்த குடும்பத்தை சிதைப்பதே நீதான் என வாய்க்கு வந்தபடி திட்டுகிறார் இதனால் மீனா அழுது கொண்டே ஓடுகிறார்.

அதேபோல் ராஜியை பாண்டியன் இன்னும் திட்டுகிறார் இந்தக் கதிர் தான் உருப்படாம போயிட்டானா நீயாவது ஒழுங்கா படிக்கிற வேலைய பாரு என திட்டி விட்டு செல்கிறார். மீனா அழுது கொண்டு செந்திலிடம் பேசுகிறார் அந்த குடும்பத்தை சிதைக்கிறது நானா எல்லாரும் அப்படித்தான் நினைக்கிறார்களா எனக் கேட்க சத்தியமா இல்லை என சத்தியம் பண்ணி கூறுகிறார். மேலும் செந்திலிடம் பேசிக் கொண்டிருக்கும் மீனா அழுது கொண்டே அவரை அரவணைத்து பேசிக் கொண்டிருக்கிறார்.

மற்றொரு பக்கம் பாண்டியனிடம் ஸ்வீட்டை கொடுத்துவிட்டு நீங்க செய்தது தப்புதான் நாங்க உங்ககிட்ட மறைக்கணும்னு எதிர்பார்க்கவே இல்ல சந்தர்ப்ப சூழ்நிலை ஆல சொல்ல முடியல எனக் கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் ராஜி சொல்வதற்கு பயமாக இருக்கிறது என கூறிவிட்டு என்னிடம் சொல்லி சொல்ல சொன்னால் ஆனால் நீங்கள் காலையில் கோபமாக இருந்தீர்கள் அத நாள் நேரம் காலம் அமையவில்லை எனக் கூற ஜோசியம் பார்த்துவிட்டு சொல்ல வேண்டியது தானே என பாண்டியன் கத்துகிறார்.

இப்படி ஆளாளுக்கு திட்ட பாண்டியன் யோசனையில் இருக்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது. நாரதர் வேலையை நச்சுனு பார்த்த தங்கமயிலுக்கு இனிமேல் இருக்கு பஞ்சாயத்து.

Exit mobile version