தங்கமயில் குட்டு வெடித்தது.? சரவணனுக்கு உதவி செய்ய பாண்டியன் மொபைலில் இருந்து பணத்தை ஆட்டையை போட்டு கதிர்..?

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சமீபத்திய எபிசோடில் வீட்டில் இங்கிலீஷ் நியூஸ் பேப்பர் வாங்க சொன்ன மீனாவை பாண்டியன் உதாசனப்படுத்துகிறார் இதனால் செந்தில் கோபப்பட்டு தன்னுடைய அப்பாவிடம் கேள்வி கேட்கிறார் ஒரு நியூஸ் பேப்பருக்கு இப்படி மீனாவை அசிங்கப்படுத்தலாமா என பேசுகிறார்.

நியூஸ் பேப்பர் வாங்கலாமா வேண்டாமான்னு மீனா கேட்டது நான் அதுக்கு சொல்லிட்டேன் அதற்கான காரணமும் சொல்லிட்டேன் இதுல இடையில நீ என்ன ஓவரா பேசுற அடிச்சனா பல்லு எல்லாம் தட்டி விடும் என பேசுகிறார். உடனே கோவப்பட்ட செந்தில் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார் மீனாவை அழைத்து சென்று ஆபீஸில் டிரா பண்ணிவிட்டு கதிரை அழைத்துக் கொண்டு மீனாவின் வீட்டிற்கு செல்கிறார்.

மீனா வீட்டிற்கு சென்ற செந்தில் மீனாவின் அப்பாவிடம் நான் கவர்மெண்ட் வேலைக்கு கண்டிப்பாக போவேன் உங்கள விட ஒரு நல்ல இடத்திற்கு வருவேன் என சபதம் போடுகிறார் இதனை கதிர் வீடியோ எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வருகிறார். இந்த வீடியோவை மீனாவிடம் போட்டு காட்ட மீனாவின் மனது குளிர்கிறது. இதனால் செந்திலை பற்றி நல்ல அபிப்பிராயம் வருகிறது.

இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த வீடியோவில் சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் ஹோட்டலுக்கு செல்கிறார்கள் அப்பொழுது மீதி பணத்தை கார்டா கேஸா என கேட்கிறார்கள் அதற்கு நாங்கள் முழு பணமும் கட்டி விட்டோம் எனக் கூற இல்லை நீங்கள் அட்வான்ஸ் மட்டும் பே பண்ணி உள்ளீர்கள் என கூறுகிறார்கள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் தங்கமயில் திட்டுவது போல் தெரிகிறது தங்கமயில் கண்ணை கசக்கி கொண்டு நிற்கிறார் உடனே விஷயத்தை கதிரிடம் சொல்ல கதிர் செந்தில் இடம் கூறுகிறார் இப்பொழுது எப்படி பணத்தை ரெடி செய்வது என பேசிக்கொண்டு இருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் சரவணன் இடம் பணத்தை ரெடி செய்து விட்டு உனக்கு போன் பண்ணுகிறேன் என கூறிவிடுகிறார்.

பாண்டியன் ஃபோனை வைத்துவிட்டு வெளியே செல்கிறார் உடனே பாண்டியன் போனை எடுத்து கதிர் சரவணனுக்கு பணத்தை அனுப்ப முயற்சி செய்கிறார் அப்பொழுது செந்தில் கதிரிடமிருந்து போனை வாங்கி அப்பா போனில் இருந்து பணத்தை எடுக்க வேண்டாம் என கூறுகிறார் இத்துடன் எபிசோட் ப்ரோமோ முடிகிறது.