பாண்டியனை பார்த்து செந்தில் கேட்ட கேள்வி.. மருமகன் என்று கூட பார்க்காமல் அசிங்கப்படுத்திய மீனாவின் அப்பா.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா இங்கிலீஷ் நியூஸ் பேப்பர் வாங்கலாம் என கூற பாண்டியன் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார் அது மட்டும் இல்லாமல் தமிழ் நியூஸ் பேப்பரை என்னை தவிர யாரும் படிப்பது கிடையாது அதை எதற்கு வாங்கிக் கொண்டு எனவும் கூறுகிறார்.

இதனால் மீனா வருத்தப்படுகிறார் இந்த நிலையில் செந்தில் வெளியே வந்து கதிர், சரவணன், பழனி என பேசிக்கொள்கிறார் மீனா ரொம்ப வருத்தப்பட்டார் ஒரு 300 தான அதை கூட வாங்கித் தர மாட்டாங்க என பேசுகிறார் இதனால் பழனி ஆமாண்டா மாப்பிள்ளை மச்சான் ரொம்ப தான் போயிட்டு இருக்காரு இதுக்கெல்லாம் சீக்கிரம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் இந்த குடும்பத்தோட நிலைமை என்ன ஆகும் தெரியுமா எனக்கு பயமாயிருக்கு என பேசுகிறார்.

உடனே கதிர் பேசாம கடைக்கு போறத விட்டுட்டு வெளியில் வேற எங்கேயாவது வேலைக்கு போங்க அண்ணா அப்போ உங்க கைக்கு காசு வரும் இல்ல நீங்க அன்னைக்கு தேவையானதை வாங்கி கொடுக்கலாம் இல்ல என பேசுகிறார் உடனே சரவணன் என்ன கதிர் இப்படி பேசுற அப்பாவை எதிர்த்து எல்லாம் எதுவும் பண்ண கூடாது என பேசுகிறார் உடனே பழனி கடைய பார்த்துக்க தான் நாங்க இருக்கோம்ல என பேசுகிறார்.

இப்ப என்ன நியூஸ் பேப்பர் வாங்க காசு தானே வேணும் நான் கொடுக்கிறேன் என பாக்கெட்டில் கையை விடுகிறார் சரவணன் ஆனால் ஒரு பைசா கூட இல்லை அதான் சம்பளத்தை வாங்கி முழுசா அவர்கிட்ட கொடுத்துட்டியே அப்புறம் என்ன அங்க கைய விடுற என பேசுகிறார் சரி விடு நான் அரேஞ்ச் பண்றேன் என பேச நீ யார்கிட்ட போய் கேப்ப என பேச உன்கிட்ட தான் என பழனியை  பார்த்து கூறுகிறார் சரவணன்.

உடனே பழனி பாக்கெட்டில் கையை விட்டு 300 ரூபாயை எடுத்து நீட்டுகிறார் ஆனால் செந்தில் இந்த மாசம் ஓகே அடுத்த மாசம் என செந்தில் கூற ஆனா காசு ஒரு முக்கியம் இல்ல ஆனா மீனவ அசிங்கப்படுத்துற மாதிரி பேசிட்டாரே என வருத்தப்படுகிறார் செந்தில் இதனால் பாண்டியன் வந்ததும் இந்த ஒரு நியூஸ் பேப்பருக்கு இப்படியா பேசுவீங்க என டைரக்டாக அப்பாவை பார்த்து கேள்வி எழுப்புகிறார்.

மீனா ஒரு விஷயம் சொல்லுச்சு அதை வேண்டாம் நான் மறுத்துட்டேன் அந்த புள்ளையும் புரிந்துகிடுச்சு உனக்கு என்ன இடையில் என பாண்டியன் பேச என்னதான் மீனா புரிஞ்சுகிட்டா புரிஞ்சுகிட்டான்னு  அடங்கி போறான்னு எல்லாத்தையும் இப்படியே பண்ணிக்கிட்டு இருப்பீங்களா என எதிர்த்து கேள்வி கேட்கிறார் செந்தில். உடனே கோமதி உள்ளே அழைத்துச் செல்கிறார் பிறகு செந்தில் கோபத்துடன் பைக்கை எடுத்து செல்கிறார்.

உடனே மீனாவை பார்த்து வண்டியில் ஏறு எனக்கூறி ஆபீஸில் டிரா பண்ணுகிறார் அது மட்டும் இல்லாமல் போகும் பொழுது மீனாவிடம் சாரி கேட்கிறார் செந்தில், மீனாவை ட்ராப் செய்துவிட்டு வரும் வழியில் கதிர் சைக்கிள் பஞ்சர் ஆகி வழியில் நிற்கிறார் அவரைப் பார்த்தவுடன் செந்தில் பஞ்சர் ஒட்டுவதற்கு ஆளை செட்டப் செய்துவிட்டு கதிரை அழைத்துக் கொண்டு மீனாவின் வீட்டிற்கு செல்கிறார்.

மீனாவின் வீட்டுக்கு சென்ற செந்தில் மீனாவின் அம்மாவிடம் பேசி விட்டு பிறகு லேடிஸ் இடம் கோபமாக பேச மாட்டேன் மீனா அப்பாவை வர சொல்லு என கத்துக்குறார் மீனா அப்பா வந்தவுடன் செந்திலை அவமானப்படுத்துகிறார் மீனா என் மகளே இல்லை இவன் யார் எனக்கு என அசிங்க படுத்துகிறார். இதனால் கோபப்பட்ட செந்தில் ஒரு நாள் நானும் கவர்மெண்ட் ஜாப்புக்கு போய் உங்களை விட பெரிய பொசிஷன்னுக்கு வந்து அப்புறம் மீனவ கூட்டிட்டு வீட்டிற்கு வருகிறேன் என சவால் விடுகிறார் இதனை கதிர் வீடியோ எடுக்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.