ராஜியை காப்பாற்றுகிறேன் என்று தூண்டிலில் சிக்கிக்கொண்ட மீனா.. யாரு பெத்த புள்ளையோ இப்படி பங்கமாய் வாங்கி கட்டிக்குதே…

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் ராஜி டியூஷன் எடுக்கும் மேட்டர் வீட்டிற்கு தெரிய வருகிறது இதனால் ராஜி வீட்டில் இருந்து அனைவரும் திட்டுகிறார்கள் பாண்டியனை கேவலமாக பேசியதால் பாண்டியனும் அதை சமாளித்து விட்டு வீட்டுக்குள் வருகிறார். உடனே ராஜியிடம் உனக்கு என்ன குறை வைத்தோம் எதற்காக இப்படி நடந்து கொண்டாய் என கதிர் கேட்கிறார்.

அதேபோல் பாண்டியனும் உன்ன நான் வேலைக்கு போக சொன்னமா? அப்படியே வேலைக்கு போறதா இருந்தாலும் கவர்மெண்ட் வேலைக்கு போக வேண்டியது தானே எதுக்கு பொய் சொல்லிட்டு டியூஷன் எடுக்க போனா என கேட்க எனக்காக ஒருத்தன் புட் டெலிவரி பண்ணிக்கொண்டு சாட்டர்டே சண்டே கூட டிரைவிங் ஓட்டிக்கொண்டு இவ்வளவு கஷ்டப்படுகிறான் எனக்கு ஒரு மாதிரியா கஷ்டமா இருக்கு அதனால தான் போனேன் என கூறுகிறார்.

இதனால் கதிர் நான் உன்கிட்ட சொன்னனா எனக்கு கஷ்டமா இருக்குன்னு உனக்கு என்ன தேவையா இருந்தாலும் காசு நான் தந்துகிட்டு தானே இருக்கேன் எனக்கு பிடிக்குதோ இல்லையோ உனக்கு காசு கொடுக்கிறேன் அப்புறம் எதுக்கு எங்க அப்பாவை இப்படி அசிங்கப்படுத்தின உங்க அப்பா கிட்ட எல்லாம் திட்டு வாங்கணும்னு எங்க அப்பாவுக்கு தலை எழுத்தா என கேள்வி எழுப்புகிறார்.

என்னால உங்களுக்கும் மாமாவுக்கு சண்டை அடிக்கடி வருது அதனால தான் என ராஜி கூற நாங்க இன்னைக்கு அடிச்சுப்போம் நாளைக்கு கூடிப்போ இன்னைக்கு கடைக்கு வர வேண்டாம்னு சொல்லுவாறு நாளைக்கு கடைக்கு வான்னு சொல்லுவாரு இதெல்லாம் ஒரு விஷயமா நாங்க எதுவானாலும் பேசிப்போம் ஆனா உங்க அப்பா முன்னாடி இப்படி அசிங்கப்படுத்திட்டியே என காதிர் மீண்டும் ராஜியை பார்த்து கேட்கிறார்.

அந்த சமயத்தில் மீனா ராஜியை காப்பாற்றுகிறேன் என நினைத்து தானே தூண்டில் சிக்கிக் கொண்ட விஷயம் வெளியே வருகிறது. எல்லாரும் சொல்லலன்னு சொல்லலைன்னு சொல்றீங்களே சொன்னா மட்டும் விட போறீங்களா என மனசுக்குள் பேச அதற்கு கோமதி என்னாச்சு என கேட்கிறார். அதற்கு மீனா ராஜி டியூஷன் எடுக்கிறது அவளுடைய சிச்சுவேஷனை கொஞ்சமாவது புரிஞ்சிக்கிறீங்களா அவருடைய தேவைக்கு யாருகிட்ட போய் கேப்பா அதனாலதான் அவளும் வேலைக்கு போய்கிட்டு கதிருக்கு ஹெல்ப் பண்ணனும்னு நினைக்கிற இதுல என்ன தப்பு இருக்கு என பேசுகிறார்.

சொல்றேன்னு சொல்றீங்களே உங்கிட்ட சொல்லாததால அவ எவ்வளவு வருத்தப்பட்டான்னு தெரியுமா இதெல்லாம் கொஞ்சம் கூட நினைச்சு பார்க்க மாட்டீங்களா என மீனா பேச உடனே கோமதி நிறுத்து அவ டியூஷன் எடுக்கிறது உனக்கு முன்னாடியே தெரியுமா என ஒரு கேள்வி எழுப்புகிறார். உடனே மீனா ஆமாம் தெரியும் என கூறுகிறார்கள் இதனால் செந்தில் மீனாவை பார்த்து திட்டுகிறார்.

எதுவா இருந்தாலும் உன் பிடிவாதம் தானா நீ சொல்றது தான் கரெக்ட்னு நெனச்சிட்டு இருக்கியா வீட்ல பெரியவங்க இருக்காங்களே அவங்க கிட்ட சொல்லணும்னு தோணுதா எதுக்காக இப்படி செஞ்ச நீ செஞ்ச தப்பால பாரு அப்பா தலை குனிஞ்சு நிக்கிறாரு இதெல்லாம் அவருக்கு தேவையா என பாண்டியனுக்கு சப்போர்ட் பண்ணி பேசுகிறார்கள்.

இப்படி ஆளாளுக்கு பாண்டினுக்கு மரியாதை கொடுத்து பேசுவதால் பாண்டியன் பேச முடியாமல் நிற்கிறார் உடனே ராஜி மீனா இருவரையும் கோமதி திட்டிவிட்டு அமைதியாக இருக்கிறார் அப்பொழுது பாண்டியன் இந்த வீட்டில் ஒரு வரைமுறை இருக்கிறது அதுக்குள்ளே தான் நடக்க வேண்டும் இல்லை என்றால் நீங்கள் வீட்டை விட்டு வெளியே போகலாம் அந்த ரூல்சோட நடக்குறாங்களோ அவங்க மட்டும் இருக்கலாம் என திட்டவட்டமாக கூறுகிறார் இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

கோமதியும் திட்டி விட்டு உள்ளே செல்கிறார் அதேபோல் மற்றொரு பக்கம் நகையை ராஜியின் அம்மா கொடுத்தது குறித்து ராஜியின் அம்மாவிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது தப்பே செய்தாலும் அது என் பொண்ணு அவளுக்காக நான் பாசமா தான் இருப்பேன் என கூறுகிறார் இதனால் ராஜியின் அப்பாவிற்கு கோபம் வருகிறது அந்த ஓடு காளி பற்றி இங்கே பேசவும் கூடாது அவளுக்கு எதுவும் கொடுக்கக் கூடாது என திட்டவட்டமாக கூறுகிறார்கள் இத்துடன் எபிசோட் முடிகிறது.