எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றி விடும் தங்க மயிலின் அம்மா.. நகையை பற்றி கேட்டதால் ராஜ்ஜியின் அம்மா எடுத்த அதிரடி முடிவு.?

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் ஹோட்டலுக்கு வெளியே நிற்கிறார்கள் அப்பொழுது உங்களால் பணம் ரெடி பண்ண முடியவில்லை சரி வாங்க கிளம்பலாம் என பையை தூக்கிக்கொண்டு அழுது கொண்டு வெளியே போகிறார் தங்கமயில்.

சரவணன் எவ்வளவு கூப்பிட்டும் அவர் வெளியே போக அந்த சமயத்தில் கதிர் போன் பண்ணுகிறார் போன் பண்ணி மெசேஜை பார்த்தாயா எனக் கேட்க இல்லை நான் பார்க்கிறேன் என பேசுகிறார். உடனே போனில் உள்ள மெசேஜ்களை பார்த்துவிட்டு எப்படி இவ்வளவு பணம் ரெடி பண்ணினாய் என கேட்கிறார் அதற்கு கதிர் அதெல்லாம் ஒரு பிரச்சனையா இப்படி ஜாலியா இரு என கூறிவிட்டு போனை கட் செய்கிறார்.

அடுத்த காட்சியில் தங்கமயிளிடம் சரவணன் பணம் வந்துவிட்டது என கூறுகிறார் யார் ரெடி பண்ணியது என கேட்க தம்பிகள் தான் எனவும் கூறுகிறார். மேலும் பாண்டியன் ஸ்டோர் கடையில் செந்தில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது பழனி எப்படி ஆயிரம் ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டு சென்று விட்டு மீதி பத்தாயிரம் ரூபாய் என்ன செய்வான் என கேட்கிறார் அதற்கு செந்தில் சொன்னா உங்கள் இதயம் வெடித்து விடும் எனக் கூறுகிறார்.

பரவால்ல சொல்லு என கேட்க பணத்தை ஆட்டையை போட்டதை கூறியவுடன் பழனியின் முகம் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறது இவனை அழைத்து வந்ததில் எனக்கு தான் தொல்லையாக இருக்கிறது என கூறுகிறார். பிறகு தங்கமயில் மற்றும் சரவணன் இருவரும் ரூமுக்கு செல்கிறார்கள் அப்பொழுது என்னுடைய அம்மாவிடம் சொல்லிவிட்டு வருகிறேன் என வெளியே சென்று அம்மாவிடம் பேசுகிறார்.

அதற்கு அவர் தங்கமயிலின் அம்மா பாக்கியா இதுல உன் தப்பு எதுவுமே கிடையாது முழுக்க முழுக்க அவருடைய தப்பு தான் ஹனிமூன் போறதுக்கு கொஞ்சமாவது பணம் எடுத்து வைக்கிறது இல்லையா அவர் பண்ணியதிற்கு நீ என்ன செய்வாய் என எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் பேசுகிறார்.

அதுமட்டுமில்லாமல் அவங்க தம்பி தானே ரெடி பண்ணாங்க இவ்வளவு நாள் சம்பாதிக்க காசை வீட்டில் தானே கொடுத்தார் அந்த மனுஷனுக்கு கொஞ்சம் கூட அறிவு கிடையாதா? வெளியில் போறவங்களுக்கு கொஞ்சமாவது காசு கொடுத்து அனுப்ப வேண்டும் என்று தெரியாதா என திட்டி தீர்க்கிறார் உடனே தங்கமயில் என்னம்மா இப்படி பேசுற என சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டு உள்ளே செல்கிறார்.

பிறகு இருவரும் டீ குடிக்க செல்ல ரெடி ஆகிறார்கள் அப்பொழுது எந்த புடவை கட்ட வேண்டும் என கேட்க இருவரும் ஒரே முடிவு எடுக்கிறார்கள் மற்றொரு காட்சியில் ராஜி அப்பா அம்மா வீட்டில் பாட்டியிடம் அந்த வீட்டில் சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் காரில் எங்கேயோ போனார்கள் என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது தேனிலவுக்கு என பாட்டி கூறுகிறார்.

அந்த சமயத்தில் ராஜியின் அப்பா சித்தப்பா இருவரும் வருகிறார்கள் அப்பொழுது மதியம் பொண்ணு பார்க்க வருகிறார்கள் அதனால் நகையை எடுத்துக் கொண்டு வந்து ஒழுங்காக போட்டுக் கொள் நாம் பணக்காரர்கள் என்பதை காட்ட வேண்டும் என கூறுகிறார் அதனால் பேங்கிற்கு சென்று நகையை எடுத்துக் கொண்டு வா எனக் கூறுகிறார் சொல்லிவிட்டு ராஜியின் அப்பா வெளியே செல்லும் பொழுது நான் எந்த நகையையும் போட்டுக் கொள்ள மாட்டேன் என் மகளுக்கு தான் என் நகையை கொடுத்தேன் அதில் என்ன இப்போது என பேசுகிறார்.

அது மட்டும் இல்லாமல் யார் சொன்னாலும் என்ன நடந்தாலும் பரவாயில்லை யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை இன்னைக்கு நான் நகை போட்டுக் கொள்ள மாட்டேன் என பிடிவாதவமாக கூறுகிறார் இதனால் ராஜியின் சித்தி மற்றும் பாட்டிக்கு அதிர்ச்சி ஆகிறது இத்துடன் எபிசோட் முடிகிறது.