வயிறு வலியால் மருத்துவமனையில் ஐஸ்..! பணம் இல்லாமல் கதறும் கண்ணன்.! ஓடி வந்து உதவுவார்களா அண்ணன்கள்.! பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசொட்

பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் ஐஸ் youtube சேனல் ஒன்று ஆரம்பித்து  டான்ஸ் ஆடி சமைத்து வீடியோ போட்டு அதை அனைவருக்கும் ஷேர் செய்கிறார். இந்த வீடியோவை பார்த்த மீனாவின் அம்மா மீனாவிடம் இங்க பாரு என்ன நடக்குதுன்னு ஐசுவும் கண்ணணும் ஒரு youtube சேனல் ஆரம்பிச்சு இருக்காங்களாம் உடனே அதற்கு மீனா எனக்கு கூட லிங்க் அனுப்பி இருந்தா நான் என்னமோ நினைச்சு விட்டுட்டேன் என அந்த வீடியோவை பார்க்கிறார்.

அவளைத் தொடர்ந்து ஜீவா ஜனார்த்தனன் என அனைவரும் அந்த வீடியோவை பார்க்கின்றனர். ஜனார்த்தனன் இவர்களுக்கு அறிவே இல்லையா இப்படி இருக்கும்போது இது மாதிரி  செய்யலாமா என திட்டுகிறார் அதுமட்டுமில்லாமல் வெளியே சென்றால் இன்னைக்கு உங்க மாப்பிள்ளையோட தம்பி வீட்டுல இந்த குழம்பாமே என கிண்டல் அடிப்பார்கள்  என கோபமாக பேசுகிறார்.  அதனைத் தொடர்ந்து மீனா ஜீவாவிடம் அப்பா சொல்றதெல்லாம்  பெருசா எடுத்துக்காத இப்பெல்லாம் இதே மாதிரி தான் எல்லாரும் வீடியோ போடுறாங்க என சமாதானப்படுத்துகிறார்.

மேலும் இந்த வீடியோவை முல்லை, தனம் இருவரும் பார்க்கின்றனர்  பார்த்துவிட்டு இந்த சமயத்தில் இப்படி வீடியோ போடுவதா என பேசிக் கொண்டிருக்கின்றனர் . பேசிக் கொண்டிருக்கும்போது அக்கா இந்த வீடியோவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்கள் மறக்காம லைக் பண்ணுங்க என வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறார் ஐசு உடனே முல்லை ரொம்ப கடுப்பாகிறார்.  அக்கா நான் போய் அவளை திட்டிட்டு வரவா அதற்கு தினம் நீ சொல்வதை அவள் ஏத்துக்க மாட்டாள் விடு உன் வேலையை  பாரு என சொல்கிறார்.

அதனைத் தொடர்ந்து ஐசுவை  பார்க்க அவரின் சித்தி வருகிறார் அப்போது ஐசு விடம் என்ன youtube சேனல் எல்லாம் வச்சிருக்கியாமே என கேட்கிறார். ஆமாம் என சொல்லி வயிற்றை தடவுகிறார். என்ன ஆச்சு என சித்தி கேட்க நான் டான்ஸ் ஆடும் போது கீழே விழுந்து விட்டேன் எனக்கு வயிறு வலிக்குது என கூறுகிறார்.

ஏன் நீ மாசமா இருக்குறத மறந்துட்டியா என திட்டிவிட்டு சுடுதண்ணி வைத்துக் கொடுக்கிறார். அதை குடித்துவிட்டு மீண்டும் வயிற்று வலி  தாங்க முடியவில்லை என துடிக்கிறார். உடனே அவளது  சித்தி கண்ணனுக்கு போன் பண்ணு எனக் கூறுகிறார்  கண்ணனிடம் சொன்னால் அவன் பயப்படுவான் என ஐசு கூறுகிறாள்.  அதற்கு சித்தி  அவன்கிட்ட மறைக்கவா முடியும் சொல்லு வேற வழி இல்லன்னு கூறுகிறார். உடனே ஐசு கண்ணனுக்கு போன் செய்து எனக்கு வயிறு வலிக்குது நீ உடனே வா என கண்ணனிடம் பேசுகிறாள்.

கண்ணனும் பதறி அடித்து வரும்போதே ஆட்டோவையும்  கூப்பிட்டு வருகிறார். மருத்துவமனைக்கு சென்றதும் டாக்டரிடம் இவள் கீழே விழுந்து விட்டால் ஐந்து மாதம் ஆகிறது என சொல்கிறார். உடனே டாக்டர் அவளை செக் பண்ணி விட்டு ஸ்கேன் எடுக்க வேண்டும் என கூறுகிறார். கண்ணன் ஸ்கேனுக்கு பணம் கட்டிவிட்டு வருகிறார்.

மீண்டும் சிறிது நேரத்தில் மெடிசன் வாங்க வேண்டும் என நர்ஸ் கூறுகிறார். மெடிசன் வாங்க கண்ணன் மெடிக்கலுக்கு செல்கிறார் அங்கு அவரது கார்டு டிக்லைன் என வருகிறது. உடனே கண்ணன் அப்படி என்றால் என்ன எனக் கேட்கிறார். அதற்கு அவர் உங்கள் கார்டில் பேலன்ஸ் இல்லை என கூறுகிறார். மேலும் கண்ணன் இது கிரெடிட் கார்டாச்சே என சொல்கிறார் இருந்தாலும் அதோட பேலன்ஸ் முடிந்து விட்டது என மெடிக்கலில் சொல்லி விடுகின்றனர்.

மெடிசன் வாங்க காசு இல்லாமல் வெளியே வந்து ஐசுவின் சித்தியிடம்  காசு இருக்கா என கேட்கிறார். அதற்கு அவங்க நானே உங்கள சும்மா பார்க்கலாம்னு வந்தேன் காசு எதுவும் எடுத்துட்டு வரல இப்படி நடக்கும்னு எனக்கு தெரியுமா எனக்கு தாகமா இருக்கு நான் தண்ணி குடிக்க போறேன் என்று சொல்லிவிட்டு  போய்விடுகிறார்.

கண்ணன் என்ன செய்வது என்று தெரியாமல் அழுது கொண்டே  நிற்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Leave a Comment