புருஷன் சம்பளத்தை கேட்ட தங்கமயில்.. சரவணன் என்ன செய்தார் தெரியுமா.. கதிர் மீது காதலில் விழுந்த ராஜி..

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது தங்கமயில் கதிர் தம்பி ராஜிக்கு புடவை வாங்கி கொடுத்துள்ளார் என கூறி சந்தோஷப்படுகிறார் உடனே சரவணன் பரவாயில்ல திடுதிப்புன்னு கல்யாணம் பண்ணிட்டான் எப்படி சமாளிக்க போறான் என்று தெரியவில்லை என்று யோசனையாக இருந்தேன் ஆனா அவன் சந்தோஷமா இருக்கான் என கூறுகிறார் அதே போல் செந்திலையும் பாராட்டி பேசுகிறார்.

உடனே தங்கமயில் ஆமாம் என கூற புருஷன் புடவை வாங்கி கொடுத்து பொண்டாட்டி சந்தோஷப்படுவது எவ்வளவு ஜாலியான விஷயம் என தங்கமயில் கூற, உனக்கு புடவை வேணுமா என சரவணன் கேட்கிறார். உடனே தமிழ் புடவை எல்லாம் வேணாம் அது ஒரு ஜாலியா இருக்கும் என இலை மறை காயாக பேசுகிறார். அதேபோல் மீனா தின்பண்டம் வாங்கி கொடுத்ததை தங்கமயில சரவணன் இடம் பேசிக் கொண்டிருக்க நீ ஏன் அவங்க எது வாங்கிட்டு வந்தா உனக்கு என்ன எதுக்கு அதெல்லாம் பத்தி கேட்ட எனக் கேட்க அவங்க சம்பாதிக்கிறேன் அதனால் வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டாங்க என தங்கமயில் சொல்லி பீல் பண்ணுகிறார்.

அந்த புள்ள அப்படி பேசாதே என சரவணன் கேட்க அப்படி தான் பேசுனாங்க என பேசுகிறார் உடனே அவங்க விஷயத்துல நீ தலையிடாதே உனக்கு ஏன் அந்த வேலை நீ பாட்டுக்கு உன் வேலையை பாரு ஏதாவது கேட்டா செஞ்சு கொடு இல்லையென்றால் விட்டுவிடு என பேசுகிறார் சரவணன். இப்படியே பேசிக் கொண்டிருக்க அடுத்ததாக  சம்பள பணம் உங்களுக்கு எப்பொழுது வரும் என கேட்கிறார் அதற்கு சரவணன் அஞ்சாம் தேதி எனக் கூறுகிறார் யாரிடம் கொடுப்பீர்கள் என கேட்க அப்பாவிடம் எடுத்து கொடுத்து விடுவேன் உங்களுக்கு செலவுக்கு என்ன செய்வீர்கள் என தங்கமயில் கேட்க அப்பாவிடம் கேட்டு வாங்கிக் கொள்வேன் என கூறுகிறார்.

அப்பொழுது தங்கமயில் இனிமேல் இந்த மாசம் சம்பள பணம் என்னிடம் கொடுப்பீங்களா என பேசிக்கொண்டு, நான் அதைப் பார்த்து பார்த்து செலவு பண்ணுவேன், உங்களுக்கு கொஞ்சம், நம்ம எதிர்காலத்திற்கு கொஞ்சம் எடுத்து வைப்பேன் என பேசுகிறார் ஆனால் சரவணன் இதையெல்லாம் காதில் வாங்காமல் தூங்கி விடுகிறார். மற்றொரு பக்கம் செந்தில் மற்றும் மீனா இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கதிர் ராஜியின் காதலைப் பற்றி பேசுகிறார்கள்.

பிடிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க எப்படி வாழ போறாங்கன்னு கவலையா இருந்துச்சு ஆனால் பரவாயில்லை எனக் கூற உடனே செந்தில் என்ன சொல்ற என கேட்கிறார் இல்ல மாமாவுக்கு பிடிக்காமல் கல்யாணம் பண்ணிட்டாங்களே என சொல்லி சமாளிக்கிறார். ராஜி அனுப்பிய மெசேஜ் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது தன்னுடைய அப்பா நினைவு வந்துவிடுகிறது மீனா அதனை ஸ்டேட்டஸில் பார்த்துக் கொண்டிருக்க செந்தில் பார்க்கிறார் என்னாச்சு என கேட்கிறார் அப்பாவுடைய ஐம்பதாவது பிறந்த நாள் என கூறுகிறார்.

நாம போகலாம் நீ நினைச்ச மாதிரியே காஸ்ட்லியான வாட்ச் வாங்கி கொண்டு போகலாம் என கூறுகிறார் சரி அதெல்லாம் விடு வா தூங்கலாம் என லைட் ஆஃப் பண்ணிவிட்டு தூங்குகிறார்கள் மற்றொரு பக்கம் ராஜி கதிரை நினைத்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது கதிருக்கும் ராஜிக்கும் ஃபிலிம்ஸ் போட்டு பார்க்கிறார் லவ் என வருகிறது இதனால் ராஜி சந்தோஷப்படுகிறார்.

அடுத்த நாள் காலையில் மீனா கோலம் போட்டுக் கொண்டிருக்கும் பொழுது ராஜி கதிருக்கு ஏதாவது ஹெல்ப் பண்ண வேண்டும் என கூறுகிறார் உடனே ராஜி நான் ஏதாவது செய்ய வேண்டும் என அழுத்தமாக கூற மீனா டியூஷன் எடுக்குறியா என்பது போல் கேட்கிறார் அதான் பெயிலியர் ஆகிவிட்டது எனக் கூற, இல்ல எனக்கு தெரிஞ்சவங்க வீட்டுல ஹோம் டியூஷன் எடுக்க சொல்றாங்க நீ வேணா ட்ரை பண்ணு என கூறுகிறார் உடனே ராஜியும் ஓகே சொல்லிவிடுகிறார்.

மற்றொரு பக்கம் சரவணன் இடம் தங்கமயில் ஹனிமூன் பற்றி பேச சரவணன் அப்பாவிடம் கேட்க வேண்டும் என கூறுகிறார், எப்படியாவது கேளுங்கள் என தங்கமயில் கூற நேரம் வரும்போது கண்டிப்பாக கேட்கிறேன் என கூறிவிட்டு செல்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.